Monday, April 15, 2013

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க 
முன்னணி பௌத்த தேரர்கள் முயற்சி

உண்மையான, நேர்மையான கருத்துக்களுடனான விமர்சனங்களை பிரசுரியாமல் விடுவது குர்ஆனின் அடிப்படையில் குற்றமே!

4:105 – அல்லாஹ் உமக்கு அறிவித்தவற்றைக் கொண்டு மனிதர்களுக்கிடையே நீர் தீர்ப்பு வழங்கிடவே, உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை உம்பால் நிச்சயமாக நாம் இறக்கியுள்ளோம். சதிகாரர்களுக்கு வழக்காடுபவராக நீர் ஆகிவிடாதீர்.

நன்மையிலும், பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பாவத்திலும், பகைமையிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டாம் இது இறைகூற்றே!

33:39 – அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் தூதுச் செய்தியை எடுத்துரைப்பார்கள். மேலும், அவனையே அஞ்சுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒருவருக்கும் அஞ்ச மாட்டார்கள். கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

லங்கா முஸ்லிம் என்ற பெயருடன் இயங்கும் தாங்கள் குர்ஆன் வழியில் உங்கள் கடமையைச்செய்வதே நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கு சரியான செய்திகள் சென்றடையச் செய்வது உங்கள் பொறுப்பே!

No comments: