Sunday, April 7, 2013

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதரலிங்கத்தின் அறிக்கை முற்றிலும் பொய்யானது


Commented by nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

http://lankamuslim.org/2013/04/07/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/

பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகதரலிங்கத்தின் அறிக்கை முற்றிலும் பொய்யானது

1990 இல் நிராயுதபாணிகளான வடக்கு முஸ்லிம்கள் பாஸிசப் புலிகளால் அவர்தம் பிற்நத மண்ணைவிட்டு வெறுங்கையுடன் விரட்டப்பட்ட போது அவர்கள் வாழ்ந்த காணிகள், கிராமங்கள், பட்டினங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கின்றன.

அக்காணிகளுக்கு உரிமையாளர் முஸ்லிம்களே.  அக்காணிகள், களவாடப்பட்டோ, கபளீகரம் செய்யப்பட்டோ இருக்கலாம் அல்லது அவை விற்பனையாகிக் கூட இருக்கலாம்.  அக்காணிகளில் 1990 இல் யார் சொந்தக்காரர்களாக இருந்தார்களோ, அல்லது குடியிருந்தார்களோ, அவர்களுக்கு அவைகளை மீளவும் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகள் மெற்கொள்ளப்பட வேண்டும்.

தேவை ஏற்படின் அதற்காக விஷேட சட்டம் யாக்கப்பட்டு, அக்காணிகள் உரியவர்கள் கைக்குச் சென்றடைய வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அதுபோன்றே, அவர்கள் வாழ்ந்த ஊர்கள் பெயர் மாற்றமின்றி, பழைய பெயர்களுடனே அந்த முஸ்லிம்களிடமே கையளிக்கப்பட வேண்டும்.

இதற்கு மேல், அவர்களுக்கு காணிகள் தேவை என்றால், அவற்றை அரசிடமிருந்து சட்டபூர்வமாகப் பெற்றுக் கொடுத்து அவர்களது இழப்பீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அவர்கள் பழைய நிலைக்குத் திரும்பும் முறையில் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாழ்வாதாரங்கள் சீர்‌செய்யப்பட்டு, எவரிலும் தங்கி வாழாது சுதந்திரமாக வாழ வழி செய்யப்படல் வேண்டும்.

அவ்வாறில்லாமல் குடியேற்றங்கள் நடைபெறுவது, அம்மக்களை மீண்டும் சட்டியிலிருந்து அடுப்பில் தள்ளிவிட்ட நிலையையே ஏற்படுத்தும்.

No comments: