Thursday, November 28, 2013

World's Fastest Back Bend Walk -- Guinness World Records 2014



Its amazing!

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

Commented on  : http://tinyurl.com/o8w32ye

Lankamuslim.org

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

அண்மைக் காலமாக தேரர்கள் சிலரின் அடாவடித்தனம் அத்துமீறியுள்ளமைக்கான காரணம், சட்டம் தூங்கிக் கொண்டு இருப்பதனாலா என்ற நியாயமான கேள்வி மக்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றது.  இது ஓர் அராஜக நாடு, சட்டமும் ஒழுங்கும் நிலவாத காட்டுமிராண்டிகள் காலநிலை கொண்ட நாடு என்ற பட்டியலில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேர்தல்களின் தலைவிதி தற்போது வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் களநிலவரம் உள்ளங்கை செல்லிக்கனி அல்ல வெள்ளிடைமலை ஆகியுள்ளது.

நடந்த தேர்தல் முறையீனங்கள் பற்றிய செய்திகள், கருத்துப்பதிவுகளை ப் பார்க்கும் போது, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் முஸ்லிம்களுடையது என்பதும், அவை புத்தளம் நகர்ப் பகுதிக்கு உரியது என்பதும். 40 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட புத்தளத்தில் ஒரேயொரு முஸலிம் வேட்பாளரே தேர்வாகியுள்ளார் என்பதும், அவர்களால் ஆளும் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸக்கும் வாக்களிக்கப்பட்டவை என்பதைப் பார்க்கும் போது, கண்டைடுக்கப்பட்ட வாக்குச் சீட்’டுக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்பட்டதல்ல, திட்டமிட்ட ஒரு இனத்திற்கு எதிராக நடத்திமுடிக்கப்பட்ட மோசடி என்பதை சிறு பிள்ளைகூட அறிந்து கொள்ளும்.

இதுவும் அடிப்படை மனழத உரிமை மீறலே! சமவுரிமை என்ற பண்பு, ஒரு சமூகத்தால் அனுபிக்கப்படும் அதே நேரத்தில் இன்னொரு சமூகம் சார்ந்தவர்களுக்குத் திட்டமிடப்பட்டு, மறைமுகமாக மறுக்கப்பட்டுளள தன்மையைக் கொண்டுள்ளது. இது யார் குற்றம் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஆயினும் குற்றமிழைக்கப்பட்டுள்ளது, அநீதி அரங்கேறி உள்ளது என்பவை நிரூபணமாகியுள்ள ஆதாரங்களுடன் கூடிய, விசாரணை வேண்டப்படாத, மறுதலிக்கப்பட முடியாத உணமையே!!  The fraud it self is SELF EXPLANATORY

ஆதலின், சம்பந்தப்பட்டவர்கள், இது விடயத்தில் சரியான பதில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், யாப்பின் மானத்தைக் காப்ப‌துடன், யாப்பில் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை, அந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று அனுபவிக்க வகை செய்ய வேண்டும்.   இன்றேல், அடுத்த பங்குனியில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு நிகழ்வில், இந்த மனித உரிமை மீறல் பிரச்சினையும் குறிப்பிடக்கூ‌டிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்!

வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஒழுங்கீனங்கள் இன்னும் எத்தனையோ! உள்ளுர், வெளியூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இது பற்றி என்ன கூறப் போகின்றார்களா! இவ்வாறான அநியாயங்கள் அவர்கள் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டனவா!

வாககுச் சீட்டும் எண்ணும் நிலையத்தில் இது நடைபெற்றிருந்தால், அந்நிலையத்திற்குப் பொறுப்பான உயரதகாரி, தனது (ஜேர்னலில்) நடப்புக் குறிப்பில் எவ்வாறு தன்னால் பெறப்பட்ட வாக்குகள்  அனைத்தும் எண்ணப்பட்டது என்பதையும், அவைகள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்ட நிலையில் திருப்பிக் கையளிக்கப்படுகின்றன அல்லது பாதுகாப்பில் வைஎன்க்கப்படுகின்றனஎன்பதைபதையும் பதிந்திருப்பார்! ஆக, அந்த நடப்புக்குறிப்பு உண்மைகளுக்குப் புறம்பானது என்பதை, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நிரூபிக்கவில்லையா! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பதை தேர்தல் ஆணையாளர் அறிந்து கொள்ள வேணடும்!  

Tuesday, November 19, 2013

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

Commented by nizamhm1944 on:  BERU NEWS -   http://tinyurl.com/m3td86j

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //

மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் ‌கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனி உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

//  அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //

தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது.  அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,

அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!

அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.  

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

Commented by nizamhm1944 on:  BERU NEWS -   http://tinyurl.com/m3td86j

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //

மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் ‌கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனித  உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

//  அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //

தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது.  அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,

அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!

அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.  

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு

Commented on  தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு  Voice of Mannar -  http://tinyurl.com/omd9eqo

இதனைத் தடுத்து நிறுத்துவதாயின், பல் வேறு நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதிற் பிரதானமானதாக் கொள்ளக் கூடியது, பாடசாலை அபிவிருத்திச் சபை ( SCHOOL DEVELOPMENT SOCIETY) யின் நிதிக்கட்டுப்பாடு,

வருட ஆரம்பத்திலும், மாணவர் அனுமதி நடை பெறும் காலங்களிலும் வந்து குவியும் பணம், எப்படி வந்தது என்பதைக் கண்டறியவே தேவையில்லை.

அடுத்தது, பெற்றாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. எப்படியாவது நல்ல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில், அவர்களே களவாக இலஞ்சம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தடுப்பதாயின், மிக இலகுவாகச் செய்ய வேண்டியவை.

மாணாக்கர் வதியும் இடங்களிலுள்ள பாடசாலைகளிலேயே அனுமதி  வழங்க வேண்டும்.

குறித்த பாடசாலை்யில் இடமில்லாத நிலை ஏற்படின், அதற்கடுத்ததாகவுள்ள பாடசாலைகளில் அனுமதி வழங்கல்.

பெற்றார் தொழில் செய்யும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் அனுமதி பெறல்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்துவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே சிறந்த பாடசாலைகளில் அனுமதி வழஙகல்.  மாவட்டத்தில் ஒரு பாடசாலையாவது, மிகச் சிறந்த தரத்தை கொண்டதாக அமைவது உறுதி செய்யப்படல்.

இவற்றுக்குப் புறநடையாகவுள்ள சந்தர்ப்பங்களின் போது அனுமதிகள் வழங்க விஷேட திட்டங்கள் உருவாக்கப்படலாம்.

மேலாகப் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புக்களுடன், ஆசிரியர்களின், பொருளாதார மேம்பாட்டையும கருத்திலிருத்த வேண்டும்.

சிறந்த பெறுபேறுகளை மாணவர் அடைவதற்குக் காரணமான பாட ஆசிரியர்களை, வலய மட்டத்திலாவது தெரிவு  செய்து, சிறந்த ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.  ஆசிரிய தரத்திலேயே சிறப்பான மேலதிகக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

சிறந்த ஆசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா போன்றவை,  அவர்களின் குடுமபங்களுடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலா வசதிகள் செய்யப்படல் வேண்டும்.

ரயில் பயணச் சீட்டுக்களைப் பாவியாதோருக்கு, அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படல் வேண்டும.

அவர்களுக்கு உரிய லீவுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வ‌ிஷேட கொடுப்பனவுகள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.

அவர்தம் தரத்தை மேம்படுத்துவதற்கான இலகு கடன் வசதிகள் மூலம், வீடு, வாகனம் போன்ற இன்னோரன்னவை பெற்றுக் கொள்ள உதவி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.

மற்றும் வைத்திய வசதிகள் போன்றவை

புலமைப் பரிசிற் பரீட்சைக்குக்கூட நல்ல புள்ளிகளைப் பாடசாலை மட்ட்த்தில் பெறுபவர்களை மட்டுமே அனுமதித்தல். இதனால்,  திணைக்களத்திற்கு ஏற்படும் செலவு குறைக்கப்படும். அப்பணத்தை பாடசாலை அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்தலாம். அத்தோடு, இது பாடசாலையின் கல்வித் தரத்தை அிறிந்து கொளளும் ஒரு சாதனமாகவும். பயன்படும்.  ஆசிரியர்களும் பொதுவாகக் கல்வித் தரத்த‌ை மேம்படுத்தும் மனநிலை உருவாகும்.  புலமைப் பரிசிலுக்காக மாணவர்களை ஆயத்தப்படும் அவல நிலை மாறும்.

இவ்வகையான மாற்றங்கள் ஏற்படுமாயின், 90 வீதத்திற்கும் அதிகமான பெற்றார் கல்விக்காக நல்ல பாடசாலை ‌தேடுவது,  அதனை வழங்க இலஞ்சம் பெறப்படுவதும் நீங்கும்.














Thursday, November 14, 2013

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா

Commented by nizamhm1944 : http://tinyurl.com/qfxv2o2

Lankamuslim.org

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா  


தாம் ஆமதுருவல்லவா, நாங்கள் பொய் சொல்லக் கூடாதல்லவா! உண்மையைத்தானே பேச வேண்டும் என்ற கலகொட தேரரின் பேச்சு ஒன்றே போதும் அவரை அளவிட !  

ஆனால், முன்னொருபோது, பகிரங்க மேடையில், முஸ்லிம்களின் புனித குர்ஆனில், இஸ்லாமல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கும்போது அதில் மூன்று முறை துப்பி எச்சில் படுத்திவிட்டே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படியே முஸலிம் ஹோட்டல்களில் உணவவில் எச்சில் துக்கிய பின்னரே பரிமாறப்படுவதாகவும், கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்.  மேலும் பள்ளிவாசல்கள் ஆயுதக் கிடங்குகளாகவும், பங்கர்களாகவும் உள்ளன என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

அ ப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், புத்த தர்மத்தை மீறிய பொய்யர் எனப் பெயர்சூட்டப்பட்டு, அவரே தனது காவியுடையைக் களைய வேண்டும். அதுவே, அவர் தனது சமயத்திற்குச் செய்யும் மிகச் சிறந்த மதிப்பு, பாதுகாப்பு ஆகு்ம். 

பொய்யரும், மது போதையில் வாகனமோட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டு, குற்றப் பணமும் கட்டிய இந்த குற்றவாளி,  காவியுடை தரித்து, தான்தான் புத்த மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டவன் எனக் கூறுவது புத்தர்களுக்கே களங்கத்தையும், அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவமதாகும்.  

அவரை அரசும் சுதந்திரமாக இவற்றைச் செய்வதற்கு இடங் கொடுப்பது, புத்த தர்மத்துக்கும், இந்நாட்டின் பாரம்பரியத்துக்கும் கேடு விளைவிப்பதாகும்.  வரலற்றில் கறையை ஏற்படுத்திய குற்றமுமாகும்.  

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள

Commented by nizamhm1944 : http://tinyurl.com/nb3fqz4

Lankamuslim.org

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள


நிம்மதியி்ல்லாத சூழலை, வேண்டுமாயின் முகங் கொடுக்கலாம்.  ஆனால், அரச உயர்மட்டங்களின் மறைமுக ஆதரவுகளுடன் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படும், மதவிரோதச் செயற்பாடுகளைத்தான் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

இது பயங்கரவாதத்தைத் தாண்‌டிய பாதக நிலை. இவ்வகை அச்சுறுத்தலுடன் வாழ்வதென்பதுவே முஸ்லிம்களைத் தமது இருப்பு சம்பந்தமாக மீளாய்வு செயதுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.

முஸ்லிம்கள்  பொறுமை காப்பது என்பதை அவர்களின் இயலாமையாக அரசு கருதுமானால், அது அரசு செய்யும் மிகப் பெரிய முடடாள்தனம் மட்டுமல்ல,  சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கும் நிலையை ஒத்ததாகிவிடும்.  அத்தோடு தேசிய நலனைப் புறந்தள்ளியதுமாகும்.

முஸ்லிம்களது பொறுமை, பெரும்பான்மை புத்த சிங்கள மக்கள் இவற்றுக்கு உடந்தையல்ல, அதனால் தமது எதிர்ப்புகள் எந்த வகையிலும் பௌத்த சிங்கள மக்களை மனம் வருந்தச் செய்திடக் கூடாது என்ற  காரணத்திற்காகவும், தேசிய நலனைக் கொண்டதுமான உயர்வான நோக்கத்தை அடியொற்றியதாகவும், தமது மார்க்க நெறிமுறைகளைத் தழுவியதாகவுமே இருக்கின்றது என்ற உண்மையை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.  

Wednesday, November 13, 2013

Mannar

http://www.youtube.com/v/2HnC-MaBz3s?autohide=1&version=3&autoplay=1&attribution_tag=9WO-y_i1m2fhPXlVz-Tihg&feature=share&showinfo=1&autohide=1

இம்மாதிரியான செயற்பாடுகள் தீர்க்கதரிசனமற்றவை.  இவற்றால், நடந்து முடிந்த அனர்த்தங்கள் தங்களால் செய்து முடிக்கப்பட்டவை என்பதைத் தாங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தவிர எந்த நன்மையையும் அரசு அடையப் போவதில்லை.  வந்தவர்களின் வேலையை இலகுபடுத்தி விட்டார்கள் !

இதற்கு உறுதுணையாயிருந்த அனைவரும், இந்த நாட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்‌டிருக்கும் கேவலங்களுக்கும், அவமானங்களுக்கும் பொறுப்பாளர்கள் என்பதை வரலற்றில் பதிவாக்கி உள்ளனர்.

மண்டூகங்கள் ! நுணலும் தன் வாயாலே கெடும் என்பது இதுதானோ!

Monday, November 11, 2013

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

Commented by nizamhm on :  http://tinyurl.com/poqpgxg

BERU News

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

 //  மூன்று தசாப்த காலமாக எமது நாட்டை பீடித்திருந்த பயங்கரவாம் எமது இளைஞர் சமூகத்திற்கு மிகப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாதிகளால் பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிறுவர் போராளியை அல்லது ஒரு இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த சிறுவர்களும் இளைஞர்களும் தங்களது சுந்தர இளைஞர் பருவத்தையும் குழந்தைப் பருவத்தையும் இழந்துவிட்டனர். இந்த நீண்டகாலப் பகுதியில் எமது இளைஞர்கள் மிகப் பெரும்பாலான பெறுமதியான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டனர். //

மாண்புமிகு ஜனாதிபதி மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். அவரது சிந்தனைகளும் நன்றாகவே தொழிற்படுகின்றன.   யுத்தத்துள் நுழைக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்வை, பொன்னான இளமைக் காலத்தை சீரழிந்துள்ளனர். அவர்கள் பல் வேறு சந்தர்ப்பங்களை, நலன்களை, பருவத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை இழந்துள்ளமை, அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

அது போன்று, அல்லது அதைவிட மோசமாக, காரணமற்று வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்களும், அத்தனை வரப்பிரசாதங்களை மட்டுமல்ல, சாதாரணமாக சிறுவர்கள் அநுபவிக்க வேண்டிய ஆகக் குறைந்தவற்றை, கல்வி, சந்தோஷம், சுதந்திரம் உட்பட எல்லாம் இழந்து அகதிகள் என்ற அவமானத்துடன், ஒதுக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டவர்களாக, வறுமை, பிணிகளின் வாழ்விடங்களாக மாறி, அடிப்படை மனித உரிமை என்றால் என்னவென்றறியாத நிலையில் அவமே கழித்துள்ளனர்.

என்ன சாபக்கேடோ தெரியவில்லை, அல்லல் உறற அச்சிறுவர்களின் பரிதாப நிலை மட்டும்  மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களின் கண்ணில் கூட படாமலும், கருத்தை ஈர்க்காமலும் உள்ளது என்று அச்சிறுவர்கள் கேட்பது போன்று எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு என்ன பதிலை மாண்பு மிகு ஜனாதிபதி கூறப் போகின்றாரோ! பொறுத்திருந்து பார்ப்போம்.

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்: பிரபா கணேசன்

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/mc26z53

Lankamuslim.org
One World One Ummah

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்:   பிரபா கணேசன்


கோயில் ஒன்று உடைக்கப்படாமல்  இருப்பதற்கு, அன்றி வேறோரிடம்  பெறுவதற்கு அப்பகுதி தேரரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற தர்க்கம் புதுமையாக இருக்கின்றது. ஆனால் நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலவவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தேரரிடம் போய் சமரசமாக பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம் என நினைத்தது, ஓர் நல்லெண்ணமாக இருக்கலாம். ஆனால், அதுவே ஒரு பிழையான, மனித சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்பதை மறந்தமை ஏனோ!

பிழையான வழிகாட்டல்களே ஆட்சியாளரினால் கூட ஏற்படுததப்படுகின்றது. இதற்கு முன்னர், முஸ்லிம்களின் பள்ளி உடைப்புகளின் போதும், ஹலால் சான்றிதழ் விவகாரத்தின் போதும் அரசால், அன்றி நீதித் துறையினரால் தீர்த்து வைக்கபட வேண்டிய விடயம் புத்த தேரர்களிடம் உத்தரவு பெறுமளவிற்கு தடுமாற்றத்தையும், தடமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலை நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்வுக்கு சில தேரர்களின் ஆசி பெற வேண்டும் என்ற அபாக்ய, ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

தேரர்கள்தான் சிறுபான்மையினரின் இருப்பு, வணக்க வழிபாடுகள், வணக்க ஸ்தலம், உணவு பற்றி எல்லாம் முடிவு எடுப்பதாயின், இந்நாட்டிற்கு ஏன் ஜனாதிபதி,  பாராளுமன்றம், அமைச்சரவை, திணைக்களங்கள், பொலிஸார், நீதிமன்றங்கள், மேலாக யாப்பு போன்றவை ! 

Sunday, November 10, 2013

Second To None Nutrition

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/lchh8l4

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

உரிமைகள் உணர்வுபூர்வமான பேச்சுவார்த்தைகளாலும், உளப்பூர்வமான விட்டுக் கொடு்ப்புக்களோடும், பரஸ்பர புரிந்துணர்வோடும் பெறப்பட வேண்டும். அதுவே நிலையானதாகவும், விருப்பத்தோடும், மனநிறைவோடும். திருப்தியுடனும், எரிச்சலையும், வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தாது தரப்படுவதாக  இருக்கும்.

அல்லாமல் ‌மேலே கூறப்பட்டவாறு ‌பெறப்படுபவை நிலைக்கவோ, நீண்ட காலம் செயற்படுத்தப்படும் நடவடிக்கையாகவோ அமையப்  போவதுமில்லை. மேலும், இந்நிலை, எதிர்காலத்தில் பேரின மக்களை வேறுவிதமான முடிவுகளை எடுக்கவும். சிறுபான்மையினரின் உதவி, ஆட்சி ஒன்றை அமைப்பதற்குத் தேவையற்றது என்ற நிலைமையை உருவாக்கும் போது எதிர்காலம் இருண்டுவிடும்.

உரிமைகள் என்பது உணர வைக்கப்பட்டு, அவை அனைவரும் அனுபவிக்க வேண்டியதே என்ற சிந்தனையை உருவாக்கும் விதத்தில் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்துக் கொள்ள வேணடும். பேரம் பேசும் அரசியலுக்கு குரோதத்தை ஏற்படுத்துவதும். நீண்ட கால்த்தில் நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்வதாகவுமே இருக்கும்.

முஸ்லிம்கள் தற்போது அனுபவித்து வரும் தொல்லைகள் ஏற்படக் காரணமானவற்றில் பிரதானமான ஒன்றாக முகா வின் பேரம் பேசுதலும் ஒன்று என்பதைச் சொல்லி வைக்கிககிறேன். 

Saturday, November 9, 2013

பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை!

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/nv85d8c

BERU NEWS

பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை!


// ஒரு காலத்தில், கொழும்பைப் போல சிங்கப்பூரையும் மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எழில் கொஞ்சும் நாடாக விளங்கிய எமது நாட்டை, மூன்று தசாப்த காலமாக ஆட்கொண்டிருந்த அந்தக் கொடிய நாசகார யுத்தமானது சின்னாபின்னமாக்கி, நிம்மதி என்றால் என்ன என்று கேட்கக்கூடியளவு மக்கள் கதிகலங்கிப்போய் இருந்தார்கள்  //

மேற்கண்ட பந்தியில் மிகச் சிறந்த உண்மை ஒன்று பரிணமித்து நிற்கின்றது. அது ஒரு எச்சரிக்கை, அச்சமூட்டல் என்றும் கூறலாம்.  சிங்கப்பூர் கொழும்பை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு அக்கால கட்டத்தில் அவ்வளவு சிறந்த தரத்திலேயே இந்நாடு இருந்துள்ளது.  

அதன் பின்னர் இங்கு நடைபெற்ற ஒடுக்கு முறைகளும், அடக்கு முறைகளும், அடாவடித்தனங்களும், பிரஜைகளுள்  ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுமே,  இந்நாடு 30 வருட கொடூர யுத்தமொன்றுக்குள் இவ்வழகுத் திருநதாட்டை நுழைய வைத்து அலங்கோலத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் கட்டுரையாளர் ஏற்பாராயின்,  அபிவிருத்திக்கு முன்னர் செய்யப்பட வேண்டிய மற்றொரு முக்கிய பிரச்சினை தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிரு்ப்பார்.

அதே பிரச்சினை தீ்ர்க்ப்படாமலே மேலும், பரந்து விரிந்து எங்கும் தனது தீச்சுவாலை என்ற நாக்கால் மற்றைய இனங்களையும் நக்கி, நசுக்கி அழிக்கும் வகையில், கட்டுப்படுத்துவாரோ, மட்டுப்படுத்துவாரோ இன்றி, தட்டிக்கொடுக்கும், தடவிக் கொடுக்கும் நிலையுடன் பரவிக் கொண்டிருக்கின்றது. 

முப்பது ஆண்டு கோரத்துக்குக் காரணம் கண்டறியப்பட்டும், தீர்த்து வைக்கப்படாமல் செய்யப்படும் அனைத்தும் தடப்புரள்கை, அல்லது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய நிலையே ! அன்றி தந்திரோபாய மடைமாற்றலே !அதனால் எதன் காரணமாக முன்னைய அழிவுகள் ஏற்பட்டனவோ அக்காரணம் களையாமல் செய்யப்படும் அபிவிருத்திகள் அழிவுகளை எதிர் நோக்கியவையாகவே இருக்கும்.  

இதுவே, எந்த சிங்கப்பூர் பிரதமர் இந்நாடை முன்மாதிரியாகக் கொள்ள நினைத்தாரோ, அவரே இன்று சிங்கப்பூர் பிரதமராக இல்லாத நிலையிலும், அவரது மகனின் ஆட்சி நடைபெறும் இக்காலத்தில், இல்ங்கையின் போக்கு பற்றி அதிபரைப் பற்றிக் கடுமையான விமர்சனம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.  

ஆதலின் பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டுச் செயற்படுத்தப்படும் எதுவாயினும் அது நாட்டு நலனைக் கொண்டது என்று எவராலும் கூறமுடியாது.  விரயம் என்ற நிலையை எட்டிவிட நேரமெடுக்காது!

Sunday, November 3, 2013

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/jvpjofv

Beru News

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

//  இலங்கையில் இம்மாநாடு நடைபெறுவதன் மூலம் தப்பான அபிப்பிராயங்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கையின் சரியான களநிலவரங்களை கண்டறியக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றியும் இலங்கை பற்றியும் தப்பிப்பிராயங்கொண்ட தலைவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்கான களமாகவும் இம்மாநாடு அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.//

இந்நாட்டைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருப்பதனை மாற்றும் கைங்கரியங்களை அரச செய்ய வேண்டும்.  அது அபிவிருத்திகள் மட்டுமல்ல. 

யுத்தம் முடிந்தது என்னவோ உண்மைதான்! அதனை யாரும் மறுப்பதற்கில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கறையும் இன்னும் தீர்ந்தபாடில்லை.  இந்நிலையில், அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவது இங்குள்ள பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்வதே! 

1990இல் புலிகளால் வடக்கிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்க்ள் நிலை தேய்முகத்திலேயே இருக்கின்றது!

ஆயுதப் போராட்டம் எதனால் தொடங்கியதோ, அந்தப் பிரச்சினை இன்னும் தீர்வைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, மேலும், இறுக்கமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது ! 

அபிவிருத்தி என்ற பெயரில் இனச்சுத்திகரிப்பு ஓர் புறம். புனித பிரதேசம் என்ற பெயரில் மாற்றுமத வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுகின்றது 

மேலும், தெற்கில் சிறுபான்மையினருக்கு தமது மதக் கடமைகளைச் செய்வதற்கும், பள்ளிவாசல், தேவாலயம், கோயில்களை வைத்திருப்பதற்குக் கூட இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Saturday, November 2, 2013

சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/p6krp3q

BERU News


சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்!


கருக்கலைப்பிற்கான காரணங்கள் பல. அவற்றில் முறையற்ற தொடர்புகளால் ஏற்பட்ட கரு‌வை அவமானத்திற்கு அஞ்சிக் கலைத்தல், பாலியல் பலாத்காரத்தால் உருவான கருவைக் கலைத்தல். சிறுவர்களின் தவறான நடத்தைகளால், அறியாமையால் உருவான கருவைக் கலைத்தல், விப்ச்சாரத் தொழிலால் ஏற்பட்ட கருவைக் கலைத்தல், எச் ஐவி போன்ற நோயுள்ளவர்கள் கருவில் உருவாகும் குழந்தையின் நலம் கருதிக் கலைத்தல்,  குறைபாடானான கரு உருவாகியிருந்ததை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிந்து அக்கருவைக் கலைத்தல், வறுமை காரணமாகக் குழந்தைகள் போதுமென்ற நிலையில் கலைத்தல்,  திட்டமிட்ட குடும்ப வாழ்க்கை என்ற அரசின்  அறிவுறுத்தல்களுக் கமைய கருவைக் கலைத்ல்,அந்தஸ்தைப் பேணுவதற்காகக் கருவைக் கலைத்தல், தமது ஆடம்பர சமூக வாழ்வுக்குக் குழந்தைகள் பிறப்பு தடையாகவிருப்பதாக நினைந்து கலைத்தல். தாய்மாரின் நலன் கருதிக் கருவைக்  கலைத்தல் என்று பலவாறான காரணங்களுடன் கருக்கலைப்பு நடைபெறுகிறது.   இதற்காக பல வைத்தியர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் கருக் கலைப்பிறகு உதவி வருவதும் ஒரு புதிய செய்தியல்ல. 

எத்தனை   குழந்தைகள் பிறக்க வேண்டுமோ அத்தனை குழந்தைகள் பிறந்தே தீரும். அதனைத் தடுத்திட எவரலும் முடியாது. அது போன்றே, அழிய வேண்டியவையும் அழிந்தே தீரும். இது இறை நியதி. இதனை மாற்றி அமைக்க எவராலும் முடியாது மட்டுமல்ல. அதனை மாற்ற முனைபவர்கள் இறை சிந்தனையோ, பயபக்தியோ அற்ற புல்லுருவிகள்.  இப்புல்லுருவிகள் தாம் இன்று சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.  

சிங்கள சமூகம் அழிந்து விடும் என ஆரூடம் கூறுபவர் இந்த நாட்டின் பௌத்தர்களின் மதிப்புக்களைப் பெற்ற, தகுதி படைத்த, தம்மத்தை அனுஷ்டிக்கும், மகா சங்க நாயக்க தேரர்கள் அல்ல, மாறாக, நீதிமன்றால் குற்றவாளி எனக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டப்பணம் கட்டிவர் என்பதே இந்த தேரரின் கருத்தை அறிந்து கொள்ள உதவும்.  

மேலும், அண்மையில், பல மகா நாயக்க தேரர் இருப்பது பிழை எனவும், அத்தனையையும் ஒன்றாக்கி ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற தனது முட்டாள்தனமான கருத்தை தலதாவின் முன் நின்று கூச்சலிட்டவர்தான் இந்த தறிகெட்ட தேரர்.  அவரைத் தறிகெட்ட எனக் கூறுவதற்கான காரணம் பல இருப்பினும், மகா நாயக்க தேரர்கள் பற்றிய கருத்தை தெருவில் நின்று கூறியதையே முதன்மைக் காரணமாகக் கொள்ளலாம். அடுத்து அவர் பொய்யர், இட்டுக் கட்டும் இழிசிந்தனையாளர். புத்த பெருமான் கூறியபடி, மற்ற மதத்தை நிந்நிப்பவர்கள் தமது மதத்தையே நிந்திக்கின்றனர் என்ற கோட்பாட்டின்படி, புத்த தர்மத்தை நிந்திப்பவர்.  

புத்த பகவான் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, அவர்களது வாழ்விற்கு வகை செய்துவிட்டே அன்று துறவறம் பூண்டார், தேரர்கள் திருமணம் செய்யாததன் காரணமாகவே பௌத்த இனம் குறைந்து வருகிறது. அவர்களும் தாங்கள் மணமுடிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை நாளை தெருவில் நின்று முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தோடு, இன்று ‌ஐந்து,   ஆறு வயதுச் சிறுவர்கள்கூட துறவிற்குள் உள்வாங்கப்படுகின்றமையும் பௌத்தர்களின் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணங்களே எனக் கூறினும் ஆச்சரியப்படத் தேவையில்லை!