Tuesday, September 30, 2014

PROMODINI : The Affairs of Lonely House Wife [+HD +Eng +Hindi Subtitles]





There is message in the short film.  That is, its dangerous to meet a man when alone privately and at any circumstances avoid unnecessary conversation and bodily association. Women! Lower your Gaze and guard your modesty! 

முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல் » Sri Lanka Muslim

முஸ்லீம் கவுன்சிலுக்கு எதிராக நடவடிக்கை; ரணில், அனுரகுமாரவுக்கு 1வாரகால அவகாசம்- மாநாட்டில் BBS மிரட்டல் » Sri Lanka Muslim



Now then, for that call. And stand steadfast as thou art commanded. Nor follow thou their vain desires; but say:  ” I believe in whatever Book Allah has sent down; And I am commanded to judge justly between you.  Allah is our Lord and your Lord! For us our deeds, and for you for your deeds. There is no contention between us and you. Allah will bring together, and to Him is final goal”  - Al Quran 42:15


Tuesday, August 26, 2014

:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...

:: Jamath Games மெளலவி லீலைகள் ஏன் எதற்காக? ஒரு விளக்...: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கப்படுகின்றது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி..



பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும்.

இதில் கூறப்பட்டவைகளில் பெரும்பாலானவ அப்பட்டமான உண்மைகளே!  ஆனால், அணுகுமு‌றையில் சரியான
‌பே்ாக்கு கடைப்பிடிக்கப்படுவது, இந்த தளத்தின் நோக்கம் மக்களைச் சென்றடையக் கூடியதாக
அமையும். அப்படி இல்லாதவிடதது
, இது சிலருக்குக் கேவலத்தை ஏற்படுத்துவதுடன் தனது கடமையை முடக்கிக்
கொள்ளும்.

உண்மையில் மக்கள் புகட்டப்படுவதன் மூலமே இது போன்ற சீர்கேட்டைக் களைய முடியும்.
அனவரும் வாசிக்கக் கூடிய தரத்தில் ஆக்கங்கள் வெளிவருவது நன்மை பயக்கக் கூடியது. மிகச்
சிறந்த நன்மையைக் கொண்டு தீமையைக் களையும்படிதான் அல்லாஹ் கூறியுள்ளான். பொய்யின் மேல்
உண்மையைப் போடுங்கள்
, பொய் தானாக அழிந்து விடும். பொய் இதுவரை எதனையும் செய்ததில்லை. இனியும் செய்யப்
போவதில்லை என்பது இறைகூற்று.

மார்க்கம் அல்லாஹ்வின் பதுகாப்பிலுள்ளதால் எவரும் மார்க்கத்தை அழித்துவிட முடியாது.
மார்க்க விடயங்களை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு முஃமீனுடையதுமாகும். அல்லாஹ்
குர்ஆனைக் கொண்டே கடுமையாக முயற்சிக்கும்படி கூறுகின்றான்.

குற்றவாளிகளைத் தண்டிக்கும் உரிமையை நாம் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அது நாம்
அல்லாஹ்வுக்காக அவனது பணியைச் செய்வதில் நமக்கு இடையூறை ஏற்படுத்திவிடும். அவர்கள்
ஒருவித குற்ற்ததைச் செய்கிறார்கள் எனக கூறும் நாம் இன்னொரு வகையான குற்றச் செயலில்
ஈடுபட்டு விடும் நிலைமையே இன்று முஸ்லிம் தஃவாப்பணி எனக் கூறி ஆரம்பிக்கப்பட்ட அனைத்துப்
பிரிவுகளிலும் புரையோடிப் போயுள்ளது.

நாம் நடுநிலையுள்ள சமுதாயமாகப் படைக்கப்பட்டிருக்கிறோம் என அல்லாஹ் தன் அருள் மறையில்
கூறியிருப்பதற்கு ஒப்பவும்
, தீர்ப்புக்கள் யாவும் அல்லாஹ்வுடைய குர்ஆனில் இருந்து மாத்திரமே
கொடுக்கப்படல் வேண்டும் என்பதற்கொப்பவும் நமது செயற்பாடடை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்



Friday, July 25, 2014

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)






பிறை பர்ப்போரிடம் ஒரு சந்தேகம் !



பிறையை நாம் கண்ணால் பார்க்காவிட்டால் பிறை தோன்றவில்லை என்றாகிவிடுமா! கண்ணால் காணமுடியாத காற்றை நம்ப முடியுமானால் ஏன் பிறையும் அதன் ஒழுங்கில் தவறாது வந்து கொண்டே இருக்கும் என்ற இறை வார்த்தையை நம்பக் கூடாது!



றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்படட நாட்களில் நோன்பை நோற்கவும் என்ற இறை வசனம் புறந்தள்ளப்படலாமா!



நாயகம் ஸல அவர்கள் பிறை பர்த்துத்தான் நோன்பு நோற்றார்கள் என்று கூறினால், அவர்கள் ஒட்டகத்தைத் தமது வாகனமாகப் பாவித்ததையும் செயற்படுத்த வேண்டுமல்லவா!



பிறையை இன்று காண முடியாததால் நாளை பெருநாள் எனத் தீர்ப்பு வழங்கலாமா! அப்படியாயின் பிறை பார்த்தல் என்ற கருதுகோள் கேலியாகவில்லையா!



இன்று பிiiயைக் காணாது, நாளை பார்க்கும் போது அது இரண்டாவது பிiறாகவிருந்தால் எப்படித் தீர்ப்பு வழங்குவீர்கள்!



அமாவாசைக்குப் பின் புதுப் பிறை என்ற  உண்மையை மறுக்கப் போகின்றவர் யார! நாளை அமாவாசையாயின் அதற்கு அடுத்த நாளை அடுத்த மாதமாகக் கொள்வது அதாவது தலைப் பிறையாகக் கொள்வது  பிழையா!



ஆதலால், நாளை அமாவாசை வரப் போவதை அனைவரும் காணப் போகின்றனர். அதனைத் தொடர்ந்து ஞாயிறு மாலை பிறை தோன்றியே தீரும். நாம் காணமுடியாமற் போனால் பிறை தோன்றவில்லை என்பது கருத்தல்ல. அப்படி நினைப்போமாயின் அது இறை மறுப்பே!

Tuesday, July 22, 2014

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-





'சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்' என்ற உத்தரவை பாதுகாப்பு செயலாளர்
வழங்கி இருந்தது உண்மையானால்
, நிரூபணமானால், தண்டிக்கப்பட வேண்டியவர் அவரே தவிர, இந்த நாடும் அப்பாவி இராணுவத்தினரும்,
எதுவும் புரியாத மக்களும்
அல்லர் என்று கூறிய அந்த தேசப்பற்றுள்ள இராணுவ அதிகாரி தேசிய  விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டிய  மண்ணின் மைந்தன் எனலாம்!



Thursday, July 10, 2014

Sri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்

Sri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்





பஞ்சாயத்து தலைவர் போபால் பாசி ஒரு மனிதனாக இருக்க மாட்டார் போலிருக்கின்றது. 

இவருக்கு மரண தண்டனை கொடுத்து உலகுக்கு ஒரு படிப்பினையை உருவாக்க வேண்டும். 

Wednesday, July 9, 2014

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!



ஆம், சரியாகவே சொல்லியிருக்கிறார், தாம் பகிரங்கமாகச்செய்யும் அமைப்ப என்று.  அப்படியானால் இரகசியமாகச் செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள்அஎன்பது இவரது கணிப்போ!



எப்படியோ தாம் கொள்ளை. கொலை, தீவைப்பு, அத்துமீறல், அவமதிப்பு, சட்டத்தை மதிக்காமை, தான்தோன்றித்தனமாக தர்பார் நடத்துவது, மத விரோத நடவடிக்கை, பள்ளிவாசல், கோவில் ‌தகர்த்தல் போன்ற அனைத்தையும் செய்வதாக, செய்வதற்கு உடந்தையாக, ஊக்குவிப்பதாக ஒத்துக் கொள்கிறாரா!

Monday, June 30, 2014

கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு | NAMMAVAN

கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு | NAMMAVAN



மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதை என்பதா! 

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதை என்பதா! 



எதற்காக இவர்கள் பாதுகாப்புச் செயலரைச் சந்திக்கச் சென்றனர்? எதனைப் பெற்று வந்தனர்! 

இதனைத்தான் முஸ்லிம்களின் தலைவிதி என்பதோ!

கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு | NAMMAVAN

கோட்டாபாயவின் தீர்மானத்திற்கு முஸ்லிம் கவுன்ஸில் வரவேற்பு | NAMMAVAN



மலையைக் கல்லி எலியைப் பிடித்த கதை என்பதா! 

பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காய் முடிந்த கதை என்பதா! 



எதற்காக இவர்கள் பாதுகாப்புச் செயலரைச் சந்திக்கச் சென்றனர்? எதனைப் பெற்று வந்தனர்! 

இதனைத்தான் முஸ்லிம்களின் தலைவிதி என்பதோ!

Friday, June 27, 2014

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதிபத்தியம்.... ஒரு பார்வை!

நாடு போகிற போக்கில் நாட்டு மக்களின் சுயாதிபத்தியம்.... ஒரு பார்வை!


நாட்டின் அரசியலமைப்பைப் பாதுகாப்பேன் எனப் பயபக்தியோடு சத்தியஞ் செய்து பாராளுமன்ற அங்கத்தவர்களாகப் பதவி வகிப்போர் அவர்கள் சத்தியம் செய்து எடுத்த உறுதிமொழியைப் பாதுகாக்கத் தவறியுள்ளதன் மூலம், பாராளுமன்றின் சிறப்புரிமைகளை மீறியுள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அன்றி மக்கள் அவர்களிடம் அளித்திருந்த நம்பிக்கைப் பொறுப்பை மீறியுள்ளனரா! அல்லது இரண்டுமா!
யாப்பின் Xஆவது உறுப்புரையின் 63ஆவது பந்தியில் கூறப்பட்ட சத்தியத்தைச் செய்து அதனைச் செயற்படுத்தத் தவறியமை, பாராளுமன்ற அங்கத்தவரது தலையாய கடமையைச் செய்யாமல் புறக்கணித்ததாக அமையுமானால், அந்த அங்கத்தவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை என்ன? அவர்கள் பாராளுமன்ற அங்கத்துவத்தை இழந்தமையாகக் கொள்ள முடியுமா? என்பதும் ஓர் முக்கிய விடயமாகக் கருதப்பட வேண்டியதே!
சத்தியம் செய்த பின்னர் அதனை நடைமுறைப்படுத்தாதவர்கள் பற்றிய நடைமுறைச் சட்டமென்ன?
தற்போதைய நாட்டு நடைமுறைகள் மக்கள் மனத்தில் பல்வேறு கேள்விகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நாம் எங்கு சென்று கொண்டிருக்கின்றோம்! சிவில் நிர்வாகம் நடைபெறும் நாட்டில், மக்களுக்கு அறிவுறுத்தல்கள் எங்கிருந்து வரலாம்! யுத்தம் நடைபெற்று முடிந்ததோடு நாட்டு நிர்வாக முறை மாற்றம் பெற்றுள்ளதா என்று சிந்திக்கும் நிலைக்கு நாட்டுப் பற்றாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
சிவில் நிர்வாக நடவடிக்கைகள் யுத்த காலத்தில் தவிர்க்க முடியாத நிலையில் இராணுவத்தின் கைக்குப் போயிருந்தது. 2009இல் யுத்தம் முடிவுக்கு வந்து ஐந்து வருடங்கள் நிறைவடைந்த பின்னரும் அதே நிலை தொடருவதாக தெரிகின்றது.
எதற்கெடுத்தாலும் இராணுவக் கெடுபிடிகளும், இராணுவத் தலையீடுகளும், இராணுவ அறிவுறுத்தல்களும் என நீண்டு கொண்டே போகின்றது. இது சிவில் நிர்வாகம் இராணுவத்தின் கைக்கு மாறிக் கொண்டிருக்கின்றதா? பழுத்த வாழைப் பழத்தில் நுட்பமாக ஊசியை நுழைப்பது போன்று சிவில் சேவைகள் இராணுவ நிர்வாகமயப்படுத்தப் படுகின்றதா? இம்முன்னோடி நடவடிக்கைகளே, நடைபெறப் போகின்ற இராணுவ ஆட்சியின் ஒத்திகையா என்றெல்லாம் சமூக ஆர்வலர்களைச் சிந்திக்க வைத்துள்ளமையைத் தவறாகக் கருதிவிட முடியாது.
இந்நிலை மிகவும் அபாயகரமானது. ஜனநாயகம் தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பெயரளவில் நடைபெறும் தேர்தல்களும், மாகாண சபைகளும், பாராளுமன்றமும், அமைச்சரவையும் கூட யார் யாரினதோ மறைமுகக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளதாகவே தெரிகின்றது.
அதிகார பலம் இரண்டு மூன்று நபர்களின் தனியுடமையாகி, அனைத்து மக்களினதும் பிரதிநிதிகளும், அவர்களின் கைப்பொம்மைகளாக மாறியுள்ளதாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் காரியங்கள் அபாய அறிவிப்பைச் செய்து கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, மூன்றில் இரண்டு பங்கு வாக்காளர்களால் தேர்தல் ஒன்றின் மூலம் தீர்மானிக்கப்பட, திருத்தப்பட வேண்டிய அரசியல் யாப்பு கூட, மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்றப் பிரதிநிதிகளை விலைக்கோ, அன்றி அமைச்சர் பதவி என்ற இலஞ்சம் கொடுத்தோ வாங்கி நிறைவேற்றப்பட்டுள்ளமை, மக்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகி உள்ளமையை, அவர்களின் கையறு நிலைமையை வெளிப்படுத்தி நிற்கின்றது.
இது ஒரு பிழையான முன்னுதாரணமாக இருந்தும், உச்ச நீதி மன்றம் இதில் கவலை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
நாளை இந்த அரசாங்கம், தான், அங்கத்தவர்களைப் பயமுறுத்தியோ, இலஞ்சம் கொடுத்தோ வாங்கிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பாவித்து புதிய ஒரு யாப்பினை உருவாக்கி பாராளுமன்றின் ஆயுட்காலத்தைக்கூட இன்னும் இருபது வருடங்கள் நடைமுறைப்படுத்தக் கூடியதாக ஆக்கிக் கொள்ளலாம்.
தாங்கள் விரும்பிய இனங்களினது வாக்குரிமைகளைக்கூட யாப்பின் மூலம் இல்லாமல் செய்து விடலாம் என்ற அபாய நிலையும் உள்ளது. அல்லது;
தனியாள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கியது போன்று, மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாகப் பதவி வகிக்கலாம் என்ற மாற்றியவாறு, ஆயுட்கால நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவியை உருவாக்கிக் கொள்ளலாம்.
மக்கள் பிரதிநிதிகள் தானே யாப்பை மாற்றி அமைத்தனர் சிலர் என வாதிடலாம். ஆனால் உண்மை அதுவல்ல. மக்கள் பிரதிநிதிகள் என்போர், மக்கள் ஆணை பெறப்பட்டு, உருவாக்கப்பட்ட யாப்பினை செயற்படுத்துபவர்களே தவிர, அவர்கள் தமது விருப்பப்படி காரியமாற்றும் உரிமை பெற்றவர்கள் அல்லர்.
அவர்கள் புதிதாக எதையாவது செய்ய வேண்டுமாயின் மக்கள் ஆணை பெறப்பட வேண்டும் என்பதையே யாப்பு கூறி நிற்கின்றது. அதற்காகவே சுநகசயனெரஅ சர்வசன வாக்கெடுப்பு எடுக்கும் முறை யாப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தடவை நடைமுறைப்படுத்தப்பட்டு பாராளுமன்றின் ஆயுள் மேலும் ஒரு தடவைக்கு நீடிக்கப்பட்டும் உள்ளது.


Tuesday, June 24, 2014

Gnanasara Thero on drunk driving charge and Norway visit





Its waste having an interview with this person. He has no reply to any one of your question!

Gnanasara Thero on drunk driving charge and Norway visit





 
He has no answer to the question paused on him about the nine charges in the court of law. Trying show that he is a sober and a real Buddhist. He himself is a lier, drunkard, out law, terrorist, etc., etc.. 

Tuesday, May 20, 2014

"அறிக்கை சபை" சொல்லுமா ? மன்னிப்பு கோர சொல்லி



A good job!



Why don't you all take legal action against this Lier of this century and the Leader of the Terrorist group Gnana sara kalaboda thero!


Friday, May 2, 2014

THE MURASU: ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக...

THE MURASU: ஒருசிலர தேரர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கும் அரசுக...: சில தேரர்களின் தேவையற்ற செயற்பாடுகளுடன் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லை என பிரமர் தி.மு. ஜயரத்ன தெரிவிக்கிறார். கம்பொல - கஹட்டப...



Its true, but what action the Govt is going to take to wipe out this menace. Why the Govt takes double stand! 

THE MURASU: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு ராஜயோ...

THE MURASU: சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு ராஜயோ...: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவுக்கு பலம்மிக்க ராஜயோகம் ஏற்பட்டுள்ளதாக அவரது சோதிடர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ...



Its time to save the country, unity of the peace loving poor maas, and from worst stage of corruption and waste. I think the God's grace is there to this country still. 

Tuesday, April 29, 2014

MDN- Muslim Daily News: விஜித தேரரை விரட்டிய பெளத்த தர்மத்தையும், எம்.பிக்...

MDN- Muslim Daily News: விஜித தேரரை விரட்டிய பெளத்த தர்மத்தையும், எம்.பிக்...: தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட ...



//இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.//



சிறு திருத்தம். இது முடிவின் ஆரம்பமல்ல, முடிவைத் தீர்மானித்த முக்கிய காரணிகள்.



விஜித தேரரைக் கொல்ல துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு காவியுடைக் காவாலியை சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செயயச் சென்ற அந்த தேரரிடம், உங்களை ஏன் பொது பல சேனா ஓட ஓட விரட்டுகின்றது என எவ்வித பொறுப்புமற்று கேள்வியைத் தொலைபேசியூடாக விடுத்துள்ளமை நடைபெறும் அனர்த்தங்களை எடை போட உதவுகின்றது,



அந்தத் தேரர் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாபசே யினால் காரணமின்றி தாக்கப்படுவதற்கு எதிராக கருத்து வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டே அவர் மீது வைக்கப்படுகின்றது. அதுதான் அந்த தேரருக்கு கிடைத்த மரியாதை.



ஆனால் காலித்தனம் செய்யும் குற்றவாளிக்கு பாதுகாப்பும், சகல சுதந்திரமும் வழங்கப்படுகின்றது. காரணம் அந்தக் கழிசடை சிறுபான்மையினரின் மதங்களைக் கொச்சைப்படுத்துவதிலும், தாக்குவதிலும், அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் ஈடுபட்டு வருவதே!

Sunday, April 13, 2014

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?: கே.சி.எம்.அஸ்ஹர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வடபுலத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப...





நாய் வேலையைக் கழுதை செய்தால் எப்படியோ, அப்படியேதான் இந்த வடபுல முஸ்லிம்களின் நிலையும் இன்று ஆக்கப்பட்டுள்ளது.



மனிதாபிமான ரீதியிலும் அரசின் கடமை என்ற ரீதியிலும்,புலிகளால் பலாத்காரமாக 1990 இல் வெளியேற்றப்பட்ட அந்த ஏதுமறிய அப்பாவி வடபுல முஸ்லிம்கள் விஷே திட்டம் ஒன்றின் கீழ், போதிய இழப்பீடுகளுடன் அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் இன்று இந்நிலைக்கு ஆளாக்கப்படடிருப்பது வெறும் அரசியல் பகடைகளாக அவர்கள் ஆக்கப்பட்டதே தவிர இல்லை.



இதன் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும். அரசு இவர்கள் விடயத்தில் கண்டுங் காணா அன்றி மாற்றாந்தாய் மனப்பான்மையையும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபங்களுக்காக இவர்களது பெயரைப் பாவிப்பதுமாக காரியங்கள் நடைபெறுகின்றன.



அரசு தனது கடமையைச்செய்திருந்தால் இன்று நாய்,பேய்கள் எல்லாம்அ இந்த முஸ்லிம்களை கிள்ளுக்கீரைகளாகப் பாவித்துதமது அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மாட்டார்கள்.

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?: கே.சி.எம்.அஸ்ஹர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வடபுலத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப...





நாய் வேலையைக் கழுதை செய்தால் எப்படியோ, அப்படியேதான் இந்த வடபுல முஸ்லிம்களின் நிலையும் இன்று ஆக்கப்பட்டுள்ளது.



மனிதாபிமான ரீதியிலும் அரசின் கடமை என்ற ரீதியிலும்,புலிகளால் பலாத்காரமாக 1990 இல் வெளியேற்றப்பட்ட அந்த ஏதுமறிய அப்பாவி வடபுல முஸ்லிம்கள் விஷே திட்டம் ஒன்றின் கீழ், போதிய இழப்பீடுகளுடன் அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் இன்று இந்நிலைக்கு ஆளாக்கப்படடிருப்பது வெறும் அரசியல் பகடைகளாக அவர்கள் ஆக்கப்பட்டதே தவிர இல்லை.



இதன் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும். அரசு இவர்கள் விடயத்தில் கண்டுங் காணா அன்றி மாற்றாந்தாய் மனப்பான்மையையும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபங்களுக்காக இவர்களது பெயரைப் பாவிப்பதுமாக காரியங்கள் நடைபெறுகின்றன.



அரசு தனது கடமையைச்செய்திருந்தால் இன்று நாய்,பேய்கள் எல்லாம்அ இந்த முஸ்லிம்களை கிள்ளுக்கீரைகளாகப் பாவித்துதமது அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மாட்டார்கள்.

Saturday, April 12, 2014

Muslim Daily News: வில்பத்து விவகாரம்: அரசின் நிலைப்பாடு என்ன? BBC

Muslim Daily News: வில்பத்து விவகாரம்: அரசின் நிலைப்பாடு என்ன? BBC: BBC:இலங்கையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் பிரச்சினைகளை அரசாங்க...



வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை பற்றிய எந்த சிந்தனையோ, தீர்க்கும் நோக்கோ திட்டங்களோ அரசிடம் இல்லை. ஆனால் மாறான போக்கொன்றின் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் காட்ட அரசு முனைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Wednesday, April 9, 2014

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பொதுபல சேனா எதிர்ப்பு

வடக்கு முஸ்லிம்களை அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதப் புலிகள் 1990இல் பலவந்தமாக விரட்டி இனச் சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றிய போது,தடுத்து நிறுத்தி இருக்க வேண்டிய அரசு, இதுவரை அவர்கள் விடயத்தை அரசியல் இலாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.

அதனால் அவர்கள் தமது இழ்ப்புகளுக்கான எவ்வித நட்ட ஈடுகளையும் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தம் பாரம்பரிய தாயகமான வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருபத்து மூன்று வருடங்களாகியும், அப்புலிகள் தோற்கடிக்கபபட்டு ஐந்து வருடங்களாகியும், அவர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்காத நிலையில், மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

போதாக்குறைக்கு அவர்கள்பொது பல சேனா போன்ற மதப் பயங்கரவாத அமைப்புக்களின் மூலம் பலத்த மன உளைச்சல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதனை அரச அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது, அரசின மாற்றாந் தாய் மனப்பான்மையை மட்டுமல்ல வடக்கு முஸலிம்கள் விடயத்தில் அது கொண்டுள்ள கரிசனை இன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. ஆக, புலிகள் செய்த அதே இனச் சுத்திகரிப்பை இன்னோர் முறையில் தொடர்கின்றனர் என்றே கூற வேண்டும்.


- நிஹா -

Monday, March 3, 2014

Commented on Lankamuslim.org

@ http://tinyurl.com/mrgzthr

ஜெனீவா பிரேரணைக்கு ஐ. தே. க ஆட்சி கால 83 இனக்கலவரமே பிரதான காரணம்

1983இல் நடைபெற்ற அராஜகத்திற்குப் பரிகாரம் தேடினார், தொடர்ந்து வந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள அவர்கள்.
புலிகளினதும் , போராளிக் குழுக்களினதும் தோற்றததிற்கு வித்திட்டவை ஏற்கனவே பேரின அரசியல்வாதிகளால் குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளும், அதன் உச்ச கட்டமாக ஜேஆரினால் முன்னனெடுக்கப்பட்ட 1983 கலவரமுமே!
ஆயினும், அதற்குத் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கி வீசப்பட்டு ஏறத்தாழ 20 வருடங்கள் சென்ற பிறகு அதனைக் கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
தற்போதைய அரசு, புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகளாகியும் உருப்படியாக இனப்பிரச்சினை தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை.
மாறாக, சிறுபான்மையினரது மதஉரிமைகளைக் கூட நசுக்கும் அராஜக நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. எவ்வித ஓலங்களும் அரசின் காதுகளில் விழுவதாயில்லை.
போதாக்குறைக்கு அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்திற்கு மேலாக உரிமைகள் கொடுப்பதாகக் கூறிக் கொண்டிருந்த அரசு, புலிகளின் தோல்விக்குப் பின்னர் தனது போக்கை மாற்றிக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்கும் கருமங்களில் ஈடுபடத் தொடங்கியது. இவைகளே இன்றை நாட்டின் அவல நிலைக்குக் காரணம் என்பதை இன்னும் உணராமல் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பது அழிவை நோக்கிய பயணமே தவிர அல்ல.


முன்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காரணமாகக் கூறிக் கொண்டிருந்தவர்கள், தற்போது அந்த பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, நாட்டைச் சீரழிக்கக் காரணமாயிருந்த விகிதாசாரத் தேர்தல் முறையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் இல்லாதொழிப்பதை விடுத்து, அதற்கு, மேலும் தீனி போடும் சட்டங்களை இயற்றிக் கொண்டிருப்பது எதனைக் காட்டுகின்றது! நாட்டு நலனைவிட சொந்த நலனே முக்கியம் எனபதையல்லவா!



Sunday, February 23, 2014

Friday, January 17, 2014

Hardline monks rally Sri Lanka as Buddhist front By KATY DAIGLE Associated Press

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kcqvumv

Lankamuslim.org

நீதி அமைச்சரும் கொழும்பு மேயரும் முஸ்லிம்கள் ஆனால் நடவடிக்கை ஒன்றுமில்லை: Associated Press


Hardline monks rally Sri Lanka as Buddhist frontBy KATY DAIGLE Associated Press


Not only these two giants, but there are many more with the names of Muslims, but lost their originality due to reasons which I do not like to describe or disclose. These are very unfortunate situations of the country.

/// ''  Gnanasara said there are ‘‘extremist forces trying to create divisions, buy our lands, marry our wives and recruit our children. The same thing happened in Malaysia, the Maldives and Bangladesh — all now Muslim countries. The same thing may happen in Sri Lanka if we’re not careful.’’  ///


Buddhism came to this country from India 2000 years ago and Islam 1300 years.  If Muslims convert the Buddhist as Islam for more than 1300 years, Buddhist ratio cannot be as it is now!


Our Holy Quran says, There is no compulsion in the religion( 2:256).  And also it said in several occasions in the Quran, that majority of the human will not accept Islam as their religion. Even  Prophet Muhammad PBUH was not allowed to go beyond the teachings of the words of Allah to the mankind.


So, its not the Muslims expectations to convert anyone to increase the number of Muslims which will never happen against the will of Allah.  If anyone thinks of conversion its totally against Allah, and they will become Rejecter of Allah and Islam as Allah has to guide and put in the righteous path. This is the faith of Muslims as per Quranic teachings. If Allah wants to make all mankind its not harder than the creation of the Universe. Its Islam.


Though the arrival of Islam only little more than 1300 years,  the present followers of Islam were living here from the inception of the mankind of the world.  Since the First human Adam came to (Adam’s peak) Sri Lanka and from then the followers of Almighty God was living all the time. Adam’s descendants were worshippers of One and Only God.  In times some people rejected the theory of One God and worshiped whatever and whoever they believed as gods or else.


The existence of believers of One God in this country could be simply proved by the existing tombs of the Saints (Auliyah - the Arabic word) of Allah - the Almighty God in this country.  The present most of the Muslims are the descendants of the sixty footers saints of One God  , and still these tombs are existing in the places like Northern Province, Eastern Province, North Western Province as per my knowledge and they are being called as Shrine (Dhargha ) and they are under the custody of the Muslims time immemorial.


Those Muslims were talking Tamil from that time. This can be proved by various ways.  A major point to prove this,  the presence of Arabs for business purpose to buy spices, gems etc, then they introduces Islam and believers of One God could have been accepted the Islam as their religion.


Very little number of Arabs married the Tamil speaking women those who were followers of the Previous Religions of the Almighty God and introduced a new Language called presently as Transliteration. Tamil written in Arabic for their communication. And also they contributed many knowledge including Medicine, Science, Spiritual etc through this transliteration method to this country.  They never had interest to capture and rule this country, or marry Sinhalese wives and converted.


These inhabitant Muslims were associating and living peacefully with the followers of Hinduism, Buddhism, and Christianity, talking mainly Tamil, then Sinhala, and English.  They were peace lovers and their main source of income is from legal (Halal)  business.


The Muslims were never traitors or fighters against the rulers but they were Patriotic and helped the rulers whenever the invaders got into this country. This is because the religion Islam insists of sincerity and loyalty on those with powers to rule the country.  


In the meantime Sinhala Buddhist and the Tamils were fighting against the then Governments and the Muslims of this country never fought against the country or supported violence of the rebellions especially in 1971 by the JVP (Sinhala)  and after by several groups of Tamil rebellions, but always with the rulers and sorted peace among all.  This record of facts cannot be erased from the history of this country.  


/// ‘‘The BBS is trying to push the country toward racial and religious conflict,’’ said a Sinhalese business owner who would only give his first name, Susantha. ‘‘Sometimes I suspect they are carrying out a contract for the government to turn attention away from issues such as the economy, health care and education.’’  ///


The last portion of the above Sinhalese businessman cannot be ignored as it is the opinion of almost all analysts, well-wishers, patriots even the ordinary people of this country.



Wednesday, January 15, 2014

எமது பிளவால் சிறுபான்மை சமூகங்கள் மேம்மையடைந்து வருகிறது: பொதுபலசேனா

Commented  by nizamhm1944 on:  http://tinyurl.com/pqj5amy

Lankamuslim.org


எமது பிளவால் சிறுபான்மை சமூகங்கள் மேம்மையடைந்து வருகிறது: பொதுபலசேனா

உலகிலேயே ஓர் இனம் முன்னேறுவதால் தமது இனம் அழிந்து கொண்டிருக்கின்றது என முட்டாள்தனமாகக்  கூறும் முதல் மனிதன் இந்த தேரையைத்தவிர இருக்க முடியாது.  எவரும், மற்றவரை வீழ்த்தி தன்னை உயர்த்திக் கொண்ட வரலாறே கிடையாது. அப்படியான சிந்தனை கொண்டவர்கள் அழிவுகளையே சந்தித்துள்ளனர். 

தனது கருத்தைக் கூறுவதற்கு ஒவ்வொரு பிரஜைக்கும் முழு உரிமையுண்டு. ஆனால், மற்றைய சமூகங்களைத் தாக்கும், அழிக்க முயலும், தூஷிக்கும், நசுக்க முனையும் உரிமை எவருக்கும் கிடையாது. கடந்த நான்கு வருமங்களாக நாடளாவிய ரீதியில் தூண்டிவிடப்பட்டு நடைபெற்று வரும் மதவிரோத நடவடிக்கைகளை அவதானிக்கும் எவரும், இவை மதத்தின் பெயரால் இரகசியமாக முன்மொழியப்பட்டு, திட்டமிடப்பட்ட அரசியல நிகழ்வுகளே என்பதைக் கண்டுகொள்வ்ர். 

இலங்கை அரசியல் யாப்பு தனது 111 ஆவது அத்தியாயமான அடிப்படை உரிமைகள் என்பதன் 10ஆம் பத்தியின் மூலம் அனைத்து சுதந்திரததையும் கொடுத்துள்ள அதேவேளை, பத்தி 12 (1) இல் சட்டத்தின்முன் அனைவரும் சமம எனவும், அத்தோடு அவர்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவார்கள் எ்னறு விதந்துரைக்கின்றது.  ஆனால் நடப்பவையோ
எதிர்மாறான விடயங்களே!

”111 அடிப்படை உரிமைகள்:  12 (1)  -  சட்டத்தின் முன்பு ஆட்கள்  எல்லோரும் சமமானவர்கள்; அத்துடன் அவர்கள் சட்டத்தினால் சமமாகப் பாதுகாக்கப்படுவதற்கும் உரித்துடையவர்கள்.”

இந்நிலையில், இந்நாட்டில் மதததின் பெயரால் மற்றைய மதங்களின் கடமைகள், விழுமியங்கள் ஒடுக்கப்பப்படவும், அவர்களின் வணக்கத்தலங்கள் கூட அழிக்கப்படவும் செய்யும் காடைத்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வணண்மே உள்ளன பொருட்களின் விலைவாசியைப் போன்று!  ஆனால், சட்டம் அந்த சிறுபான்மை மக்கள் சுத்ந்திரத்தைப்  பாதுகாக்கத் தவறிவிட்டது. 

அநத சிறுபான்மை இனங்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிக் கலவரத்தை உண்டாக்கும் சகல நடவடிக்கைகளையும் பொலிஸார் தடுதது நிறுத்தி, இந்நிலை ஏற்படுவதற்கு வழிவகுப்போரைக் கைது செய்திருக்க வேண்டும்.  இந்த அடாவடித்தனத்தை, யாப்பினால் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தை அனுபவிப்பதற்குத் தடையாகவுள்ள சக்திகள் யாருடையவோ ஆசீர்வாதத்ததுடன் பகிரங்கமாகவே இயங்கும் நிலையை அண்மைக் காலமாக இலங்கைப் பொலிஸ கைகட்டி, வாய் பொத்திப் பார்த்துக் கொண்டு இருப்பதுமல்லாமல், அந்தக் குழப்பங்களுக்கே அனுசரனையாகவும் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். 

இச்செயல் இலங்கையின் அரசியல் யாப்பை மீறுவது மட்டுமல்ல, அதனைச் துச்சமென மதிக்கும் அடாவடித்தனம். இதற்கு உடந்தையானோர் யாராக இந்தாலும், சட்டத்தின் முன் சகலரும் சமன் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டியவர்கள். அவர்கள் தேசத்துரோகிகளே!  

சட்டம், ஒழுங்கைத் தக்க வைத்துக் கொள்ளாத எந்த நாடும். அமைதிப் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கின்றது எனவோ, மக்களைக் காக்கின்றது எனவோ,  நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச்செல்கின்றது எனவோ கூற முடியாது. 

அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இந்நாட்டுக்கு எதிராகக் உலகளாவிய ரீதியில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கைகளைக் கண்டுணங்காணாது, நியாயப்படுத்தும் வண்ணம், குழப்பங்களுக்குப் பின்னணி உண்டென ஒருவரும், காரணங்கள் உண்டென இன்னொருவரும் கூறிச கொண்டிருக்க முடியாது. அப்படிக் கூறுவதுகூட தமது கடமையில் இருந்து தவறிய குற்றத்தை வருவித்து, நம்பிக்கைக்குப் பங்கம் விளைவித்துள்ளது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். அது அழிவின் பாதையே! 

Wednesday, January 8, 2014

Ceylon Muslim Today

Commented by nizamhm1944 on facebook      
Ceylon Muslim Today  :

பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா!
பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா!

பன்மையில் கூறப்பட்டமை பல உண்மைகளை உள்ளடக்கி இருக்கலாம்!

ஆனால், நாட்டின் ஜனாதிபதிக்கு இந்நாட்டில் நடப்பவை, தனது அமைச்சர் ஹக்கீம் கூறித் தெரிவதாயிருப்பது, அவரது படைகள் தூங்கிக் கொண்டிருப்பதையா! இருட்டடிப்புச் செய்வதையா! பொறுப்பற்றவர்களாக இருப்பதனையா!  முஸ்லிம்களின் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கை வெளிப்படுத்துவதையா! அல்லது வழமையான விடயம்தானே சொலலித்தான் என்ன நடக்கப் போகின்றது என்ற எண்ணமா!

எதுவாயினும் இது சொல்லித்தான தெரியும் என்று கூறிக்கொண்டிருக்கும் தருணமல்ல.  இரண்டு வருடங்களாகியும் இந்நிலை தொடர்வதை, “ பள்ளிவாசல்களை நாம் பாதுகாப்போம் என்ற சத்தியம் எந்த அளவிற்கு ஈடு செய்யப் போகின்றது என்பதுதான் இன்றைய இந்நாட்டு மக்களின் மனதில் எழுந்துள்ள வினா!