Monday, April 22, 2013

கொஞ்சமாவது உண்மை உண்டா ?



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org

One World One Ummah

கொஞ்சமாவது உண்மை உண்டா ?


நான் இது போன்ற தரங்கெட்ட, அசிங்கமான, ஆத்திரத்தை ஏற்படுத்தக்கூடிய  கருத்துரைகளை எழுதுவோர் சிலரைச் சில தளங்களில் காண்கின்றேன். இந்த மலக்குழிகளின் பக்கல் சென்றாலே நமக்கு அதன் துர்நாற்றம் சகிக்க முடியாத நிலையை ஏற்படுத்தும். எனக்கும் அவ்வாறான அசிங்கமான அனுபவம் உண்டு. அதனோடு கருத்துப் பரிமாறப் போனால் அதன் அடிமட்டத்திலிருக் கும் நாற்றம்கூட வெளிப்படவே செய்யும். 

தரங்கெட்டவர்களுடன் தர்க்கம் செய்யப் போனால் அங்கு கருத்துக்கள் வெளிப்படாது,  அவர்களின் மலம் அவர்தம் வாயினால் வெளியேறத் தொடங்கி விடும்.   இவற்றைத் தவிர்த்துக் கொள்ளல், இவ்வாறான தளங் களைப் பார்க்காமல் விடல், பதில் எழுதாமல் விடல் ஒன்றே அல்லாஹ் கூறும், அறிவீனர்களைப் புறக்கணித்து விடுவீராக என்பதனால் நன்மை பெறும் வழி.  நம்மவர் சிலரில் கூட இவ்வாறான போக்குக‌ளைக் காண முடிகின்றது.  

நாய்கள் குரைக்கின்றன என நாமும் குரைத்துக் கொண்டிருப்பதில்லை. குரைக்காவிட்டால் அவை நாய்களல்ல என்பதை நாம் உணருவோமாயின் நமக்குக் கொஞ்சமும் அந்த நாய்களின் குரைத்தல் துன்பத்தைத் தராது. 

உணவளிப்பது தொடக்கம் அனைத்தையும் நமக்கு அளிக்கும் பொறுப்பு அல்லாஹ்வினுடை‌யதே! அதனைக் கூட்டவோ குறைக்கவோ எவராலும் முடியாது என்பதில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்வோமானால், இவர்கள் நமது பொருளாதாரத்துக்குப் பங்கம் விளைத்திடுவர், நமது வணிகத்தை முடக்கிடுவர், அல்லது அழித்திடுவர் எனப் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை.  

நான் அனைவருக்கும் கூறுவது:  PLEASE DO NOT TRY TO BENEFIT OUT OF OTHERS' DISTRESS. 

No comments: