Thursday, November 14, 2013

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா

Commented by nizamhm1944 : http://tinyurl.com/qfxv2o2

Lankamuslim.org

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா  


தாம் ஆமதுருவல்லவா, நாங்கள் பொய் சொல்லக் கூடாதல்லவா! உண்மையைத்தானே பேச வேண்டும் என்ற கலகொட தேரரின் பேச்சு ஒன்றே போதும் அவரை அளவிட !  

ஆனால், முன்னொருபோது, பகிரங்க மேடையில், முஸ்லிம்களின் புனித குர்ஆனில், இஸ்லாமல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கும்போது அதில் மூன்று முறை துப்பி எச்சில் படுத்திவிட்டே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படியே முஸலிம் ஹோட்டல்களில் உணவவில் எச்சில் துக்கிய பின்னரே பரிமாறப்படுவதாகவும், கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்.  மேலும் பள்ளிவாசல்கள் ஆயுதக் கிடங்குகளாகவும், பங்கர்களாகவும் உள்ளன என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

அ ப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், புத்த தர்மத்தை மீறிய பொய்யர் எனப் பெயர்சூட்டப்பட்டு, அவரே தனது காவியுடையைக் களைய வேண்டும். அதுவே, அவர் தனது சமயத்திற்குச் செய்யும் மிகச் சிறந்த மதிப்பு, பாதுகாப்பு ஆகு்ம். 

பொய்யரும், மது போதையில் வாகனமோட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டு, குற்றப் பணமும் கட்டிய இந்த குற்றவாளி,  காவியுடை தரித்து, தான்தான் புத்த மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டவன் எனக் கூறுவது புத்தர்களுக்கே களங்கத்தையும், அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவமதாகும்.  

அவரை அரசும் சுதந்திரமாக இவற்றைச் செய்வதற்கு இடங் கொடுப்பது, புத்த தர்மத்துக்கும், இந்நாட்டின் பாரம்பரியத்துக்கும் கேடு விளைவிப்பதாகும்.  வரலற்றில் கறையை ஏற்படுத்திய குற்றமுமாகும்.  

No comments: