Friday, March 27, 2015

சூனியத்தை பொய் என்று மறுத்த இமாம்கள் முஹ்தசிலாக்களா ?





குர்ஆனுக்கு  விளக்கம் குர்ஆனிலிருந்தே கொடுக்கப்படல் வேண்டுமே தவிர, மற்றைய மதத்தவர்கள் போன்று எங்கிருந்தாவது, யாருடையவாவது கருத்துக்களையும் விளக்கங்களையும் கொடுத்து குர்ஆனின் கருத்து இதுதான் அல்லது இதுவாகத்தான் இருக்கும் என்று கூறும் உரிமை யாருக்கும் இல்லை!  இது குர்ஆனின் கண்ணியத்தைக் குறைப்பதாகும்.  எவ்வித விளக்கமும் லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமாவுக்கு முரணாகவும் அமைய முடியாது.  காரணம், நபிமார்களும், வேதங்களும் கலிமாவை விளக்க வந்தவைகளும், வந்தவர்களே!



குர்ஆனில் இருப்பவை அனைத்தும் உண்மையைக் கொண்டே கூறப்பட்டது. ஆதலால், அதில் பொய் உள்ளதாகக் கூறுவது அல்லாஹ் மேல் பொய் கூறுவதே!



அல்லாஹ், மிகத் தெளிவாக, தனது குர்ஆனில் ஷைத்தான்கள் ஓதி வந்ததைப் பின்பற்றி வந்ததாகவும், அது இடர் விளைக்கக் கூடியது என்றும், அது மறுமையின் பலனை இல்லாதாக்கிவிடும், அதனை  வாங்கியோர் தமது ஆன்மாவை விலையாக்கிக் கொண்டனர், அது நிராகரிப்பு என்று கூறியுள்ளதைவிட விளக்கமே தேவை இல்லை.  அதனால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு காட்டுவது உண்மையுடன் பொய்யைக் கலக்கும், இறைவன் மேல் பொய் கூறி, அல்லாஹ்வை மறுக்கும் செயலுமாகும்.



 மேலும், அல்லாஹ் நாடினாலன்றி சூனியத்தால் இடர் விளைவிக்க முடியாது என்று கூறியிருப்பதில் இருந்து சூனியம் என்பது இடர் விளைவிக்கக் கூடியது என்பதும் புலனாகின்றது. ஆனால், இறைநாட்டம் இருக்க வேண்டும் என்பதே! அல்லாஹ்வின் நாட்டம் கிடைக்காமல் போகலாம் என்பதால், அவர்கள் வெற்றியடையமாட்டார்கள் என்பது, சூனியம் இல்லை, அதனால் எதுவும் செய்ய முடியாது என்று கூறுவதல்ல.



ஆதலால், நபிமாருடைய அற்புதங்களை சூனியத்துடன் இணைத்துப் பார்த்து சூனியத்திற்கு எதிரான கருத்தை உருவாக்க முயல்வது பொருத்தமற்றது.



வேண்டுமாயின் சூனியம் என்ற பெயரில் மக்கள் ஏமாற்றப்டுகின்றார்கள் என்று கூற முடியுமே தவிர, அல்லாஹ் குர்ஆனில் சூனியம் பற்றிக் கூறியிருப்பதையே மறுப்பதும், அதனால் எவ்வித தீமையையும் செய்துவிட முடியாது என்று கூறுவதையும், அப்படி மறுத்துக் கூறியவர்களை ஆதாரமாகக் கொண்டு குர்ஆனைப் பிழையாக்கிவிட முயல்வதும் பயங்கரமான குற்றமாகும்.

Monday, February 16, 2015

Jaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு...

Jaffna Muslim: ஊழல், மோசடிகளுடன் தொடர்புடைய 1600 ஆவணங்கள் மீட்பு...: ஊழல், மோசடிகளுடன்  தொடர்புடைய முறைப்பாடுகள் அடங்கிய 1600 ஆவணங்கள் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ ...



மறைந்த முன்னாள் ஜனாதிபதி கையொப்பம் பெற்ற வெற்றுக் கடதாசிகளை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டினார்.



பதவியிழந்த இந்நாள் ஜனாதிபதி ஒளித்து வைக்கப்பட்ட ஊழல் பேர்வழிகளின் கோப்புக்களை வைத்துக் கொண்டு பொம்மைகளாக்கியுள்ளார் மக்கள் பிரதிநிகளை!



மொத்தத்தில், தேசத்துரோகங்களே தேசபிதாக்களால் முன்னெடுக்கபட்டுள்ளன!

Sunday, February 15, 2015

COLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...

COLOMBO MAIL.TODAY: மஹிந்தவின் குடும்பத்தைப் பாதுகாக்க 200 பாதுகாப்பு ...: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவிக்கு அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக 50 பேர் கொண்ட பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பை வழங்குமாற...



திருடர்களைப் பிடிப்பதற்காக படையணிகள் அமர்த்தப்பட்ட காலம் மாறி, திருடர்களுக்குப் பாதுகாப்பு வழங்கம் பாரம்பரியம் தோன்றியுள்ளதா என்ற சிந்தனை உருவாவதில் தவறில்லையே.



முன்னாள் ஜனாதிபதிக்கு நடைமுறைச் சட்டத்திற்கமைய பாதுகாப்பு கொடுக்க வேண்டியதுதான்.  ஆனால், முன்னாள் செயலாளர்களுக்கும் அப்படிக் கொடுப்பதற்கு இந்நாட்டு நடைமுறைச் சட்டம் இடமளிக்கின்றதா!



அடுத்து, முன்னாள் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்படும் பாதுகாப்பை, அவர் வேறு யாருக்கும் கொடுக்க முடியுமா போன்ற வினாக்களும் எழவே செய்கின்றன!

Wednesday, February 11, 2015

COLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...

COLOMBO MAIL.TODAY: முஸ்லிம் தனவந்தரை கொலை வெறியோடு திட்டி விரட்டிய ம...: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷவோடு மிகவும் நெருக்கமாக இருந்த ஒரு முஸ்லிம் தனவந்தருக்கு நடந்த உண்மையான  கதையிது. கொழும்பிலுள்ள பிரபல ரெஸ...



முஸ்லிம்களை அழிப்பதற்கென்றே அவதாரம் எடுத்து வந்தவர் போன்றே சென்ற ஆட்சியின் போது செயல்பட்டார் என்பதை யாரும் மறந்துவிடலாகாது.  அவரது சூழ்ச்சிக்கு எதிராக அல்லாஹ் சூழ்ச்சி செய்ததன் விளைவே, அவரது வாயாலேயே தனது அழிவுக்கு நாள் குறிக்க வைத்தது.  அனைப் பயன்படுத்தியது அரசியலில் எதிரணியான ஜவிபெ வும் ஐதேகவும், அதிருப்தியாளர்களான ஹெம்ல உரிமய வும்,  நலன்விரும்பிகளான மக்கள் தலைவர்களும். அவர்களோடு கைகோர்த்தனர், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களும், அநீதிக்கு உள்ளான தமிழர்களும். ஆதலால், மஹிந்தரிடம் இதை விட எதிர்பார்ப்பதற்க இல்லை. அவர் ஆட்சியில் அமர்ந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை யூகிக்கவும் முடியாது!

Monday, February 9, 2015

Jaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனா...

Jaffna Muslim: தோல்வியடைந்திருப்பின் மண்ணோடு கலந்திருப்பேன், ஜனா...: “நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப நடவடிக்கைகளை முன்னெடு த்துள்ளோம். இலக்கை வெற்றிகொள்ள முடியும் என்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது”...



நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் என்பது, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான போட்டியாளர்கள் மத்தியில் நட்த்தப்பட்ட தேர்தல் அல்ல.  அது ஒரு ஜனாதிபதியுடன், அவரது முழு அதிகாரத்துடன் போட்டி ‌போடவைவைத்த தேர்தல்.  சாதாரண தேர்தல்களிலேயே இந்நாட்டில் நிலவிய அத்துமீறல் சிந்தித்துப் பார்க்க முடியாதவையாக இருந்ததென்றால், ஒரு அராஸக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த, ஒரு ஜனாதிபதியுடன் போட்டி போடுவதில் எவ்விதமான அச்சுறுத்தல்,  மனநிலை பாதிப்பு போன்றவையை முகங் கொள்ள வைத்திருக்கம் என்பது எழுத்தில் வடிக்க முடியாதது.



ஆனாலும், இந்த  தேர்தலில் நடந்த ஒரு புதுமைதான், மக்கள் தாமாக முன்வந்து ஆட்சியிலிருப்பவரைத் தூக்கி எறியாமல் விட்டுவிட்டால், தமதும் தமது சந்ததியினருடைய எதிர்காலமே கேள்விக்குரியதாகிவிடும் என்ற மனநிலையில் எதிர் கொள்ளப்பட்ட உத்வேகம் ! இதனை இறை செயல் என்று கூறுவதைத் தவிர வழியில்லை.  அதனால் மைத்திரி அவர்களுக்கு மக்கள் ஆதரவைப் பெறுவதற்காகச் செய்யப்பட வேண்டிய முயற்சிகள் வெகுவாகக் குறைந்திருந்தன. ஊடகங்கள்,  கருத்தாளர்கள், விமர்சகர்கள், சமூக முன்னோடிகள் தாமாகக் களமிறங்கிப் பல்றேு வழிகளில் தமது பங்கை அராஜகத்தை ஒழிப்பதில் செலுத்தினர்.



உண்மையில் இந்த ஜனாதிபதித்அ தேர்தலில் மஹிந்தர் தோற்றிராவிட்டால், மைத்திரி அவர்கள் மட்டுமல்ல இன்னும் பலரை இன்று இந்நாடு இழந்திருக்கும் என்பது யாவரும் அறிந்ததே!  இறைவன் இந்நாட்டையும் மக்களையும் அராஜகத்தின் பிடியிலிருந்து காப்பற்றிவிட்டான்.



இச்செயல், புலிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றியதைவிடப் பல மடங்கு மேலானது.  காரணம், புலிகளை அனைவரும் எதிரியாகப் பார்த்தனர். ஆனால், இவர்கள் மக்கள் மத்தியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரம் கொடுக்கப்பட்ட ஆட்சியாளர்களாகவும், புலிகளை ஒழித்தவர்களாகவும் மக்கள் மத்தியில் அறிமுகமாகிக் கொண்டு சுதந்திரம் பெற்றுத் தந்த புருஷர்கள் எனக் கூறிக் கொண்டு இருந்தனர்.



அதனைத் தகுதியாகக் காட்டி மக்களை இருட்டிலும், மருட்சியிலும்,  வெருட்சியிலும் வாழ்க்கையை ஓட்ட வைத்தனர். அடிக்கடி புலிக்கதைகளைக் கூறி, அவர்களுக்கு எதிராக சிந்திக்கக் கூட முடியாத நிலையை உருவாக்கிய வண்ணம் இருந்தனர்.  மேலும், அத்தோடு அபிவிருத்தி என்ற மாய மானை மக்கள் முன்வைத்து மக்களை மயக்க நிலையில் வைத்திருந்தனர். சூறையாடுதலையே தமது முழுமையான இலக்காகக் கொண்டிருந்தனர்.  இத்தேர்தலில் பழைய நிலை களையப்படாதிருந்தால், இந்நாடும் ஒரு சோமாலியாவாக மாறி இருக்குமென்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

Wednesday, February 4, 2015

Gossip Lanka tamil: முன்னால் ஜனாதிபதி விட்ட தமிழ் பிழை...

Gossip Lanka tamil: முன்னால் ஜனாதிபதி விட்ட தமிழ் பிழை...



“முன்னால்“ என்பது பிழை, ”முன்னாள்” எ்னபதே சரி.  அவருடைய தமிழைப் பிழை காண வந்தவர், பிழையாக எழுதுவது, ஆந்தையைப் பலித்த கூகையின் கதையாகி உள்ளது! 

Saturday, January 24, 2015

Jaffna Muslim: அலரி மாளிகையில் இன்னும் பல ஆச்சரியங்கள் - கோத்தபய...

Jaffna Muslim: அலரி மாளிகையில் இன்னும் பல ஆச்சரியங்கள் - கோத்தபய...: அலரி மாளிகையில் அதி உயர்ரகத்தைச் சேர்ந்த 43 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அவற்றிற்காக குளிரூட்டப்பட்ட அறைகள் என்பனவும் அலரி ம...



The Great Wonders of Asia in this century!




Jaffna Muslim: அலரி மாளிகையில் இன்னும் பல ஆச்சரியங்கள் - கோத்தபய...

Jaffna Muslim: அலரி மாளிகையில் இன்னும் பல ஆச்சரியங்கள் - கோத்தபய...: அலரி மாளிகையில் அதி உயர்ரகத்தைச் சேர்ந்த 43 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அவற்றிற்காக குளிரூட்டப்பட்ட அறைகள் என்பனவும் அலரி ம...



The Great Wonders of Asia in this century!




COLOMBO MAIL.TODAY: அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட வாள்கள் முன்...

COLOMBO MAIL.TODAY: அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட வாள்கள் முன்...: அ ண்மையில் கொழும்பு அருங்காட்சியகத்திலிருந்து திருடப்பட்ட வாள்கள் முன்னாள் அமைச்சா்  ரன்ஜித் சியம்பலாபிட்டியவின் வீட்டில் இருப்பதாக சிங்க...



Why don't the Police have an immediate search and recover country's wealth ! If its true the Ex Minister has to be arrested for this great robbery forthwith!

சூனியம் ஹதீஸ் விஷயத்தில் பீஜே-யின் தடுமாற்றங்களும் முரண்பாடுகளும் -islam...

Wednesday, January 21, 2015

Jaffna Muslim: கோத்தபாய இயக்கிய 'மரணப்படை' - பொலிஸ் பேச்சாளர் தெர...

Jaffna Muslim: கோத்தபாய இயக்கிய 'மரணப்படை' - பொலிஸ் பேச்சாளர் தெர...: முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்‌ச மரணப்படையொன்றை இயக்கி வந்தார் என தகவல் கிடைத்துள்ளதாக  அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். இ...



Hajamohideen Mohamed Nizam If he was responsible of the ssid murders as the Operational Head of the Death Squad, he has to be punished severely!

Dinakaran - Sri Lankan Prime Minister confirmed Amendment to the empowerment of Tamils fulfilled | தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும்: இலங்கை பிரதமர் உறுதி

Dinakaran - Sri Lankan Prime Minister confirmed Amendment to the empowerment of Tamils fulfilled | தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்படும்: இலங்கை பிரதமர் உறுதி



Seems to be reasonable thinking! Make sure noone suffers when solving issues  and  implementing plans!

Wednesday, January 14, 2015

Jaffna Muslim: 'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' -...

Jaffna Muslim: 'முஹம்மது நபியை கார்ட்டூனாக வெளியிட்ட பத்திரிகை' -...: -அல்அரபியா, மிரர்- சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தாக்குதலை விசாரித்து வந்த அதிகாரி ஹெல்ரிக் ஃப்ரைடோ தற்கொலை செய்து கொண்டதாக தற்போது செய்...



குற்றச் செயலைக் கருத்தில் கொள்ளாது, அதற்குரியவர்களை, பின்னணியில் இயங்குபவர்களை, அவர்களின் நோக்கங்களைக் கண்டறியாது,  இஸலாம் மதச் சாயத்தைப் பூசி நடத்தப்படும் விசாரணைகளில் மூலம் உண்மையைக் கண்டறிய முடியாது!



இம்மனோ நிலை மாறாத வரை குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு, மறைந்து கொள்ளும் பதாகையாகவும், சந்தேகம் ஏற்படாமல், தேடலில்லாமல் செய்யப்படுவதற்கான உந்து கோலாகவும, ஊக்குவிப்பாகவும் அமையும்! முடிவு பயங்கரமாகவே இருக்கும்!

Thursday, January 8, 2015

COLOMBO MAIL.TODAY: நாட்டிலிருந்து வெளியேறிய P.B. ஜயசுந்தர

COLOMBO MAIL.TODAY: நாட்டிலிருந்து வெளியேறிய P.B. ஜயசுந்தர: நிதி திட்டமிடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி P.B ஜயசுந்தர இன்று (08) அதிகாலை 1.30 மணிக்கு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார. இவரது பயணம் தொடர்ப...



When will Finance Minister (Prsident), and Defence Secrretary leave this country!

Saturday, January 3, 2015

KalpitiyaVoice | The Truth: மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்...

KalpitiyaVoice | The Truth: மக்களின் காணிகளை கொள்ளையடித்த ரிசாத்! அம்பலப்படுத்...: வருகின்ற ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் சொற்ப நாட்கள் உள்ள நிலையில் கட்சித் தாவல்களும் காட்டிக் கொடுப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நி...



தனது அமைச்சர் மக்களின் காணிகளைக் கொள்ளையடித்தார் எனக் கூறுவது வேறு யாருமில்லை.இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்,



ஒருவர் கொள்ளையடித்ததைத் தெரிந்து கொண்டும் அவருக்கு எதிரான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது மிகப் பெரும் குற்றம்.  சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட  ஒரு ஜனாதிபதி, தனது கடமையைச் செய்யாமல் மக்களிடம் கதையளக்கிறார்!  குற்றச் செயல்களைத் தெரிந்தும்  தடுத்து நிறுத்தாமல், சட்ட நடவடிக்கை   எடுக்காமல் இருந்தது இந்நாட்டுச் சட்டப்படி குற்றமே!