Sunday, November 10, 2013

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/lchh8l4

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

உரிமைகள் உணர்வுபூர்வமான பேச்சுவார்த்தைகளாலும், உளப்பூர்வமான விட்டுக் கொடு்ப்புக்களோடும், பரஸ்பர புரிந்துணர்வோடும் பெறப்பட வேண்டும். அதுவே நிலையானதாகவும், விருப்பத்தோடும், மனநிறைவோடும். திருப்தியுடனும், எரிச்சலையும், வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தாது தரப்படுவதாக  இருக்கும்.

அல்லாமல் ‌மேலே கூறப்பட்டவாறு ‌பெறப்படுபவை நிலைக்கவோ, நீண்ட காலம் செயற்படுத்தப்படும் நடவடிக்கையாகவோ அமையப்  போவதுமில்லை. மேலும், இந்நிலை, எதிர்காலத்தில் பேரின மக்களை வேறுவிதமான முடிவுகளை எடுக்கவும். சிறுபான்மையினரின் உதவி, ஆட்சி ஒன்றை அமைப்பதற்குத் தேவையற்றது என்ற நிலைமையை உருவாக்கும் போது எதிர்காலம் இருண்டுவிடும்.

உரிமைகள் என்பது உணர வைக்கப்பட்டு, அவை அனைவரும் அனுபவிக்க வேண்டியதே என்ற சிந்தனையை உருவாக்கும் விதத்தில் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்துக் கொள்ள வேணடும். பேரம் பேசும் அரசியலுக்கு குரோதத்தை ஏற்படுத்துவதும். நீண்ட கால்த்தில் நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்வதாகவுமே இருக்கும்.

முஸ்லிம்கள் தற்போது அனுபவித்து வரும் தொல்லைகள் ஏற்படக் காரணமானவற்றில் பிரதானமான ஒன்றாக முகா வின் பேரம் பேசுதலும் ஒன்று என்பதைச் சொல்லி வைக்கிககிறேன். 

No comments: