Monday, April 22, 2013

Commented by nizamhm1944 on: Voice Of Mannar மதவாச்சி – மடு வரையான ரயில் பாதை அமைப்பு பணி பூர்த்தியடையும் நிலையில்



Commented by nizamhm1944 on:

Voice Of Mannar

மதவாச்சி – மடு வரையான ரயில் பாதை அமைப்பு பணி பூர்த்தியடையும் நிலையில்



இத்தரைவழிப் போக்குவரத்து வசதியான தொடரூர்ந்துச் சேவை முழுமை யாகப் பூர்த்தியடையும் போது மன்னார் மாவடட மக்கள் மட்டுமல்ல, இலங்கை மக்களுட்பட இந்திய மக்கள் கூட பயனடைவர். நிறுத்தப்பட்ட தலைமன்னார்- இராமேஸ்வரம் படகுச் சேவை (Ferry Service) கூட வழமைக்குத் திரும்பிவிடும்.அவர்களது நாளாந்த வாழ்வு இலகுபடுத்தப் படும். போக்கு வரத்துச் செலவுக்காகத் தற்போது செலவிடப்படும் அதிகளவு பணம் மீதப்படும். காலவிரயம், தேவையற்ற கெடுபிடிகள் நீக்கப்படும். மக்கள் வாழ்வு இயல்பு நிலைக்குத் திரும்பும். 

புலிகளால் அழிக்கப்பட்ட  மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கான பொது வசதிகளில் இதுவும் ஒன்று. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின்னராவது இவ்வரப்பிரசாதம் மக்களுக்குக் கிடைப்பதற்காக செயல்பட்ட அரசும், சம்பந்தப்பட்டவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்களே! 

No comments: