Tuesday, April 30, 2013

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினையை தெறிக்க நடமாடும் சேவையாம்



Lankamuslim.org
One World One Ummah

யாழ் முஸ்லிம்களின் பிரச்சினையை தெறிக்க                   நடமாடும் சேவையாம்



வடக்கில் இருந்து 1990இல் பயங்கரவாதப் புலிகளால், கொள்ளையிடப்பட்ட பின்னர் கொலைப் பயமுறுத்தலுடன் வெற்றுக் கையினராக விரட்டி அடிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிமகள், தக்க முறையில் நிவாரணம் கொடுக்கப்படாமல், மீள்குடியேற்ற நினைக்கும் எவராயினும் இறை தண்டனைக்கு ஆளாகவே செய்வர். 

அம்முஸ்லிம்கள் சொத்துக்களை, சுகங்களை, வீடுகளை, விளைநிலங்களை, அரிய பெரிய பொக்கிஷங்களை, ஆவணங்களை, தொழில்களை, தொழில் ஸ்தாபனங்களை, கல்வியை, புலமைப் பரிசில்களை, உத்தியோகங்களை, வருவாய்களை, உடல், மன நலத்தைப் போன்ற எத்தனையோ இழப்புக்களைச் சந்தித்துள்ளனர். இது அவர்கள் விரும்பிப் பெற்றுக் கொண்டதல்ல. வேண்டுமென்றே சுமத்தப்பட்ட இனச்சுத்திகரிப்பால் இழைக்கப்பட்ட அநீதி,  இதில் கணிசமான பொறுப்பு அரசுக்கும் உண்டு. 

ஆதலால், அவர்களின் அனைத்து இழப்புகளும் மதிப்பீட்டின் அடிப்படையில் மீள வழங்கப்பட வேண்டும். இன்றேல், அவர்களின் சாபமும், இறைசாபமும் இவ்வநியாயத் துக்குக் காரணமான அனைவரையும் சுற்றிப் பிடிக்கவே செய்யும். புலிகள் சந்தித்த அழிவு நினைகூரப்பட வேண்டியதே!

No comments: