Tuesday, April 23, 2013

அறிவுகளும் உயிரினங்களும்


அறிவுகளும் உயிரினங்களும்

புல்லும் மரமும் ஓரறிவாம் ஸ்பரிசம்
வல்லோன் வகுத்த விதி

நத்தை சிப்பிசங்கு நலமாம் ஸ்பரிசத்துடன்
மெத்தவும் ருசியறியும் ஈரறிவு

எறும்பு கறையான் இதமாய் ஈரறிவுடன்
நாற்ற மறிவதே மூவறிவு

வண்டுதும்பி தொடரும் மூவறிவுடன் ரூபம்
கண்டிடும் வி்ந்தை நாலறிவு

பறவை மிருகம் பாங்காய் நாலறிவுடன்
அரவம் கேட்கும் ஐந்தறிவு

விந்தைகள் செய்யுமே ‌ஐயறிவுசேர் மனிதனில்
குந்தகமில்லா ஆறாமறிவு பகுத்தறிவு

ஆக்கியோன்: நிஸாம் ஹா.மு.

No comments: