Wednesday, June 26, 2013

Commented by Nizamhm1944 on: Lankamuslim.org One World One Ummah திரிவு படுத்தப்பட்ட செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லிம்கள் விசனம்

Commented by Nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

திரிவு படுத்தப்பட்ட செய்திகள் தொடர்பில் யாழ் முஸ்லிம்கள் விசனம்

ஊடக பயங்கரவாதம் உலகலவிய ரீதியில் இஸ்லாமியருக்கெதிராக திட்டமிடப்பட்ட வகையில் முடுக்கி விடப்பட் டுள்ளது. அவற்றின் முக்கிய நோக்கம் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரப்பதும், அவர்கள் பின்பற்றும் புனித குர்ஆனை அதற்கான வழிகாட்டியாக பார்வைப்படுத்த முயல்வதுமே! அதற்காக அவைகள் ஊடக தர்மத்தைக் குழிதோண்டிப் புதைத்து விட்டு எந்த அளவுக்கு கீழ்த்தரமான வழிகளைத் தமது நோக்கத்தை நிறைவு செய்யப் பாவிக்க முடியுமோ அந்தளவுக்கும் மேலாகவே செயற் படுத்தி வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் இங்கு நடைபெறுவதும். 

முப்பது வருடங்கள் தொடர்ச்சியாக பயங்கரவாதம் இடம் பெற்ற வடக்கில் ஆயுதங்களும், வெடிமருந்துகளும் கண்டெடுக்கப்படுவது ஆச்சரியத்துக் குரிய விடயமல்ல. ஆனால் 22 வருடங்களுக்கு மேலாக அங்கிருந்து துரத்தப்பட்டு, எங்கோ அகதிகளாக வாழ்ந்து, தற்போது மீள்குடியேறிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி முஸ்லிம்களை, கண்டெடுக்கப்படும் வெடி மருந்துகளோடும், ஆயுதங்களோடும் சம்பந்தப்படுத்த முயல்வது ஊடகங்க ளின் வக்கிர புத்தியைக் காட்டுவதுடன் புரியாத புதிராகவுமுள்ளது.  

No comments: