Monday, October 8, 2012

மன்னார் காவல்துறையின் அசமந்த போக்கினால்தான் இளைஞன் பலி! - Sankathi 24 Tamil Eelam National News Daily

மன்னார் காவல்துறையின் அசமந்த போக்கினால்தான் இளைஞன் பலி! - Sankathi 24 Tamil Eelam National News Daily



இம்மாதிரியான விபத்துகளுக்கெல்லாம் போலிஸாரைக் குறைகூறுவது பொருத்தமற்றது.

உண்மையில் போலிஸார் அவர்களைப் பிடித்திருந்தாலும்,  அதுவூம் குற்றமாகும் அல்லது மேலிடத்தில் இருந்து அவர்களை விடுவிக்கும்படி கட்டளைகள் பறந்திருக்கும்.

தற்போது கூட விபத்திற்கு உள்ளானவர்கள் தங்களது பெற்றாரின் பெயரைக் கூறியே பொலிஸ் கெடுபிடியில் இருந்து விடுபட்டிருப்பர்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழி;க்க முடியாது என்பது போல், தாமாக உணர்ந்து நடந்து கொண்டால் இது போன்ற அவலங்களில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்ளலாம்.

வாழ வேண்டிய வயதில் தம்மை முடித்துக் கொண்டவர்களுக்காக பிரார்த்திப்பதைத் தவிர நம்மால் என்ன செய்ய முடியூம். இதனை ஒரு பாடமாக எடுத்து தம்மை திருத்திக் கொள்வதே அறிவூடமை.

Saturday, October 6, 2012

மன்னார்-மதவாச்சி வீதியில் பராமறிப்பற்ற நிலையில் பயணிகள் தரிப்பிடம். - Sankathi 24 Tamil Eelam National News Daily

மன்னார்-மதவாச்சி வீதியில் பராமறிப்பற்ற நிலையில் பயணிகள் தரிப்பிடம். - Sankathi 24 Tamil Eelam National News Daily


நிருபர் தனது தமிழில் சிறிதளவாவது கவனம் செலுத்துவது, அவர் செய்தியைக் கொடுப்பiதிவிட தமிழுக்குச் செய்யூம் பேருதவியாகவிருக்கும்.

சுத்திகரிப்பை சுற்றிகரிப்பு எனவூம், பராமரிப்பை பராமறிப்பு எனவூம், அனைவரும் என்பதை அணை வரும் எனவூம், மற்றும் னகர ணகர, லகர ளகர ழகர, ரகர றகர பேதங்களாலும் ஏற்படும் அவலங்கள் கருத்தையே மாற்றி விடுகின்றன.

மாணவர்கள் இதுபோன்ற எழுத்துப் பிழைகளைக் கொண்ட செய்திகளை வாசிக்கும் போது தடுமாற்றமடைகின்றனர்.

குறித்த என்ற சொல்லுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை எழுத்துப்பிழைகள் வராமல் இருப்பதற்குக் கொடுப்பதன் மூலம் தமிழுக்கு ஏற்படும் அழிவை தடுக்கலாம். மாணவர்களும் மக்களும் குழப்பதத்தில் இருந்து விடுபடுவர்.

மன்னாரில் கழிவு நீர் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி ஆரம்பம். - Sankathi 24 Tamil Eelam National News Daily

மன்னாரில் கழிவு நீர் வாய்க்கால் துப்பரவு செய்யும் பணி ஆரம்பம். - Sankathi 24 Tamil Eelam National News Daily


மன்னார் நகர சபை எல்லையூள் மழை காலங்களில் நீர் வெளியேறாத நிலை ஏற்படும் போது தூர்ந்து போன வாய்க்கால்களைச் சீர் செய்வதே அவ்வப்போது  மன்னார் நகர சபையால் மேற்கொள்ளப்படுவது.

தற்போதைய நிலையில் புதிதாகப் போடப்பட்டுள்ள பாதைகள் இயற்கையாகத் தண்ணீர் வெளியேற முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளன.

எவ்விதத் தீர்க்கதரிசனமோ, மக்கள் நலனில் அக்கறையோ இன்றி ஏற்கனவே இருந்த பாதைகளுக்கு மேல் பாதைகள் போடப்படுவதால், வீடுகள் இருக்கும் பகுதிகள் தாழ்நிலமாகி வெள்ளம் வெளியேறாது மக்கள் அவதிப்படுகிறார்கள்.

இயற்கையாக மழை காலங்களில் நீர் வெளியேறும் பகுதிகளில் எவ்வித முன்னறிவூமின்றி புதிதாக வீடுகள் அமைக்கப்பட்டு உள்ளதும் நீர் வெளியேறுவதைத் தடைசெயயூம் காரணமாக உள்ளது.

மன்னார்ப் பட்டினத்துக்கு ஒரு சிறப்பான பொறிமுறையிலமைந்த வடிகால் அமைப்பு உருவாக்கப்பட வேண்டுமென்பது நீண்ட கால தேவையாகவூம், கோரிக்கையாகவூம், முயற்சியாகவூம் இருந்து வந்துள்ளது.

ஆயினும் யூத்தம் காரணமாகவூம் 40 வருடங்களுக்கு மேல் நகர சபைக்கான தேர்தல் நடத்தப்படாது விசேட ஆணையாளர் ஆட்சி நடைபெற்றதும் இவ்வாறான இன்றியமையாத தேவைகள் புறக்கணிக்கப்பட காரணமாகின.

ஆதலால் இப்போது நகரசபை உள்ளுர் மக்களால் நிர்வகிக்கப்பட்டு வருவதாலும், அரச கவனம் ஓரளவூ மன்னாரிலும் திரும்பியூள்ளதாலும், ஒரு சிறப்பான வடிகாலமைப்பை உருவாக்கி மக்களின் கழிவூ நீர்ப் பிரச்சினைக்கும், மழை வெள்ளங்களால் ஏற்படும் அசௌகரியங்களுக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்க முடியூம்.

இதற்கான ஆதரவை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் கொடுத்து மக்களை இந்தத் துயரில் இருந்து விடபட வகை செய்ய வேண்டும்.