Thursday, February 28, 2013

முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்: விமல்

Commented by nizamhm1944 on

Lankamuslim.org

முஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்:
 விமல்


முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்களுக்கு எதிராக இந்நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடுகின்றது என்பதை வீரவன்ச அவர்கள் ஏற்றுக்‌ கொண்டிருந் தால், அவை எவருடைய சூழ்ச்சியாக இருந்திடினும், நடந்தது உண்மைதான் என்றதால், பாராளுமன்றில் இந்நாட்டில் முஸ்லிம்களின் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்படவில்லை என நிமால் சிறிபால கூறியபோது வாளா விருந்ததேனோ?

அடுத்து, அப்படி ஏதும் நடக்கவில்லை என்ற சிறிபாலவின் கருத்து உண்மை யானால், இனமுறுகலுக்கு யாரோ வித்திடுகிறார்கள் என்பது முரண்பட வில்லையா?

இவற்றில் எது சரி? விளக்குவாரா வீரவன்ச!

‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்



Commented by mizamhm1944 on:
Lankamuslim.org

One World One Ummah

‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்


இந்நாடு பல்லின மக்கள் வாழும் நாடு.  இங்கு பல்வேறு மதங்களும், கலாசாரங்களும், மொழிகளும் பின்பற்றப்படுகின்றன.  இந்நாட்டின் அரசியல் யாப்பு அவரவர் மதத்தை, கலாசாரத்தை, மொழியை பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்றது.

ஹிஜாப், அபாயா இஸ்லாமிய பெண்களுக்கு, குர்ஆன் பரிந்துரைத்துள்ள ஆடை முறையைத் தழுவியது. அதனை அணிவதற்கு இடையூறு விளை விப்போர், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்றனர் என்பதோடு, இந்த நாட்டின் யாப்பைத் துச்சமென மதித்து, மிதித்து இன்புறுகின்றார்கள் என்பதை அரசு கவனத்திற்“ கொள்ள வேண்டும்.

சட்டத்துக்கு முன்னர் யாவரும் சமன், முஸ்லிம்களும் இந்நாட்டுப் பிரஜைகள், மற்றைய இனங்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும், அவர்களுக்கும் உண்டு. ஆதலால், முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை, கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பார்ப்பது அரசின் கடமை. இதனை அரசு செய்யும் என அமைதி விரும்பும் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்

புர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸம்மில்


Commented by NizamHM1944 on:


Lankamuslim.org

One World One Ummah

புர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸம்மில்


குர்ஆன் 7:26  “ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும் படியான ஆடையையும, அலங்காரத்தையும, திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறையச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவர்கள் நல்லுணர்ச்சி பெறலாம்”. 


33:59 “ நபியே! உம்முடைய மனைவியருக்கும்,  உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர்  கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். …”  


அல் குh;ஆன் 24:31 மிகத் தெளிவாக முஸ்லிம் மாதரின் உடையைக் கூறியுள்ளது.  “இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத்  தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங் களைப் பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ள வேண்டும். ……”  

இவ்வாறு ஆண்களுக்கும் கூறப்பட்டுள்ளது.


அல்லாஹ்வின் கட்டளைகளை உய்த்துணர்வோர் கண்டு கொள்வர்


நிகாப் சம்பந்தமாக கெய்ரோ அல் அஸ்ஹர் சர்வகலாசாலை தலைவர், இமாம் அவர்களின் பத்வா: Azhar Imam Orders Niqab off, Wants Ban


IslamOnline.net & Newspapers


“The niqab is a tradition and has nothing to do with Islam,” said Sheikh Tantawi, vowing to ban it in Al-Azhar schools.

 

Wednesday, February 27, 2013

ஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான தில்லையாம்



Commented by Nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

ஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான தில்லையாம்



இஸ்லாம் முஸ்லிம்களுக்கு விதித்துள்ள சட்டம் இஸ்லாமியருக்கே தவிர வேற்றுமதத்தவருக்கு அல்ல.  குர்ஆனிய விடயங்களைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கும் போது, அரசியலைப் போன்று பேசுவது அபத்தம். நாம் விரும்பியபடி எல்லாம் விளக்கமளிக்க முற்படுவது அல்லாஹ் மேல் பொய் கூறி குற்றம், நிராகரிப்பு போன்றவற்றை உருவாக்கலாம்.

// ஹலால் உணவை உண்பதனால் ஒரு பௌத்தர் முஸ்லிம் ஆகமாட்டார். // இப்படிக கூறுவது இருபக்கமும் கூர்மையுள்ள கத்தியைப் பாவிப்பதைப் போன்றது. இதனையே அவர்கள் மாறிக் கேட்டால...

// ஹலால் அல்லாத உணவை உண்பதால் ஒரு முஸ்லிம் பௌத்தராகமாட்டார் .//  இக்கருத்து எதனைக் குறிக்கின்றது. குளிக்கப் போனவன் சேற்றைத் தன்மேல் வாரியிறைத்ததை ஒத்ததே! ஹலால் அல்லாத உணவை உண்பவன் நிராகரிப்பாளன். அவனை முஸ்லிம் எனக் கூறமுடியாது.

// உணவுக்காக கொல்லப்படும் விலங்கை நோகடிக்க கூடாது என ஹலால் கற்பிக்கின்றது //  இது நடைமுறையிலுள்ள ஷரீஆ.  ஹலால் என்றால்,  Permissible, lawful. Used especially in referance to food. - See more at: http://www.islamic-dictionary.com/index.php?word=halal#sthash.iq1BA4Eb.dpuf, என்கிறது இஸ்லாமிய அகராதி. அதாவது அனுமதிக்கப்பட்டது. சட்டபூர்வமானது. விஷேடமாக உணவைக் குறிப்பது.

ஹலால் முத்திரை பொறித்தல் ஏற்படுத்தியுள்ள அபாயமான, ”ஹறாமானவை ஹலால் முத்திரையுடன் விற்பனை” கருத்திற் கொண்டாவதாவது, அதனை நடைமுறைப்படுத்துவதில் இருந்து விலக வேண்டும்.

ஹறாம் என்றால் எதுவென்பதை அறிவதே அல்லாஹ்வின் சுன்னா. அதுவே ஹலாலைத் தேர்வதில், உண்பதில் நம்பகரமானது.  பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைத் தருவது.

Tuesday, February 26, 2013

Paristamil Tamil News - விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான, தகவல்

Paristamil Tamil News - விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான, தகவல்

Useful information.

ACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்




Comment by Nizamhm1944 on:


Lankamuslim.org
One World One Ummah
ACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்



ஹலால் என்ற அரபு வார்த்தை எந்த வகையிலும் முஸ்லிம்கள் உண்ணத் தகுந்தது என்ற கருத்தை மட்டும் வெளிப்படுத்துவதில்லை. ஆகுமானது என்ற கருத்தை வெளிப்படுத்துவது. அதனால் முஸ்லிம் விரோத சக்திகள் பன்றி இறைச்சியைக்கூட ஹலால் முத்திரை பொறித்து விற்பனைக்கு விட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே!

இதனைச் சட்டபூர்வமாகவும் தடை செய்திட முடியாது. காரணம் பன்றி இறைச்சியோ அதனோடு ஒட்டிய பண்டங்களோ விற்பனை செய்வது குற்றச் செயலல்ல. ஆங்கில வார்த்தைகளை எப்படி யாருடைய அனுமதியுமின்றி பாவிக்க முடியுமேர் அப்படி ஹலால் என்ற வார்த்தையையும் பாவிக்க முடியும். நமக்கு ஹறாமானவை பிறருக்கு ஹலால் என்பதால், விரும்புவோருக்கு ஆகுமானது என்ற கருத்தை ஹலால் என்ற பதம் கொண்டுள்ளது.

உணமையில் முஸ்லிம்கள் மட்டுமே இந்த சூழ்ச்சியால் பாதிக்கப்படுகிறார்கள். காரணம், அவர்கள் ஹலால் என்ற வார்த்தையைக் கண்டதும், அது இஸ்லாமியர்கள் உண்ணக் கூடியது எனக் கருதுகிறார்கள்.

அதனால் ஹலால் என்ற சொல்லைப் பாவிப்பதைவிட்டு, மாற்று நடைமுறையாக மிகவும் பொருத்தமானதாக, சிக்கலற்றதாக, செலவினத்தைக் கூட்டாததாக, மதசார்பற்றதாக, எவரதும் எதிர்ப்புக்கு ஆளாகாத தன்மை கொண்டதாக, சட்டத்தால் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை கொண்டதாக, மீறினால் தண்டிக்கப்படக் கூடியதாகவுள்ள, PORK FREE போன்ற சொற்றொடரைப் பாவிக்கலாம். இதனை அ.இஜஉ வே அரசுக்குப் பரிந்துரை செய்யலாம்.

இதுஅல்லாஹ்வன் ஹறாமைத் தவிர்க்கும் முறையை அடியொட்டிய நடவடிக்கையே!

Paristamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் கூறி மறுத்த சிங்களம்

Paristamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் கூறி மறுத்த சிங்களம்


// விஜயன் இறங்கிய இடம் அழகிய இயற்கைக் காட்சிகள் கொண்டது. அங்கு ஒரு மரத்தடியில் குவேனி என்ற பெண் அமர்ந்திருக்கிறாள். இவள் ராட்சச குலத்தைச் சேர்ந்தவள்.//

// இதனால் வேதனை அடைந்த குவேனி, குழந்தைகளை அழைத்துக்கொண்டு "லங்காபுரா'' என்ற இடத்துக்கு போய்விடுகிறாள். இவர்களுடைய வம்சாவளியினர், இலங்கையின் பழங்குடியினராக உள்ள வேட்டுவர்கள்.//

மேற்கண்ட இரு பந்திகளும் முரண்படுமாறைக் கவனிக்கவும்.

உண்மையில், குவேனி இயக்க குலத்தைச் ‌சேர்ந்தவள். அக்காலை இந்நாட்டில் வாழ்ந்தோர் இயக்கர், நாகர், வேடர் என்ற மூவினத்தவர்களே என வரலாறு கூறுகிறது.  தற்போது அவ்வினங்களில் வேடர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இவர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள். மற்றைய அனைவரும் வந்தேறு குடிகளே என்பது இதன் மூலம் பெறப்படும்.

இன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மாநாடு



Comment of nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah
இன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மாநாடு



அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடனான தனது கலந்துரை யாடலின் போது, ஹலால் சான்றிதழ் வழங்கி, ஹலால் முத்திரை பொறிக்கும் முறை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல, வியாபாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே தம்மால் ஆரம்பிக்கப்பட்டது எனக் கூறியதாக, முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் அவர்கள் தனது பீபீஸி உடனான செவ்வியில் கூறியிருந்தார்.

றிஸ்வி முப்தி அவர்களின் இந்த விளக்கம், நிச்சயமாக ஹலாலை வெளிப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை உருவாக்கப்படவில்லை, வியாபார ரீதியாக தமது உற்பத்தியைச் சந்தைப்படுத்துவதற்கு ஹலால் என்ற அரபு வார்த்தை மிகவும் உதவியாக இருக்கும் என்ற வகையிலே, வியாபாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்றவே ஆரம்பிக்கப்பட்டது என்பது மிகவும் துல்லியமாகத் தெரிய வருகின்றது.

இந்த ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை முஸ்லிம் அல்லாதோரின் எதிர்ப்புக்களை உருவாக்கியுள்ளது, அதனால் ஏற்பட்டுள்ள அபாயங்கள் அனைத்தையும் விட, முஸ்லிம்கள் தமது ஹலாலான உணவை இனங் காண்பதில், குர்ஆனியச் சட்டத்தை ஏற்று ஹறாமைத் தவிர்த்தலில் தவறிழைத்துவிட வேண்டிய சந்தர்ப்பத்தை உருவாக்கியுள்ளது.

அரபுச் சொல்லான ஹலால் வார்த்தையைக் கொண்ட முத்திரையை யாரும் பாவிப்பதை சட்டபூர்மாகத் தடைசெய்ய முடியாது. எப்படி ஒரு உற்பத்தியாளன் ஆங்கில வார்த்தையைப் பாவிப்பதில் தடை இல்லை யோ, அப்படியே அரபிப் பதமான ஹலால் என்ற வார்த்தையைப் பாவிக்க முடியும்.

பன்றி இறைச்சி முஸ்லிம்களுக்கே தடைசெய்யப்பட்டுள்ளதால், அதனை விரும்பி உண்பவர்களுக்கு அது தடை செய்யப்படவில்லை. அதனை விற்பது குற்றச் செயலுமல்ல. அந்த ஹலால் என்ற வார்த்தை ஆகுமானது எனக் கூறும் ஆங்கில வார்த்தையை ஒத்ததே! அதனால் சட்டபூர்மாகவும் ஹலால் என்ற முத்திரையைப் பொறித்து பன்றி இறைச்சியை விற்பனை செய்வதைத் தடை செய்ய முடியாது.

இந்நிலையில், ஹலால் முத்திரை பொறிப்பதை ஏற்றுள்ள முஸ்லிம் கள், தாம் சாப்பிடுவது ஹறாம் என்பதை அறியாது, ஹலால் முத்திரை பார்த்துத் தமது உணவைத் தீர்மானிக்கும் புதிய நடைமுறையால், ஹலால் முத்திரை கொண்ட பன்றி இறைச்சியை வாங்கி உண்ண வேண்டிய நிலை தானாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆதலால், ஹலால் முத்திரை பொறிக்கும் வழக்கம் கைவிடப்படுவதே சிறந்ததும், பாதுகாப்பானதும், முஸ்லிம்கள் ஹறாமைத் தவிர்க்க உதவுவதும், பிரச்சினைகளை உருவாக்காததும், எதிர்ப்புக்களை விலக்குவதும்.

அரசு வேண்டுமானால், Fat Free, Sugar Free, Alcohol Free, Cholesterol Free என்பது போல், Pork Free என்ற வாசகத்துடனும், உணவுப் பொதியுள் உள்ள பண்டத்தில் கலக்கப்பட்டுள்ள நிறமூட்டி, சுவையூட்டி, பழுது படாது பாதுகாக்கப் பாவிக்கப்படும் பொருட்கள் போன்றவற்றை அட்டவணைப்படுத்த வேண்டும் எனக் கேட்கலாம்.

இம்முறையால், தவறிழைக்கும் உற்பத்தியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கலாம், Pork Free என அச்சிடுவதற்காக விஷேட கட்டணங்கள் அறவிடத் தேவையில்லை, பாவனையாளருக்கு தாம் என்ன சாப்பிடுகிறௌம் என்பது உறுதியாகத் தெரிகிறது, மதவிரோதக் கருத்துக்களோ , மதம் சார்ந்த நிலையோ ஏற்படப் போவதில்லை.

Monday, February 25, 2013

வட்டதெனிய: அடுத்த சமூகத்தவரின் கவலையில் நாமும் பங்குகொள்கிறோம்





Lankamuslim.org
One World One Ummah

வட்டதெனிய: அடுத்த சமூகத்தவரின் கவலையில் நாமும் பங்குகொள்கிறோம்


Comment of NizamHM1944

குர்ஆன் ஒரு ஆன்மாவில் இருந்தே அனைவரையும் படைத்ததாகக் கூறுகிறது. அதனால் மனித உயிரில் பேதமில்லை.  தக்க காரணமின்றி ஒரு மனிதனைக் கொல்வது முழு மனித சமுதாயத்தையுமே கொன்றதற்கு சமன் எனக் கூறி மனித உயிரன் மகத்துவத்தைப் போதிக்கின்றது, இஸ்லாம்.

நல்லவன் தீயவன் எனப் பாராது அனைவருக்கும் உணவளிப்பதைத் தனது கடமையாகக் கொண்டுள்ளான் அல்லாஹ். மேலும், உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு என்ற தொடரின் மூலம் அவரவர் விரும்பிய மார்க்கத்தில் வாழ்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்னும். மார்க்கத்தில் பலவந்தமில்லை என்ற கு‌ர்ஆனியக் கொள்கையும் மாற்று மதத்தினரின் உரிமைக்கு எவ்வித குந்தகத்தையும் இஸ்லாம் வலியறுத்தவில்லை என்பதை விளக்குவதே!

இஸ்லாமிய தர்மம் (ஸதக்கா), ஏழைவரி (ஸக்காத்) என்பன வழங்கப்பட வேண்டியவர்களாகக் குர்ஆன் குறிப்பிட்டுள்ள மனிதர்களை நோக்குவோர், இஸ்லாத்தின் பரந்த நோக்கையும், மனிதரில் அது கொண்டுள்ள அக்‌கறையையும் அறிந்து வியப்பர்.  உலகில் எந்த சட்டத்திலும் காணப்படாத உயரிய பண்பே,  வறியவர், ஏழைகள், கடனாளிகள், வழிப்போக்கர், விடுபட வேண்டியோர் போன்றோரை தர்மம், ஏழைவரி போன்றவற்றைப் பெறத் தகுதி படைத்தவர்களாகக் கூறியிருப்பது. இந்த குர்ஆனிய சட்டத்தில், காணப்படும் உயர் பண்பு, உலக மாந்தரில் நலிவுற்றோரை, சநதர்ப்பவசத்தால் பிரச்சினை களைச் சந்திப்போரை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே தவிர, முஸ்லிம்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, என்பதற்கொப்ப நாம் செயற்படும் போது, நமக்கெதிராக உலகில் எந்த சக்தியும் உருவெடுக்காது.

இன்னும் நமது சொத்தில், யாசிப்போருக்கும், யாசியாதோருக்கும் பங்குண்டு எனக் கூறி, மனித வர்க்கத்தை பிச்சைக்காரராக, அல்லது இல்லாதவராகப் பாராது, அவர்களை நமது சொத்தில் பங்காளர்களாகப் பார்க்கின்றது இஸ்லாம். இதன் மூலம் அவர்களை நமது சகோதரராகவே ஏற்க வைக்கின்றது. இதன் மூலம் சகோதரத்துவத்தை உருவாக்கும் மார்க்கம் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டுகின்றது. இன்னும் நிறையவே உண்டு. அல்லாஹ் நாடினால் சந்தர்ப்பம் வரும்போது வெளிவரும்.

இன் ஷா அல்லாஹ் நாம் அல்லாஹ் கூறியபடி நடப்போமாயின் அகில உலகும் நம்முடன்தான்.

Sunday, February 24, 2013

ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார்





Lankamuslim.org
One World One Ummah
ஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார் 

Comment by NizamHM1944

ஹலால் முத்திரை பொறிப்பது ஆபத்தானது. முத்திரையைப் பார்த்து உண்பது பிழையான நடைமுறை. அது ஊழல்களுக்கு இடமளிக்கும். அதனை அரசு செய்தாலும் அதே நிலைதான். ஹலால் என்ற ”முத்திரை” எவரும் உண்ணலாம் என்பதை வெளிப்படுத்துமே தவிர, முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்பதை வெளிப்படுத்தாது.


பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் வெளிவருவது, நீதிமன்றத்தால்கூட தடைக்குள்ளாக்கப்படவோ, தண்டிக்கப்படவோ, வா‌டிக்கையாளரை ஏமாற்றியதாகவோ கருத முடியாது. ஆங்கிலச் சொல் ஒன்றைப் பாவிப்பதற்குக் கொடுக்கப்படும் அதே உரிமைதான் அரபுச் சொல்லைப் பாவிப்பதற்கும் கொடுக்கப்படும். ஆதலால் ஹலால் முத்திரை பொறிப்பது நிறுத்தப்பட வேண்டியதே!

எனவே, அரசு தற்போது நடைமுறையில் இருக்கும் , உணவுப் பொதியின் மேலுறையில், அதனுள் அடக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுவதற்கு மேலதிகமாக, சுவையூட்டிகள், வர்ணங்கள், பழுதுபடாது பாதுகாக்கும் பண்டங்கள் அல்லது இரசாயனக் கலவைகள் (Preservatives) போன்றவற்றையும் துல்லியமாகப் பெயர் குறிப்பிட்டு வெளியிட வேண்டும் எனச் சட்டமியற்றினால், அது பின்பற்றப்பட்டால், அதுவே பானையாளர் அனைவரும் தமக்கு ஆகாததைத் தவிர்த்துக் கொள்ளப் பேருதவி செய்யும். எவருக்கும் எவ்வகையான பிரச்சினைகளும் எழ இடமுமில்லை. அனைவருக்கும் பயன்படும் முறை.




மேற்கண்ட எனது பதிவுக்கு மேலதிகமாக, விற்பனைக்கு விடப்படும் உணவுப் பொதிகளின் மேலுறைகளில், தற்போது Fat Free, Alcohol Free, Sugar Free எனப் போடுவது போல் Pork Free அல்லது அதையொத்த வேறு ஏதாவது சொற்றொடர்களைப் பிரசுரிக்கலாம்.

அதனை அரசும் உறுதிப்படுத்தலாம். இது யாருக்கும் மேலதிகச் செலவினங்களையோ, எதிர்க்கருத்துக்களையோ, மதசார்பானது என்ற கருத்தையோ வெளிப்படுததாது. பாவனையாளர் பாதுகாப்பு என்ற சட்டத்துள் சங்கமமாகிவிடும்.

Friday, February 22, 2013

முஸ்லிம்களுக்காக தமிழரும் , தமிழருக்காக முஸ்லிம்களும் என்று ஒரு வரலாறு இருந்தது



Lankamuslim.org
One World One Ummah இல்  Comment on

முஸ்லிம்களுக்காக தமிழரும் , தமிழருக்காக முஸ்லிம்களும் என்று ஒரு வரலாறு இருந்தது

by NizamHM1944


1990 இல் பயங்கரவாதிகளான புலிகளால் கொள்ளையடிக்கப்பட்டு, கொலைப்  பயச்சுறுத்தலுடன், பலவந்தமாக விரட்டியடிக்கப்பட்ட நிராயுதபாணிகளான குற்றமற்ற அந்த வட பகுதி முஸ்லிம்களுக்கு அவர்தம் மீள்குடியேற்றத்தின் போது அரசால் செய்யப்பட வேண்டிய விடயங்கள்மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களுக்கு என்னால் 2009 இல் எழுதப்பட்டது.

அதன் முக்கியமான பகுதிகளை இங்கு மீள் குடியேற்றம் செய்யப்படுவோரின் நன்மை கருதி பிரசுரிக்கின்றேன். அது உரியவர்களது கவனத்தை ஈர்க்க வேண்டும். அச்சந்தர்ப்பத்தில் தற்போது எழுப்பப்படும் ‌துவேஷங்கள் தானாக மறைந்து விடும். உண்மைகள் வெளிப்படும். உரிமைகள் நிலைநாட்டப்படும். இழப்புக்கள் மீட்கப்படும்.

4.1. Disturbance in Ethnic Ratio
a) Restoring the ethnic ratio in the District to 1990 level.
b) Ensure restoration to ethnic group the villages inhabited in 1990, if any change in the composition of ethnicity had taken place.

4.2. Deprivation of Movable and Immovable Properties
a. Restoring the status quos to 1990 October , 29th (the date of eviction being October, 30th) of all the immovable properties including lands, houses, shops, stores, mills,  paddy lands and other cultivations inhabited and uninhabited lands that were left high and dry due to sudden eviction without any rhyme or reason.
b. Payment of adequate compensation for the period of loss or damage caused to movable properties, agricultural implements like tractors, transportation means motor vehicles including lorries trucks etc..
c. Adequate compensation for loss of income for twenty years, due to non  pursuance of agricultural activities, business activities and non pursuit day to day other professions.

4.3. Education setbacks
a) Recompense and reparation for loss or disruption of educational facilities due to sudden change of residence which necessitated change of schools and /or denial of admission on residential consideration. (In this instance I would like to draw a corollary to what was done by Singapore/Malaysia Governments just after the World War II – 1945, where even the Birth Certificates were altered by adding five years to the date of birth.)

4.4. Draw backs in Employments
a) Hypothetical retirement benefits as on reaching sixty (60) years for those who had opted to retire prematurely in 1990.
b) Affording priority consideration and age concession when recruiting personnel for any employment in Govt and Private sector.

4.5. Recompense for loss of business/income
a) Restoring various business agencies lost due to eviction in 1990.
b) Exemption from all taxes like income tax, business turn over tax to local body rates. Alternatively if payments have already been made, reimbursement of such payments, along with tax exemption for another ten years on compassionate consideration.

4.6. Retardation of development work
a) Reactivating all development work that got suspended in 1990 due to eviction along with implementation of plans that would have otherwise gone on schedule.

ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை




Lankamuslim.org
One World One Ummah இல்  Comment on

ஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை

by NizamHM1944



பாராளுமன்றில் முஸ்லிம்களுக்காக பேச முஸ்லிம் பிரதிநிதிகள் எவருமே இல்லையென்ற நிலையில் எதையாவது, மிகவும் குறைந்த பாராளுமன்ற அனுபவத்தைக் கொண்ட வன்னி பா.உ. ஹுனைஸ் பாறூக் அவர்கள் அவ்வப்போது துணிந்து சில உண்மைகளையும் வெளியிடுகிறார்.

புலிப்பயங்கரவாதிகளால் இனச்சுத்திகரிப்புக்கு உட்படுத்தப்பட்டு அகதிகளாக்கப்பட்டு,கடந்த இருபத்திரண்டு வருடங்களாக அல்லலுறும் வடக்கு முஸ்லிம்கள் பற்றி எவரும் சிந்திக்காத நிலையில், அவர் வெளிப்படுத்தும் சில கருத்துக்கள் NGOO கூட முஸ்லிம்கள் விடயத்தில் பாரபட்சம், கண்டுங்காணா மன்ப்போக்கை அம்பப்படுத்தியுள்ளன.

1990 முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்ட போது, அவர்களுக்கு ஒரு போத்தல் தண்ணீரோ, அவர் தம் பாலகருக்கு ஒரு பால் மா பைக்கற்றோகூட கொடுத்திருக்கவில்லை என்பது மிகவும் கசப்பான செய்தியே! அப்போதைய அரசுகூட அவர்கள் விடயத்தில் இதே மனப்போக்கைக் கொண்டிருந்தமை என்பது வரலாறு.

தற்போது அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற முனையும் சந்தர்ப்பத்தில் நடப்பவைகளைப் பார்த்தால் ஆகக் குறைந்த மனித நேயம்கூட அவற்றை எதிர்ப்பவர்களிடம் காணப்படவில்லை என்பதே தெரிகிறது.

நடைபெறும் மீள்குடியேற்றம்கூட, வடக்கு முஸ்லிம்களை எப்படியாவது அங்கு கொண்டு போய்ச் சேர்த்து இந்நாட்டில் முஸ்லிம்கள் அகதிகளாக இல்லை என்ற அடிப்படையில் செய்யப்படுவதாகவே தெரிகிறது.

அவர்கள் 1990 இல் வெளியேற்றத்துக்கு உட்படுத்தப்பட்ட போது அனைத்தும் பறிக்கப்பட்ட நிலையில், வெற்றுக் கையினராக வெளியேறினார்கள். அவர்களது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் பொருளாதாரம் முழுமையாகச் சூறையாடப்பட்டது. வர்த்தகம் பறிக்கப்பட்டது. கல்வி பாழடிக்கப்பட்டது. அவர்களது வருவாய் முற்றுமுழுதான அழிவுக்கு உள்ளாக்கப்பட்டது. அவர்கள் பஞ்சை, பராரியாக்கப்பட்டார்கள்.

அவர்களுக்கு அரசு கொடுத்த நிவாரணமோ ஒருவருக்கு மாதம் ரூபா 260/- மட்டுமே. அதனைப் பெறுவதற்கும் அதே அளவு பணத்தைச் அதிகமான வேளைகளில் பல்வேறு வகையில் செலவழித்தேயுள்ளனர். வருடமொரு முறை அவர்கள் வெளி‌யேற்றம் நினைவு கூரப்பட்டது, அரசியல்வாதிகளின் இருப்பைக் காத்துக்கொள்ள. ஊடகங்கள் எந்த அளவுக்கு இருட்டடிப்புச் செய்ய வேண்டுமோ அதைவிடக் கூடுதலாகவே அக்கைங்கரியத்தைச் செய்தனர், செய்து வருகின்னறர்.

ஆதலால், வெறுமனே மீள் குடியேற்றத்தோடு அம்மக்களை அம்போ என விட்டுவிடாது, அவர்களது அனைத்து இழப்பீடுகளும் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுந்த நிவாரணம் அளிக்கப்பட வேண்டும். அதற்காக ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உ்ணமை நிலையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். அவர்கள் இந்நாட்டுப் பிரஜைகள், மனிதர்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

Paristamil Tamil News - உண்மையான பார்வை!!!

Paristamil Tamil News - உண்மையான பார்வை!!!

Very good message to those write here also. People will be assessed by their words!

ஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன




Lankamuslim.org
One World One Ummah ,

இல் வெளியான

ஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன



Comment of Nizam HM.1944

உண்மையில் ஹலால் சான்றிதழ் வழங்கலும், ஹலால் முத்திரை பொறிக்கும் வழமையும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உருவாக்கியதல்ல, அது வியாபாரிகளின் வேண்டுகோளை ஏற்று ஆரம்பிக்கப்பட்டது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாயவுடனான சந்திப்பில், அஇஜஉ தலைவர் றிஸ்வி முபதி அவர்கள் கூறியதாக, BBC யுடனான செவ்வியில் முஸ்லிம் கவுன்சில் தலைவர் அமீன் அவர்கள் தெரிவித்தார்.

அல்ஹம்துலில்லாஹ். இது நாள் வரை, “ஹலால் முத்திரை பொறித்தல்“ இஸ்லாமியருக்காக, விஞ்ஞான வளர்ச்சியடைந்துள்ள தற்போதைய ‌உலகத்தில், முஸ்லிம்கள் ஹலால் உணவை‌க் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருப்பதால், அந்நிலையை மாற்றியமைப் பதற்கான நடவடிக்கையாகவே, அஇஜஉ வின் ஹலால் பிரிவால், இங்கு உற்பத்தியாகும் சகல உணவுகளையும், தம் பரிசீலனைக்கு உள்ளாக்கி, அதன் புனிதத் தன்மை தங்களால் ஏற்கப்பட்டு, அது தம்மால் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னரே, உண்ணத் தகுந்தது எனக் கூறி சான்றிதழ் வழங்கி வந்தமை, மேற்கண்ட, அஇஜஉ தலைவரின் கூற்றுடன் முற்றுப் புள்ளி வைக்கப்படுகின்றது.

இது, இஸ்லாமிய நடவடிக்கை அல்ல என்பதும், அவர்களால் உருவாக்கப்பட்டதல்ல, அது வியாபாரிகளின் வேண்டு கோளை நிறைவேற்ற ஆரம்பிக்கப்பட்ட ஒரு செயற்பாடே என்பதும் மிகவும் தெளிவு.  அதனால், இஸ்லாம் நவீன காலத்துக்கு செல்லுபடியாகாத மார்க்கம், அதற்கு வேறு யாருடையவோ பங்களிப்பு இன்றி அதனைச் செயற்படுத்துவது கஷ்டம், அதற்காகவே அஇஜஉ அக்கைங்கரியத்தைச் செய்து வந்தது என்ற மாயை ஒழிந்தது.

இதன் மூலம், இஸ்லாம் முழுமையானது, தெளிவானது, இலகுவானது, எக்காலத்துக்கும் பொருத்தமானது, யாராலும் பங்களிப்பு்ச் செய்யப்பட முடியாதது, அது காலதேய வர்த்தமானங் களுக்கு, மாற்றங்களுக்கு ஏற்ப விரிவடைந்து முழு உலகையும் வியாபித்து நிற்கும் மார்க்கம் என்ற குர்ஆனிய கருத்தை அஇஜஉ தலைவர் றிஸ்வி முப்தி அவர்கள் ஊர்ஜிதப்படுத்தி யுள்ளார்கள்.

ஆம், உலகின் எந்த மாற்றமும் அல்லாஹ்வை இயலாமல் ஆக்கிவிட முடியாது என்பதும், அவனுடைய ஹறாமைத் தவிர்த்துக் கொள்ளும் அறிவும், நடை முறையுமே எக்காலத்துக்கும், எவருக்கும், எவ்வித இடையூறுமின்றி, படித்தவன் முதல் பாமரன் வரை இலகுவாக, குறுகிய நேரத்தில், சிக்கனமாக அறிந்து பின்பற்ற முடியும் என்பதை வெளிப்படுத்தி உள்ளது. 1400 வருடங்களுக்கு மேலாக உலக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்ட ஹறாமைத் தவிர்த்தல் என்ற குர்ஆனிய நடைமுறை முஸ்லிம்களால், உலக அங்கீகாரத்துடன் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வந்துள்ளது.

மேலும், பல் வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், முக்கியமாக பன்றி இறைச்சி போன்ற ஹறாமான உணவுகள் ”ஹலால் முத்திரை” யுடன் விற்பனை செய்யப்பட்டு, அதனை முஸ்லிம்கள் வாங்கி உண்ணும் அபாயமும் தவிர்க்கப்படும். மக்களுக்குத் தேவையான அறிவு ஹறாம் பற்றியதே. அதனை அறிந்தால் தானாக ஹலால் எதுவென்பது தெரிந்து விடும்.

இஸ்லாமிய விரோத சக்திகளால், காலத்துக்குக் காலம், இஸ்லாத்தை அழிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சில திட்டமிட்ட சூழ்ச்சிகள், இஸ்லாமிய போர்வையில் வெளியிடப்பட்டன. இவை அடுத்துக் கெடுக்கும் தந்திரம். அவற்றில் ஒன்றே ஹலால் முத்திரை பொறித்தல் என்ற செயற்பாடு. இது எங்கு, எப்போது, யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட வேண்டியது. நிறுத்தப்பட வேண்டியது.  அல்லது புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டியது.

இந்த நடைமுறை, நாளாவட்டத்தில் முஸ்லிம்கள் ஹறாம் எதுவென்று அறியாது, ஹலால் முத்திரை பொறிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை எவ்வித சந்தேகமுமின்றி வாங்கி அருந்தும் பயங்கர நிலை ஏற்பட வேண்டும் என்பதனை எதிர்பார்த்துச் செய்யப்பட்டதே!

அல்லாஹ் சூழ்ச்சிக்காரர்களுக்கொல்லாம் சூழ்ச்சிக்காரன் என்பதால், அவர்களது விரலை எடுத்து அவர்களின் கண்ணில் குத்தி, இரும்பால் வரும் ஆபத்தை இரும்பைக் கொண்டே தடுத்துக் கொள்ளும் பாணியில், அவர்களின் ஹலால் முத்திரையைக் கொண்டே, அவற்றில் ஹறாமான பன்றி இறைச்சியை பொதியிட்டு, அதனை மக்கள் அறிய வைத்து, அதிலுள்ள தீமையை அம்பலப்படுத்திவிட்டான். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, February 20, 2013

Buddhist party for ban on halal food


      Comment on     KHALEEJ TIMES                              

Buddhist party for ban on halal food

Muslims of this country were enjoying their Halal meals without any difficulty or hindrance. Almost all meat stalls are run by Muslims only.  This is in practice from the inception of Islam in this country and the Haram is known worldwide.

Few years ago some mischief makers introduced the Halal Stamps on their own to increase their business and with a hidden agenda of make the Muslims to rely mainly on the Halal stamps to choose their Halal Foods.  The agenda is working very well and the Prohibited Pork (Flesh of Swine) is sold out in super markets with Halal Stamps.

Those days, before Halal Stamps, people were concerned on avoiding Haram. Now the trend is changed and all had been trapped by HALAL STAMPS.  This is the victory of those introduced the Halal Stamps to misguide the Muslim mass and depend them on Halal Stamps.

Allah has not given anyone to give certificates to the meals He provided as Halal except the four as per Quran 16:115 etc.

Another danger is,  pure food without Halal Stamps are being considered as Haram. This is total rejection of Holy Quran. See HQ 42:21.  Again the same is stamped as Halal after buying the Halal Certificate.  Here the money or the issuing authority takes power of Allah. This is ‘Shirk’.

Hence, the verse of the Holy Quran rejects defining Haram and Halal.  16:116 -  “But say not - for any false thing  that your images tongues may put forth- , ‘This is for lawful, and this is forbidden’ so as to ascribe FALSE THINGS TO Allah. For those who ascribe false things to Allah, will never prosper.” –  That is what happening to THE Sri Lanka Muslims under the  (mis) guidance of ACJU.

All these problems, misunderstanding and protest arose escalated after the issuance of the Halal Certificate by ACJU only. Their main question is, why should the Non-Muslim people pay more money for the foods, as because of payment to obtain Halal Certificates and permission to print Halal Mark Stamps to the product from ACJU?

The Quranic Sharia of Halal and Haram are purely for Muslim Individuals and not for Community as a whole.  Holy Quran 16:115 – He has only forbidden you dead meat, and blood, and the flesh of swine, and any (food) over which the name of other than Allan has been invoked. But if one is forced by necessity, without wilful disobedience, nor transgressing due limits, - Then Allah is Oft-Forgiving, Most Merciful.  For an example of compulsion: Chlorine, used for the Purification of water is harmful if consumed. The same is applicable to the preservatives as well.

Non-Muslim producers of food have to pay a huge amount of money as per their turn over, increase the cost of product and, that has been imposed on Non-Muslim consumers. Their question is why should we pay for food consume by Muslims as halal and why should we eat their food recommended by their religion. And also they ask is will the Muslims drink water, if we give a water bottle with a Pririth thread?

If we expect the Non-Muslims to buy the food with Halal Stamps, why should they expect their things to be bought and consumed by Muslims?

This is why Allah ask us to refrain from imposing compulsion on others. Holy Quran 2:256- Let there be NO COMPULSION IN RELIGION.


http://www.khaleejtimes.com/displayarticle.asp?xfile=data/international/2013/February/international_February784.xml&section=international&col=




Monday, February 18, 2013

Paristamil Tamil News - கோப்பியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லது

Paristamil Tamil News - கோப்பியை விட தேனீர் ஆரோக்கியத்திற்கு நல்லதுநாளைய ஆராய்ச்சி என்ன கூறப்போகின்றதோ!

மக்களுக்கு, விஷேடமாக இந்நாட்டு மக்களுக்குப் பல் வேற வகையில் இது ஒரு நற் செய்தியே!  தங்கள் உடல் நலத்தைக் காப்பதோடு, இந்நாட்டின் முக்கிய வருமானம் தரும் தேயிலைக்கு உலகில் மேலும் மவுசு கூடும், சந்தை அதிகரிக்கும், வருவாய் கூடும், நாடும் பொருளாதாரச் சீர்கேட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும். 

இப்படி நல்லவை நடப்பதற்கு, நாட்டு நிலைமையும் நல்ல விதமாக அமைய வேண்டும். இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்படல் அவசியம். 


Sunday, February 17, 2013

Paristamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் பாதுகாப்பு அளிப்போம்! மனுவல் வால்ஸ்!

Paristamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் பாதுகாப்பு அளிப்போம்! மனுவல் வால்ஸ்!


எப்போது ஒரு நாடு இன்னொரு நாட்டவரை தம் நாட்டுக்கு வருவதற்கு அனுமதியளிக்கின்றதோ, அன்றேல் வாழும் உரிமையை வழங்குகின்றதோ, அப்போதிருந்தே அந்நாடு, அங்கு வருகை தந்துள்ள  பிரஜைகளின் பாதுகாப்பு, மற்றும் நலன்களின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.  இது அவர்களது தார்மீகக் கடன்.

இதனால்தான் இஸ்லாம் வழிப்போக்கருக்கும், தர்மத்தில், ஏழை வரியில் கூட ஒரு பங்கைக் கொடுப்பதைக் கட்டாய கடமையாக்கி உள்ளது.  இன்னும் ஒரு படி மேலே சென்று,  யாசிப்போர், யாசியாதோருக்கு முஸ்லிம்களின் சொத்தில் ஒரு பங்குண்டு எனவும் கூறுகின்றது.

Tuesday, February 12, 2013

Comment on 2013ஆம் ஆண்டை ஹலாலை ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடணப் படுத்தியுள்ளோம்


பொது பல சேன அமைப்பின் தேரர் அவர்களுக்கு தமது மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கு முழு உரிமையும் உண்டே. ஆனால், தேரர் அவர்கள், தமக்கு பாதிப்பு ஏற்படும் விடயங்களைச் சம்பந்தப்பட்டவர் களுடன் பேசித் தீர்ப்பதை விடுத்து, சிங்கள மக்களைப் போன்று இந்த நாட்டின் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்து, இந்த நாட்டின் நலத்துக்கு என்றுமே களங்கத்தையோ, அச்சுறுத்தலையோ, குழப்பத்தையோ விளைவிக்காத அனைத்து முஸ்லிம்களுக்கும் அவர்கள் தம், வணக்க ஸ்தலங்களுக்கும், மதக்கிரியைகளுக்கும் எதிராகப் பேசுவது, அவருக்கும், அவர் பின்பற்றும் மதத்துக்கும் ஆகுமானதல்ல.

இந்த நாட்டின் சுயாதிபத்தியத்துக்கு , அந்நியர்களாலும், தமிழர்களாலும், ஏன் சிங்களவர்களாலும்கூட, ஆபத்து ஏற்பட்டிருந்தது. ஆனால், சிறுபான்மையாக வாழ்ந்தாலும், இலங்கையின் அனைத்து பகுதிகளிலும், மற்றைய சமூகங்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தம் பாஷை களையும் பேசி, அந்நியோன்யமாக, அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

மேலும், நான் மேலே கூறியபடி அந்நியரால், தமிழரால், சிங்களவரால், இந்நாட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் கூட, முஸ்லிம்கள் அவர்களுடைய போராட்டத்துக்கு ஒத்துழைப்புக் கொடாமல், நாட்டின் நலன் கருதி அரசுக்கே தமது ஆதரவை நல்கி வந்துள்ளனர் என்பது வரலாறு. இன்றும் அந்நிலையில் எவ்வித மாற்றமுமில்லை.

எமது இயல்பு வாழ்க்கைக்கும், மதக் கிரியைகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தப் பட்டுள்ள இந்நிலையிலும் கூட, நாம், அயல் நாட்டிடமோ சர்வதேசத் திடமோ அன்றி முஸ்லிம் நாடுகளிடமோ எமது பிரச்சினையை முன் வைத்து, உதவி பெற முனையவில்லை. மாறாக, எமது அரசிடமும், இந்நாட்டின் ஜனாதிபதியிடமுமேதான் நிவாரணம் தேட முனைகிறோம் என்பது ஒன்றே நாம் இந்நாட்டில் கொண்டுள்ள பக்தியை, மதிப்பை வெளிப்படுத்தப் போதுமானது. இது நாம் திட்டமிட்டுச் செய்யும் செயலல்ல. இயல்பாகவே நம்மால் செய்யப்படும் செயல். எனது குடும்ப அங்கத்தவர் ஒருவர் எனக்கு தீமை செய்தால், நான் எப்படி அயல் வீட்டாரிடம் உதவி தேடாது, வீட்டின் தலைவரான தகப்பனிடமோ, தாயிடமோ நிவாரணம் பெற முனைவோமோ அதைப் போன்ற செயலே!

முஸ்லிம்கள் மத மாற்றம் செய்கின்றார்கள் என்பது முழுமையான உண்மையல்ல. தாமாக யாரும் விரும்பி இஸ்லாத்தை ஏற்பாராயின் அதற்கு தடை செய்யும் உரிமை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வில்லை. அது போன்றே எவரையும், பலவந்தமாக, அவர்கள் தம் இயலாமையை, ஏழ்மையை, அறியாமையைப் பயன்படுத்தி அவர்களை மதமாற்றம் செய்யும் உரிமையும் இஸ்லாத்தில் வழங்கப்படவில்லை.

இஸ்லாமியர் யாருக்கும் உதவி செய்வதாக இருந்தால் கூட, ஏதாவதொன்றை அடையும் நோக்கில், உதவி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும். பெரிதாக எதையோ அடைவதை உள்நோக்காகக் கொண்டு, சிறிய உதவிகளைச் செய்வதைக் கூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நாம் முஸ்லிம்கள், அல்லாஹ்வைத் தவிர எவரும் மனிதருக்கு வழிகாட்டிட முடியாது என்பதில் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளதால், எவரையும் நிர்ப்பந்தித்தோ, சூழ்ச்சிகள் தந்திரங்கள் செய்தோ, பொருளாதாரத்தைப் பாவித்தோ மதமாற்றத்துக்கு உட்படுத்த அனுமதியில்லை.

முஸ்லிம்கள் சிங்களவர்களை மதமாற்றம் செய்திருந்தால், இன்று சிங்கள கிறிஸ்தவர்கள் இந்நாட்டில் காணப்படுவது போல் சிங்கள முஸ்லிம்களும் இருந்திருப்பர். நிர்ப்பந்த மதமாற்றத்தை இஸ்லாம் அனுமதியாததன் காரணமாகவே, அராபியர் காலத்தில் கூட இங்கு மதமாற்றம் ஏற்பட்டிருக்கவில்லை. முஸ்லிம்களின் பரம்பல், ஒரு சாதாரண இயற்கையுடன் ஒட்டியதாகவே காணப்படுவதும் இதற்குக் காரணம். இஸ்லாமியர் பரம்பல் கூடியிருந்தால் இரண்டு கோடியை அண்மித்துள்ள சனத்தொகையில் அதிகளவில்லாவிடினும் அதீத அதிகரிப்பு நடந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்பதை அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தும்.

உண்மையில் தேரர் அவர்கள் சொல்வது போல் சில அமைப்புக்கள் இஸ்லாம் என்ற பெயரில் வழங்கி வந்தாலும், அவை சில வேளை அரசு சார்பற்ற அமைப்புக்களாக இருக்கலாம். இஸ்லாத்தில் பிரிவுகள் எதுவும் கிடையாது. பிரிவுகளை உண்டாக்கிக் கொள்வதற்கு எவ்வித அனுமதியும் கிடையாது. மாறாக, பிரிவுகள் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட, தடுக்கப் பட்ட ஒரு செயலே. அவர்களை நாமோ, குர்ஆனோ இஸ்லாமியராகப் பார்ப்பதில்லை.

தேரர் அவர்களின் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு, ஹலால் முத்திரை பொறிப்பது. இதனைச் செய்வதற்கு இஸ்லாத்தில் எவ்வித ஆதாரமும் கிடையாது. எமது நபிகள் காலத்திலோ, அவருக்குப் பின்னுள்ள காலத்திலோ கூட இச்செயற்பாடு இருந்திருக்கவில்லை.

இஸ்லாத்தை அழிப்பதற்கு, புதிய யுக்தியைத் தேடியோரால், கண்டு பிடிக்கப்பட்டதே, இந்த அடுத்துக் கெடுக்கும் யுக்தியான ஹலால் முத்திரை பொறிக்கும் செயற்பாடு. உண்மையில் இம்முத்திரை பொறிக்கும் செயற்பாடு காலப் போக்கில் நிச்சயமாக, ஹறாமான, அதாவது தடுக்கப்பட்ட உணவை தவிர்த்து வாழ வேண்டிய, அல்லாஹ்வின் நடை முறையைப் புறந்தள்ள வைத்து, ஹலால் முத்திரையைப் பார்த்து உணவை உண்ணும் நிலையை ஏற்படுததும். இதனால், தடுக்கப்பட்ட உணவைப் பற்றிய அறிவில்லாமல் செய்யப்பட்ட முஸ்லிம்கள், ஹலால் முத்திரையுடன் காணப்படும் முஸ்லிம்களுக்கு தடை செய்யப்பட்டுள்ள பன்றி இறைச்சியை வாங்கி உண்ணும் நிலையை ஏற்படுத்திவிடும் அவலமும் அபாயமும் உண்டே.

இஸ்லாத்தின எதிரிகள் விரித்த வலையே இந்த ஹலால் சான்றிதல் முத்திரை பொறிக்கும் திட்டம். அதில் இந்த நாட்டின் மதத்தலைவர் களாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் குழுவும் இச்சதி வலையுள் சிக்கி, முஸ்லிம்களுக்கு பல்வேறு வகையான நட்டத்துக்குக் காரணமாகி வருகின்றனர்.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக, முஸ்லிம்கள் ஹறாம் என்ற தடுக்கப் பட்டதைத் தவிர்த்து வாழ்ந்ததில், எந்த சமூகத்துக்கும் பிரச்சினை ஏற்பட் டிருக்கவில்லை. ஆனால் தற்போது. இந்நிலை ஏற்பட்டமைக்கு, அப்பாவி முஸ்லிம்களோ , இஸ்லாமோ காரணமல்ல என்பதை பொது பல சேனாவோ, உலகோ அறிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிடப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாட்டின் மூலம் மிகக் குறுகிய காலத்தில், இஸ்லாத்துக்கு தேவையற்ற அவப் பெயரும். முஸ்லிம் களினதும், முஸ்லிம் வியாபாரிகளினதும் இயல்பு வாழ்வுக்குப் பிரச்சினையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.

// இதற்காகவே 2013ஆண்டை ஹலாலை ஒழிக்கும் ஆண்டாகப் பிரகடணப்படுத்தியுள்ளோம். //
உண்மையில் உங்கள் கருத்தை வெளிப்படுத்தியதன் தவறே ஹலாலை ஒழிக்க வேண்டுமென்பது. ஹலால் என்பது உண்ணத் தகுந்தது். அதனை ஒழிக்க எடுக்கும் முயற்சி என்பது, மனித வர்க்கத்துக்கே செய்யப்படும் அநியாயம். அக்கிரமம்.ஆனால், ஹலால் முத்திரையை ஒழிப்போம் எனக் கூறுவதில் அனைவருக்கும் நன்மை உண்டே.

முஸ்லிம்கள் எப்போது தமது மார்க்கத்துக்கு மாறாக நடப்பார்களோ அப்போது இன்னொரு சமூகத்தைக் கொண்டே அல்லாஹ் தனக்கு வேண்டியதை நடைமுறைப்படுத்தி விடுவான்.
அந்த வகையில், ஹலால் முத்திரை இஸ்லாத்தை அழிக்க முனைந்த ஒரு செயற்பாடே, அதனை உங்களைப் போன்ற ஒருவர் மூலம், இல்லா தொழிக்கச் செய்வது அல்லாஹ்வின் திட்டமே. ஆதலால், ஹலால் முத்திரையை நீங்கள் அழிக்கும் போது, இஸ்லாத்துக்கே மறைமுகமாக, நீண்ட காலப் போக்கில் உதவிகளைச் செய்கிறீர்கள் என்பதே உண்மை.

காரணம் இந்த ஹலால் முத்திரை ஒழிப்பு விடயத்தை ஒரு முஸ்லிம் கூறுவதே, பயங்கரமான எதிர்ப்பை, அவப் பெயரை, அவதூறை, பழிப்பை, ஏளனத்தை உருவாக்குகின்றது. ஆதலால், இந்தக் கைங்கரியத்தை எல்லாம் வல்ல இறைவன் தங்கள் மூலமாகவே நிறைவேற்றச் சித்தம் கொண்டுள்ளான் எனபதே எனது எண்ணம். இது, இரும்பால் வரவுள்ள ஆபத்தை, இரும்புக் கவசத்தை அணிந்து தடுத்துக் கொள்ளும் உபாயமே! உலகின் சில பாகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஹலால் முத்திரை பொறிக்கும் பிழையான நடைமுறையையும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பீர்களாயின், உங்களுக்கு இறையுதவியும் கிடைக்கும்

// இவர்கள் வேண்டுமென்றால் சுப்பர் மார்க்கட்டில் ஹலால் உணவுகள் என வகைப்படுத்தி வைக்கட்டும் அதனை முஸ்லிம்கள் வாங்குவார்கள். // உண்மையில் இம்முறை முஸ்லிம்களுக்குத் தேவையானதல்ல. காரணம், அல்லாஹ் முஸ்லிமகள், மிக இலகுவாக தமக்குத் தடுக்கப்பட்ட, தானாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி போன்றவற்றை அறிந்து கொள்ளும் நிலையை உருவாக்கித் தந்துள்ளான். மேலும், அல்லாஹ் அல்லாத வற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவையில் சந்தேகம் இருப்பின் தடுத்துக் கொள்வர்.

// இலங்கை பௌத்த நாடு சகல தேசிய நிகழ்விலும் பௌத்த மத நிகழ்வு மட்டுமே இடம் பெறவேண்டும். //
உண்மையில் தேசியத்தைப் பேண வேண்டும் என நினைக்கும் எந்த நாடும். மத அனுஷ்டானங்களை தேசிய நிகழ்வுகளில் கொண்டிருக்கத் தேவை இல்லலை. உண்மையில், மதத்தை மதிக்கும் எவரும் வேடிக்கை, கேளிக்கை, ஆரவாரம், விநோதங்களுடன் நடக்கும் தேசிய நிகழ்வு களுடன் , தமது மத அணுஷ்டானங்களை கலக்க விடக் கூடாது. அதனால், மதத்திற்கு இருக்க வேண்டி புனிதத் தன்மை கெட்டுவிடும்.

ஒன்றைத் தேரர் நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் சாந்தி சமாதானத்தை அடிநாதமாக் கொண்டு, உலக மக்களுக்காக இறைவனால் இறக்கி அருளப்பட்டது. இஸ்லாமல்லாதோரின் தெய்வங்களைக்கூட பரிகசிக்கவோ, எதிராகப் பேசவோ குர்ஆன் அனுமதி தரவில்லை. மாறாகத் தடை செய்துள்ளது.

மேலும், எவருக்கும் ஸலாம் என்ற சாந்தி சமாதானம் உங்கள் மீது நிலவட்டும் என்பதையே கூறப் பணித்துள்ளது. இது பயங்கரவாதத்தை, அமைதியின்மையை ஏற்படுத்தும் ஏற்பாடா?

ஆனால், ஆங்கிலத்தில் good morning என்பதையும், God என்பதையும் ஏற்கும் மனித சுபாவம், ஸலாம் என்பதையும், அல்லாஹ் என்பதையும் அவை அரபுச் சொற்கள் என்பதாகப் பார்க்க மறுக்கின்றது. இது துர்அதிர்ஷ்டமான நிலையே.

மேலும், இஸ்லாமிய கடமைகளில் மூன்றாவதான ஸக்காத் என்ற தர்மம் சார்ந்த கடமை, யார் யாருக்கு முஸ்லிம்கள் தமது சொத்தின் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கின்றது. அந்த எட்டு வகையான பிரிவினருள் ஏழைகள், வழிப் போக்கர்கள், கடனாளிகள், இறைவழியில் இருப்போர், விடுபடவேண்டியவர்கள் ( இதில் அடிமைகள், ஒப்பந்தங்களால் கட்டுப்பட்டுள்ளோர், வியாதியில் இருந்து விடுபட வேண்டியோர் போன்றோரும் அடங்குவர்.)

மேலும், இன்னும் சில இடங்களில், முஸ்லிம்களின் சொத்தில், யாசிப் பவருக்கும், யாசிக்காதோருக்கும் பங்கு உண்டு எனக் கூறி, தனது தாரளத்தை வெளிப்படுத்துகின்றது. இந்த வசனங்கள் எவற்றிலும், முஸ்லிம் என்ற பதம் பிரயோகிக்ப்பட வில்லை என்பதே இஸ்லாம் அகில உலகுக்கும் அருட் கொடையாகவே இறக்கப்பட்டது என்பதை தெளிவாக விளக்கிக் கொண்டிருக்கின்றது.

இன்னும், அனாதைகளின் சொத்தை அநியாயமாக விழுங்கி விடாதீர்கள் என்கின்றது. இன்னொருவருடைய சொத்தை அபகரிக்கும் நோக்கில் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்காதீர்கள் என்கின்றது. தக்க காரணமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்வது. முழு மனித சமுதாயத்தையும் கொல்வதற்குச் சமமானது என்கின்றது. குழப்பம் விளைவிக்க வேண்டாமென்கின்றது. சபையில் விலகி இட ம் கொடுக்கும் படி கூறுகின்றது. பிறரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் என்கின்றது, துருவி துருவி ஆராய வேண்டாம் என்கின்றது. அநியாயம் செய்ய வேண்டாம் என்கின்றது. இப்படி அடுக்கிக் கொண்டே போகின்றது.

15:3 - அவர்களை நீர் விட்டுவிடுவீராக! அவர்கள் உண்ணட்டும், சுகம் அனுபவிக்கட்டும், இன்னும் அவர்களை வீணான எண்ணம் பராக்காக்கி விட்டது. விரைவில் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  இப்படிக் கூறும் ஓர் மார்க்கம், யாரையும் பலவந்தமாக எதையாவது செய்ய வற்புறுத்துமா?

தவறுகள் ஏதாவது நடந்திருக்குமென்று நீங்கள் குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், அது யாரோ சிலர் அறியாமையாலோ, அல்லது வேறு காரணத்தினாலோ செய்தவைகளாக இருக்கலாம். அப்படிச் செய்தவர்கள் முஸ்லிம் என்ற பெயருடன் இருப்பதன் காரணமாக, அவை இஸ்லாமிய கருத்துக்களாகக் கூறப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இஸ்லாம் உலக மாந்தரின் ஈருல உய்வுக்காக, அருளாக இறக்கி அருளப்பட்டுள்ளது.

இதில் உலக அமைதியும், சாந்தி, சமாதானமும் நிறைந்திருக்கும். பெரும்பாலானவர்கள் இந்த குர்ஆனை  ஏற்க மாட்டார்கள் என்பதும், குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ்வால் கூறப்பட்ட வசனம் என்பதாலும், தேரர் இந்நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை, மதமாற்றத்தின மூலம் அதிகரித்துவிடும் என்று பயப்படத் தேவையில்லை.  

Saturday, February 9, 2013

Paristamil Tamil News - பல சாதனைகளை படைத்து அசுர வேகத்தில் விஸ்வரூபம்

Paristamil Tamil News - பல சாதனைகளை படைத்து அசுர வேகத்தில் விஸ்வரூபம்


பிரசித்தி  இரு வகையில் வரும். பிரச்சினைக்குரிய விடயங்களை உள்ளடக்குவதால் எற்படுவது.  மிகச் சிறந்த விடயங்களை மக்களுக்கு அளிப்பதால் வருவது.

மேலும், இப்படம் எதிர்ப்புக்களுக்குப் பின்னர் வெளியிடப்படுவதால், இலவச, மேலதிக விளம்பரத்தைப் பெற்றுள்ளது.  மகக்ளின் ஆர்வம், எதிர்ப்புக்களால் தூண்டிவிடப்பட்டுள்ளது.

இதுவும் கமலின் திறமைகளில் ஒன்றாக இருக்கலாம்.

Paristamil Tamil News - சிறிலங்காவில் விழும் மர்ம கற்கள் - ஆபத்தை ஏற்படுத்த போகிறதா?

Paristamil Tamil News - சிறிலங்காவில் விழும் மர்ம கற்கள் - ஆபத்தை ஏற்படுத்த போகிறதா?


அநியாயங்கள் எங்கு மிகைத்து விடுகின்றனவோ, இறை மறுப்பு  எங்கு அதிகரித்து விடுகின்றதோ அப்பொழுதெல்லாம் இறைவனிடமிருந்து எச்சரிக்கைகள் வந்து கொண்டே இருக்கும். எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத பட்சத்தில் இறை தண்டனை கல் மழையாகவே பொழியும் என்பதை மக்கள் மனத்தில் இருத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் தாங்கள் செய்வதை மீளாய்வு செய்து, மன்னிப்பைக் கோ ரி, திருந்திக் கொள்ளப் பார்ப்பதே இறை தண்டனையில் இருந்து தப்ப வழி.

Friday, February 8, 2013



Lankamuslim.org இல்

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் .  என்ற கட்டுரையில் Nizamhm1944  என்பவரால் எழுதப்பட்ட கருத்து.


http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/



திரு. தலபான் அவர்களே! உங்கள் எழுத்துக்களை மீண்டும் ஒரு முறை எடுத்து வாசித்துப் பாருங்கள். அதில், இஸ்லாம் தடைசெய்துள்ள பகடி, அவதூறு, பட்ட்ப்பெயர் சூட்டல் தவிர்ந்த ஏதாவது, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு ஆதாரமானவை, அல்லது நான் எழுதியவற்றில் குர்ஆனிய அடிப்படையில் மறுப்பு இருக்கின்றனவா? வெறும் பிதற்ற‌லைத் தவிர எதுவுமில்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்வீர்கள். வேறு எவராவது ஆக்கபூர்வமான கருத்துக்களை குர்ஆனிய அடிப்படையில் வழங்கியுள்ளனரா?

இங்கு நடந்து கொண்டிருப்பது, ACJU வினதும் நிஸாமினதும் தனிப்பட்ட பிரச்சினை அல்ல. ஹலால் சான்றிதழ் வழங்குவதும், ஹலால் முத்திரை பொறிப்பதும் குர்ஆனிய அடிப்படையில் அமைந்ததா? அல்லவா என்பதும்,

ஹலால் முத்தி‌ரை பொறிப்பது எதிர் காலத்தில் ஹறாமை அறியாது, ஹலால் முத்திரையைப் பார்த்து உண்ணும் பயங்கரத்தை உருவாக்காதா? (ஏற்கனவே பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாக ACJU வே கூறியுள்ளது. )

ஹலால் சான்றிதழ் பெறப்படாத ஹலாலான உணவுப் பண்டம், ஹறாம் என உண்ணப்படாமல் விடப்படுவது, அல்லாஹ் ஆகுமானது எனக் கூறியதை ஆகாதது என்ற நிலையை அடைகின்றது. இப்படிக் கூற வேறொரு தெய்வம இருந்து கட்டளை இடுகிறதா என்ற அல்லாஹ்வின் கேள்விக்குள்ளாகி, ஷிர்க் என்ற நிலையை அடைகின்றது..

ஹலால் சான்றிதழ் பெறப்படவில்லை என அஇஜஉ ஒரு தயாரிப்பைக் கூறும்போது, அந்த உணவுப் பண்டம் ஆகாதது என்ற பண்பைப் பெறுவதுடன், உற்பத்தியாளனுக்கு மறைமுக நிர்ப்பந்தம் ஒன்றை உருவாக்குகின்றது. மார்க்கத்தில் நிர்ப்பந்தமில்லை என்ற இறைவாக்கை நிராகரிக்கின்றது.

சென்ற வருடம் ஹலால் சான்றிதழுடன் விற்கப்பட்ட பொருள், இவ்வருடம் ஹலால் சான்றிதழ் பெறப்படாமை யினால் உண்ணத் தகாதது என்ற நிலையை அடைவது, மார்க்கத்தை வெறும் கேலிக்கிடமாக்குகின்றது. இதில் பணம் அல்லாஹ்வின் இடத்தை வகிக்கின்றது. பணம் கொடுத்தால் மீண்டும் அது ஹலாலாகிவிடும். ஷிர்க்.

முஸ்லிம்கள் ஹறாமை தவிர்க்க வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் அல்லாதோர் மேல் பாரம் சுமத்துவது எந்த வகையில் இஸ்லாம் அனுமதிக்கின்றது. இந்த உழைப்பு ஹலாலா?

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு கூறப்படும் காரணங்களில் சில அல்லாஹ் முஸ்லிம்களின் பாதுகாவலன் என்ற நிலைக்கு அஇஜஉ வை சமமாக்குவது ஷிர்க்கை வருவிப்பது.

மேலும், அவர்கள் கூறும் காரணங்கள் எதுவும் இஸ்லாமிய அடிப்படையில் அமைந்தவையல்ல.

இப்படி நிறையவே உண்டு. இதனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் தாங்கள் என்னைத் தனிப்பட்ட முறையில் தாக்குவதால் எவ்வித நன்மையும் ஏற்பட்டுவிடப்போவதில்லை.

மாறாக ஏற்கனவே எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைக்கு எண்ணெய் வார்த்து, மூலை முடுக்குகளில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிகளுக்கும், சிங்கள மக்கள் மத்தியில் வியாபாரம் செய்து பிழைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் வியாபாரிகளுக்கும் அபாயத்தை உண்டு பண்ணவே செய்யும்.

அல்லாஹ்வுக்காக சற்று சிந்தியுங்கள். எனக்கு யார் மேலும் காழ்ப்புணர்வு இல்லை. முஸ்லிம்கள் அநியாயமாகப் காதிக்கப்படப் போவதை அறிந்து, அதனைத் தடுப்பதற்காகவே நான்கு மாதங்களுக்கு முன்னர் அஇஜஉ வுக்கு விளக்கமாக கடிதம் எழுதினேன்.

மேலும், குர்ஆனிய உண்மைகள் வெளிப்படுத்தப்படுவது ஒவ்வொரு முஸ்லிமினது கடமை. அதனையே செய்தேன்.

நான் செய்தவை பிழை என நிரூபித்தால் அதற்காக மன்னிப்புக் கோரவும், அதற்காக எந்த தண்டனையையும் ஏற்கவும் தயாராயுள்ளேன்.

Thursday, February 7, 2013


முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்ன?



முஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்ன?

அண்மைக் காலமாக முஸ்லிம் மாதர் சிலர் முகத்திரை அணியத் தொடங்கியுள்ளார்கள். இது அனுமதிக்கப்பட்ட அல்லது குர்ஆன் குறித்துரைத்த ஆடை முறையா என்பதை ஆராயும் முன் உலக வாழ்க்கையில் இது எந்த அளவுக்கு ஏற்புடையது என்பதும், நடைமுறைச் சாத்தியமானது என்பதும், இதனால் ஏற்படக்கூடிய அசௌகரியங்கள், வழிகேடுகள், பிரச்சினைகள் போன்ற இன்னோரன்னவற்றையும் ஆராய்வது, ஆடை பற்றிய குர்ஆனியக் கருதுகோளைச் சரியாகப் புரிந்து கொள்வதிலும், இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாம் பற்றிக் கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களையும், மேலாக,  இத்திரைகளை அணிவோர் அல்லது அப்படி அணிய வேண்டும் என்ற கருத்துக் கொண்டோரும், தமது பெண்களை அணியுமாறு வற்புறுத்துவோரும் அறிந்து கொள்ளவும், குர்ஆனிய வாழ்க்கையை மேற்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்பது என் வலுவான அபிப்பிராயம்.

மேலும், பிழையான பல்வேறு நடத்தைகளை மேற் கொள்வோரும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரும் இவ்வுடைகளுக்குள் மறைந்து அதன் மூலம் திட்டமிட்டே இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை உண்டாக்குவதைத் தடுக்கவும் உதவும். இஸ்லாம், சமூக இணக்கத்துக்கு மாற்றமான மார்க்கம் என்ற கருத்தையும் தடுக்கும். அத்தோடு இஸ்லாமிய தூதுச் செய்தியை எத்தி வைப்பதாகவும் அமையும். 33:39 -“அவர்கள் எத்தகையோரென்றால், அல்லாஹ்வின் தூதுச்செய்தியை எடுத்துரைப்பார்கள். மேலும், அவனையே அஞ்சுவார்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு எந்த ஒருவருக்கும் அஞ்ச மாட்டார்கள். கணக்குக் கேட்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.”

அரேபியர் அணியும் ஆடையைப் போன்றதே நாமணியும் நீண்ட அங்கியும்,  முகத்திரை,  தலைப்பாகையும் என்ற கருத்தை வெளியிடுவோரும் உள்ளனர். அரேபியர்களின் உடை இஸ்லாமிய ஆடை அல்ல என்பதையும், அவர்கள் அரேபியாவில் அடிக்கடி வீசும் மண் புயலில் இருந்து தம்மைக் காக்க, முகத்தை மறைக்கக்கூடிய  வகையில் ஆண்கள் தலைப்பாகையையும், பெண்கள் முகத்திரையையும் அணிந்து வந்தனர். அதே அரேபியர்தான் அறியாமையில் மூழ்கி கஃபாவில் 364 விக்கிரகங்களை அமைத்து அவற்றுக்கு முன்னர் முழு நிர்வாணமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதையும் மறந்துவிடலாகாது. அராபியரின்  மேற்கண்ட உடை நடைமுறையில் இருந்த போதே அல்குர்ஆன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடை பற்றிய அறிவுறுத்தலைத் தருகின்றது. அராபியரின் மரபு ரீதியான உடையை குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்பதை இது காட்டுகின்றது.

அரபியில் குர்ஆன் அருளப்பட்டது என்பதையும்,  நபிகள் கோமான் அங்கு அவதரித்தார்கள் என்பதையும், கஃபா அங்கு அமைந்துள்ளது என்பதையும் தவிர அவர்களிடம் அரேபியர் என்ற வகையில் வேறு தொடர்பு இல்லை. அவர்கள் இஸ்லாமியராயிருந்து, அவர்களிடம் குர்ஆனிய வாழ்க்கை இருந்தால் பின் தொடரலாமே தவிர அல்ல.  நமக்கும், அவர்களுக்கும்தான் குர்ஆன் கீழ்கூறிய உடையை குர்ஆன் அறிவித்துள்ளது. அவர்கள் அணிந்திருந்த ஆடை சரியாக இருந்தால் புதிய ஆடை முறையை குர்ஆன் கூறியிருக்க அவசியம் இல்லை. மேலும், அந்நாட்டின் தேவையை ஒட்டி அவர்கள் இஸ்லாமிய ஆடைக்கு மேலதிகமாக, தேவைப்படும் காலங்களில், அதாவது மண்புயல் அல்லது வேறு நிர்ப்பந்தங்கள் ஏற்படுமிடத்து அணிவது பிழையல்ல. ஆனால் அது முஸ்லிம்களின் ஆடை என்றோ, குர்ஆன் பரிந்துரைத்த ஆடை என்றோ கூறவோ, பின்பற்றவோ முடியாது.

குர்ஆன் விதந்துரைத்த ஆடை முழு உலகுக்கும்,  அனைத்து சுவாத்தியங் களிலும் அணியக்கூடிய, சிக்கனமான, இலகுவான, அழகான, மானத்தை மறைப்பதான, விரசத்தை, பயத்தை ஏற்படுத்தாத, பாதுகாப்புக்கு அச்சுறுத்தலற்ற, ஆளை அடையாளம் காண்பதற்கு ஏதுவான ஆடை.

இன்று உலகில் ஏற்பட்டுள்ள பல்வேறு முன்னேற்றங்களும், அபிவிருத்தி களும், வசதிகளும், வாய்ப்புக்களும் போன்றவைகளில் குறுக்கு வழிகளைக் கையாண்டு, காரியங்களை ஆற்றுவோரில் இருந்து, வளங் களையும், நலன்களையும் காத்துக்கொள்ள ஆளடையாளம் பெரிதும் அத்தியாவசியமும், அவசரமும், கட்டாயமும் ஆகியுள்ளமை தவிர்க்கப்பட முடியாததே. மனிதரைத் தனித்தனியே வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக, இனங்காட்டுவதற்காக இறைவன் அளித்த ஓரே இலகு வழியே முகம் என்ற அடையாளம். ஒருவர் முகம் போல் இன்னொருவரது முகம் அமைவதில்லை. ஒருசில இரட்டையரிலும், மிக அருமையாக ஒருவர் இருவரிலும் தவிர.  மற்றைய படைப்புக்களில் மனிதர்கள் அறிந்து கொள்வதற்கு அமைவாக வேறு விதமான அடையாளங்களைத் தேவைக் கேற்ப அவற்றில் அமைத்துள்ளான். இது மனித நடைமுறையை இலகு படுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டதே. இதனைத் தன் அருள் மறையிலும் அழகாக எடுத்தியம்பி உள்ளான். அந்த வகையில் தற்போது, ஆளடை யாளத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், தேவைகளிலும், நமது நன்மை கருதியும், பொது நன்மை கருதியும், குற்றங்களுக்குச் சந்தர்ப்பம் கொடுக்காது உதவும் வகையிலும் நமது அடையாளத்தை வெளிப்படுத்த
வேண்டியே உள்ளது. இதற்காகவே அருளப்பட்ட முகம் அக்கைங் கரியத்தைச் சிறப்பாகச் செய்ய வல்லது.

ஏதோ வழியில் தற்போதைய முகத்திரை இதற்குக் குந்தகம் விளைவிக்கக் காரணமாகின்றது என்பதை நாம் மறுக்கமுடியாது. முக அடையாளத்தை எவ்வழியிலாவது மறைத்தல் குற்றவியலுக்கு உட்பட்டதே. முகத்தை மறைப்பதைத் தடைசெய்யும் சட்டங்கள் முஸ்லிம் மாதரின் முகத்திரைகளுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானஎன்ற கோஷம்,  மலிவான வழியில் புகழ், இலாபம் தேடுவோரின் குறுக்கு வழிகளாகும்.

அடுத்து ஒழுக்கம் கெடுவதற்கும் இத்திரை பெரிதும் சாதகமான சூழலை ஏற்படுத்துகின்றது. தனது கணவரின் கண் முன்பாகவே, எவ்வித அச்சமு மின்றிக் கள்ளக் காதலனுடன் கைகோர்த்துச் செல்லும் அவல நிலைக்குக் கால்கோளாகி உள்ளது, இம்முகத்திரை. சந்தர்ப்பவசத்தால் தெருவில் இறந்து கிடந்தாலோ அல்லது வேறு ஆபத்துக்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தாலோ நமது சொந்த மனைவியை, சகோதரியை, தாயை, சேயை, நண்பரை அடையாளம் காண முடியாதென்பதால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்.  நமது கண் முன்னே யாரும் கண்டு கொள்ளாதவாறு, வாயைக் கட்டி, கொலை அச்சுறுத் தலோடு கடத்திச் செல்லும் சந்தர்ப்பங்கள்கூட ஏற்படலாம். பர்தா உடையுடன் கூடிய முகத்திரை அதற்கான சூழலை இலகுவாக்கி விடுகின்றது. கணவனைக்கூட மனைவி முன்னிலையில் கடத்திக் கொண்டு செல்லும் வாய்ப்பு. மற்றும், கள்ளத் தொழில், குற்றச்செயல், ஆள்மாறாட்டம், விபச்சாரம் போன்ற இன்னோரன்ன வற்றையும் செய்ய விழையும் ஆண்களும் பெண்களும் தற்போதைய முகத்திரையை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முஸ்லிம் மாதரின் ஆடை என்பது மற்றவர்களால் சந்தேகிக்கப்படுவது இல்லை என்பது மேற்கண்ட குற்றச் செயல்களுக்கு ப்ளஸ் பொயின்ட் ஆகிவிடுகிறது. ஆக, இம்முகத்திரை குற்றச் செயலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பான இலகு கேடயமாகி  உள்ளது. முகத் திரையைத் தம் இழி செயலுக்காகப் பாவிப்போர் அகப்படும் சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே உள்ளன. காரணம், அனைத்து முகத்திரை அணிவோரையும் பரிசீலிப்பது, சிரம சாத்தியமானதும், நடைமுறைக்கு ஒவ்வாததும், எதிர்ப்புக்களை, காலவிரயத்தை, அசௌகரியங்களை ஏற்டுத்துவதுமேயாகும். முகத்திரைகளுள் மறைந்து கொண்டு நடத்தப்படும் அக்கிரமங்களை அம்பலமாக்கி அநேக திரைப் படங்கள் வெளியாகியும் உள்ளன. அதுவும் முஸ்லிம்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்றவாறே அமைந்துள்ளமை வருத்தந் தருவதே. அவை கண்டிக்கப்பட வேண்டியவை.

முஸ்லிம்கள் தம்மை வேறுபடுத்திக் காட்டுவது ஏற்புடைத்தாயினும், பிறருக்குத் தேவையற்ற அசௌகரியங்களை யும்,  பிரச்சினைகளையும், தொல்லைகளையும் உண்டு பண்ணி முஸ்லிம்களில் குரோத மனப்பான்மை ஏற்படுத்து வதற்கு வித்திடலாகாது. இன்னும் நமது செயற்பாடுகள் சமூகத்தில் முரண்பாடுகளையும், சச்சரவுகளையும், சட்டத் துக்குக் கட்டுப்படாதவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள், விமர்சனங்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தாது பார்ப்பதும் நமது கடன். எல்லா வற்றிலும் நடுத்தரத்தையே இறைவன் சிலாகித்துக் கூறியுள்ளான். நடப்பது, பேசுவது, குர்ஆன் ஓதுவது, தொழுகையில் ஓதுவது போன்ற இன்னோரன்ன அனைத்திலும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறான்.

அந்நிய மதத்தவரது தெய்வங்களைக் கூட பேசவேண்டாம் எனவும் (6:108), அப்படிப் பேசுவதால் அவர்கள் அல்லாஹ் வை வரம்புமீறிப் பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டாம் என்றும் கூறியிருப்ப திலிருந்து, இஸ்லாத்தைத் தேவையற்ற விதத்தில் பிறர் விமர்சிக்கும் சந்தர்ப்பங்களை நாம் நமது நடத்தைகளால் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது என்பதற்காகப் போலும். அப்படியான சந்தர்ப்பங்களைப் பிறருக்குக் கொடுப்பது இஸ்லாத்துக்கே விரோதமானதாகும் என்பதுடன், நமக்கு நாமே விளைக்கும் அநியாயமுமாகும் என்பதும் தெளிவு.  குர்ஆன் கூறாதவற்றை அல்லாஹ் கூறியிருப்பது போன்ற உளப்பாங்கை பிறர் மத்தியில் ஏற்படுத்துவதும், அல்லாஹ் மேல் பொய் சொல்லிய குற்றத்தைப் போன்று, மன்னிப்பற்ற, மனோஇச்சையைத் தெய்வமாக்கிய குற்றத்துக்குள் செலுத்திவிடும்.

முகத்திரைகளை அணிவோர் மிகச் சிலர், நிர்ப்பந்தத்தாலும், சிலர், சமூகத்தில் தமது மாறுபட்ட தன்மையைக் காட்டு வதற்காகவும், இன்னும் சிலர், எல்லோரும் செய்கிறார்களே என்பதற்காகவும், வேறும் சிலர் அதுதான் இஸ்லாம் என்ற தப்பபிப்பிராயம் ஊட்டப்பட்டு அல்லது தாமே அப்படியான எண்ணத்தை ஏற்படுத்திக் கொண்டதனாலும், மேலும் சிலர், ஏதேதோ காரணங்களாலும், ஒருவித மாயையினாலும் அணிந்து கொண்டிருக்கின்றனர் என்பதே யதார்த்தம்.

இஸ்லாம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடாத்தி தீர்வுகளைக் காணும் மார்க்கமல்ல. அது அனைத்துக்கும்  தெளிவான தீர்வுகளைக் கொண்டுள்ள, வல்ல அல்லாஹ்வால் மனித இனத்திற்கு வழங்கி அருளப்பட்ட புனித மாமறையான அல் குர்ஆனைத் தன் வழிகாட்டியாகக் கொண்டுள்ள வேதம். இஸ்லாத்தில் அதாவது அல்குர்ஆனில் அந்த முகத்திரை அணிய வேண்டுமென்று கூறப்பட்டிருந்தால், எவ்விதத் தயக்கமோ, பயமோ, அல்லது விருப்பு, வெறுப்புக்களோ, எதிர்புக்களோ தோன்றினாலும் அணியவே வேண்டும். எந்த அடக்கு முறைக்கும் அடிபணிய வேண்டிய தில்லை. இவ்விடயத்தில் எவரது சட்டத்திற்கும் கட்டுப்பட வேண்டிய தில்லை. அதற்காகப் போரிட்டு நம் மதக் கடமையைச் செய்ய வேண்டிய உரிமையை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு அல்லாஹ்வின் உதவியும் கிட்டும்.

இந்த முகத்திரையை அணிபவர்களும், பர்தா என்ற முகத்தை மறைக்காத இஸ்லாமிய ஆடையை அணிபவர்களும் பெரும்பாலாகக் கருப்பு நிறத்தைத் தமது தெரிவாகக் கொண்டுள்ளனர். இது இலகுவாக அழுக்கை வெளிக்காட்டாது என்ற காரணத்துக்காக அல்லது அணிபவர்களில் உயர்வு, தாழ்வைக் காட்டாது இருப்பதற்காக என்ற எண்ணத்தை அடிப்படையில் கொண்டதாக இருக்கலாம். அப்படியாயின் அது ஓரளவு வரவேற்கத் தக்கதே. ஆனால் உண்மை அப்படியல்ல. ஆயினும் இதுவும் ஓர்வித மாயையை, மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கருப்பு நிறம் உலக வழக்கில், அபசகுணமாக, பயங்கரத்துக்குரியதாக, மந்திரம், மாயைகளுடன் ஒட்டியதாக, பிழையானவற்றை விளக்குவதற்காக (கறுப்புப் பணம், கரிய பக்கம், கரும்பூனை, கரும்புலிகள் ) பாவிக்கப்படுவது நாமறிந்த ஒன்றே. இஸ்லாம் வர்ணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கா விடினும், அது அழகை,  தூய்மையை, அளவான அலங்காரத்தை வற்புறுத்தவே செய்கிறது. இவ்விடயம் முகத்திரைக்குச் சம்பந்தமில்லாத தாயினும் நன்மை கருதி இடம் பெறுகின்றது. ஆதலால் ஆடம்பர உடைகளையும், அதிக கவர்ச்சியான நிறங்கள் தவிர்ந்த கருமையான பல நிறங்களையும் அணிவதால் ஏற்றத்தாழ்வு, அதி சீக்கிரமாக அழுக்கடை யாமை போன்றவற்றைப் பேணிக் கொள்ளலாம்.

எந்தக் காரியத்திலும், நல்ல, கெட்ட வழிகள் மூலம் கவர்ச்சியை அல்லது கவனத்தை ஈர்த்து புகழ் சேர்க்கலாம், அல்லது அணி சேர்க்கலாம், நன்மைகளையும், பலன்களையும் சேர்க்கலாம்.  இதில் இரண்டாம் வகை ‘கெட்ட வழி’ எவரது அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. ஆனால் பழிச் சொற்களையும், பெருத்த அவமானங்களையும், அசௌ கரியங்களையும், விமர்சனங்களையும், தேவையற்ற தரமற்ற வாதப் பிரதிவாதங்களையும் மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறது. அத்தோடு மதிப்பையும், மரியாதையையும் இழந்தும் விடுகிறது. இதனால்தான், சிறந்ததைத் தேடும்படியும், சிறந்தவற்றைக் கூறுமாறும், நல்வழியில் நடக்குமாறும், மிக அழகானதைக் கொண்டு அழைக்குமாறும் குர்ஆன் வற்புறுத்திக் கொண்டு இருக்கின்றது. ஆயினும். அல்லாஹ் நாடாதவரை நல்லுபதேசங்கள் பயனளிப்ப தில்லை.

உண்மையில் குர்ஆனின் அடிப்படையிலான சரியான நகர்வுகள், அப்படியான இழிநிலைகட்கு நம்மை ஆளாக்குவ தில்லை. காரணம் அது அனைவருக்கும் பொருந்த, ஏற்கக்கூடிய நடைமுறைச் சாத்தியங்களை மட்டுமே கூறும். மனிதனுக்குச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கு ஆதாரமானதாகி சீர்படவும் வைக்கும். அது கூறும் ஒவ்வொரு நடவடிக்கையும் சாந்தியையும், சமாதானத்தையும் உண்டுபண்ணி அமைதியான சகவாழ்வுக்கு வழிகோலுவதாகவும் மட்டுமே இருக்கும்.  குர்ஆனியக் கருத்தை பின்பற்றாதவர்கள் கூட அதனது கருத்தை மறுத்துப் பிழை காணும் நிலை இருக்காது.  பாராட்டிச் செல்வோராகவே இருப்பர். காரணம், நிறை ஞானம் கொண்ட இறையருளின் வெளிப்பாடு குர்ஆன். இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டி, மனித குலத்தை மேம்படுத்த இறக்கி அருளப்பட்ட அருள் மறை என்பதே. 11:34 – “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்குப் பயன் தராது”.

ஆடைகள் பற்றிக் குர்ஆன் கூறுவதைப் பார்க்குமுன், முன்னோர்கள் கைக் கொண்டவையாகக் கருதப்பட்டு வழிவழி யாக நடைமுறைப்படுத்திவந்த அனாச்சாரங்கள், மாச்சாரியங்கள், மூடநம்பிக்கைள், வழிகேடுகள், ஒழுக்கக் கேடுகள், கொலைகள், கொள்ளைகள், பிறரைப் புண்படுத்தல், பெருமை பேசல், களவு, விபச்சாரம், மது, சூது, பிழையான உணவு முறை, அபகரிப்பு, அநீதி போன்ற வழி முறைகளை இஸ்லாம் கண்டித்துத் தடைசெய்து, மாற்று வழிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவே, குர்ஆனியச் சட்டங்கள்.  அது ஒன்றே உலக மக்கள் பின்பற்ற வேண்டிய ஒழுகு முறை. ஆடையிலும், அக்குர்ஆன் அனைவரும் அணியக்கூடிய விதமாகச் சட்டம் இயற்றி இருக்கவே வேண்டும். அச்சட்டம்,  எக்காலமும்,  எந்தச் சூழ்நிலையிலும், எந்த சுவாத்தியத்திலும், எவ்வகையான மனிதராலும், எல்லா நிலையிலும் பின்பற்றக் கூடியதாகவே இருக்க வேண்டும். அது எவருக்கும், எத்தகு அசௌகரியங்களையும், முரண்பாடு களையும்,  துயரங்களையும், தொல்லைகளையும் தராததாகவே இருக்கும். நடைமுறைப்படுத்த முடியாதென்ற நிலையையும் எற்படுத்தாத தன்மை கொண்டதாகவே இருக்கும். இவைகளை முதற்கண் நாம் மனத்தில் இருத்திக் கொள்வோம். இறைவன் மக்களுக்குச் சிரமத்தை விரும்ப வில்லை என்பதும் இலகுவையே விரும்புகின்றான் என்பதையும், மேலும் மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என்பதையும், தவிர்க்க முடியாத சந்தர்ப்ப, சூழ்நிலைகளில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் விதிவிலக்கு அளித்துள்ளான் என்பதையும் நாம் நினைவில்  கொள்ள வேண்டும்.

ஆடைகள் பற்றி அல் குர்ஆன் 7:26 கூறுவதைப் பார்ப்போம். இது தற்போது பின்பற்றப்படும் முகத்திரை போடலுக்கான அங்கீகாரத்தை அல்லது ஏதாவது சைக்கினைகளைத் தந்துள்ளதா? என்பதைக் கவனியுங்கள். “ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும், திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறை அச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். மேலும்,     மானத்தை மறைப்பதற்காகவும், அழகலங்காரமாகவும் ஆடையை உங்களுக்கு அருளியுள்ளோம் எனக் கூறியுள்ளான்.  குர்ஆன் கூறியுள்ள வெட்கத் தலங்களை மறைப்பது பற்றி நான் விளக்க வேண்டிய அவசிய மில்லை. ஆனால் அடுத்து அது அலங்காரமாக இருப்பதை அல்லாஹ் விரும்புகின்றான் என்பது நாம் கவனத்திற் கொள்ள வேண்டியது. கவர்ச்சி யைக் காட்டக் கூடாதே தவிர அழகாகவோ, அலங்காரமாகவோ இருப்பதை அல்லாஹ் தடுக்கவில்லை. நளினமாகப் பேசுவது கூட ஆண்களின் மனத்தில் தேவையற்ற ஆசைகளை விதைத்து விடும் எனக்கூறித் தடை செய்துள்ளான். அச்சந்தர்ப்பத்தில் முகத்திரை போடுமாறு பணித்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்பது அவனது தூரதிருஷ்டியைக் காட்டுவது. நடைமுறைச் சாத்தியத்தை உணர்த்துவது. தொழுகைகளின் போதுகூட நம்மை அலங்கரித்துக் கொள்ளும்படியே பணித்துள்ளான்.

அடுத்த வசனத்திலும் அழகையும், அலங்காரத்தையும் வலியுறுத்தி யுள்ளான்.  முகத்திரை போடுவதால் அழகு கெடுமே தவிர அழகாகவோ அலங்காரமாகவோ இராது. நாம் நம்மைக் காக்கும் பொருட்டு நம் நடத்தையில் கவனத்தைச் செலுத்துவதற்காகப் ‘பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்’ எனக் கூறியுள்ளமை அறிதற்கும்,  உணர்தற்கும் உரியது.  பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படியே கூறியுள்ளான் என்பது குறித்துணரக் கூடியது. முகத்தை மூடுவதாக இருந்தால் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளச் சொல்ல வேண்டியதே இல்லை அல்லவா! முகம் என்பது ஒருவரை அடையாளப் படுத்துவது. மேலும் இனங்காட்டுவது. அடையாளங்களை மறைப்பது அறிவியலுக்குட்பட்டதா? இஸ்லாம் அறிவியலுக்கு எதிராக எதனையாவது சட்டமாக்கியுள்ளதா?

அல் குர்ஆன் 24: 31 கூறுவது, கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முதன்மையான வசனமாகும். “இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத்  தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளவேண்டும். ……”

பார்வைகளே  பிரச்சினைகளுக்குக் காரணமாக  அமைகின்றன என்பதனால் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளும்படி வல்ல நாயன் இவ்வசனத்திலும் கூறியுள்ளமை,  முகத்தை மறைப்பதைவிட மேன்மையானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். முகத்திரையைப் போடுபவர்கள் தாம் யாரையும் பார்த்து இரசிப்பதற்கு மிக அதிகமான சந்தர்ப் பத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். யாரும் பெண்களின் முகத்தைப் பார்ப்பதால் எதுவும் அபத்தம் நிகழ்ந்து விடப் போவதில்லை. மாறாக எந்தப் பெண்ணும் முகத்திரைக்குள்ளாக அந்நிய ஆண்களைப் பார்த்து இரசிக்கும் சந்தர்ப்பம் முகத்திரையின் போது ஏற்படுவதால் அப்பெண் தன்னை இழந்து விடுகிறாள். இதனை மறைவானவற்றையும் அறியும் அல்லாஹ் நன்கு அறிந்து விடுகின்றான். அதனால் முகத்திரை நன்மை செய்வதைவிட தீமைக்கே உடந்தையாக இருக்கிறது. பெண்கள், யாரும் அறியாது, தமக்குத் தாமே துன்பத்தைத் தருவிக்கும் சந்தர்ப்பம் இம்முகத்திரையால் உருவாவதே.

அவ்வசனத்தில் அடுத்து பெண்களுக்குக் காக்க வேண்டிய பகுதி மறை விடங்கள் என்பதை மிக நாசூக்காக, தெளிவாக கூறி நிற்கின்றது. அலங்காரம் அவசியம்தான் என்பதை ஏற்பதுடன் அது எப்படி அமைய வேண்டும் என்பதையும் வகைப்படுத்தி உள்ளான். உடல் உறுப்புக்களை வெளிப்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி உள்ளான். அதற்கும் மேல், தம் மேல்சட்டைகளின் மீது முன்தானைகளைப் போட்டு அவைகளை மறைத்துக் கொள்ளுமாறு ஏவுகின்றான். மேல் சட்டைகள் அணியும் பகுதி மார்பு என்பது தெரிந்ததே. முகத்தை மறைப்பதை எங்கும் காணவில்லை. அதனைத் தொடர்ந்த வசனங்கள் இன்னுமுளவாயினும் அவசியம் கருதி இவற்றை மட்டும் எழுதியுள்ளேன்.

33:33 வசனம் நமது கவனத்தை ஈர்க்கப்பட வேண்டியதே. “நீங்கள் உங்களுடைய வீடுகளிலேயே தங்கியிருங்கள். முந்திய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தியது போன்று, வெளிப்படுத்திக் கொண்டு வெளியில் திரியாதீர்கள்.……”. அன்று மாதர் தம் மார்பகங்களை வெளியில் தெரியக் கூடியதாகக் காட்டிக்கொண்டு திரிந்துள்ளனர் என்பது மேற்கண்ட வசனத்தில் தெரிகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்காலத்தில் கூட பெண்கள் மார்பகங்களை மூடாத நிலை, ஆசியா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் நாகரிகமற்ற பகுதிகள் சிலவற்றில் காணக்கூடியதாக உள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்னர் நம்நாட்டிலும் இந்நிலை இருந்துள்ளது. தற்போதுகூட இந்தியாவில் சில பகுதிகளில் உடலின் மேல் பகுதியை மறைக்காதவர்கள் வாழ்கின்றனர் என்பது புதிதல்ல. இது நாகரிகம் என்ற பெயரில் மார்பை வெளிக்காட்டிக் கொண்டு திரியும் பெண்களைக் குறிப்பிடுவதல்ல. பெண்கள் ஆடையின்றி நடமாடும் அளவிற்கு கீழிறங்கியுள்ளது நவயுக நாகரிக மாதர் நிலை. உலகம் கற்காலத்தை நோக்கி துரிதமாகப் பயணித்துக் கொண்டி ருக்கிறதா! அழிவு நெருங்கிவிட்டதா!! அதன் அடையாளங்கள் தானா தற்போதைய இயற்கை அழிவுகள்!!!

33:59 “நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண் மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். …”  மேற்கண்ட வசனங்கள், பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்பதையும், தொங்கவிடுவதனால் அங்கங்கள் வெளிப்படாததையும் மறைமுகமாகக் கூறியுள்ளன. அதற்கான முக்கிய காரணங்களாக, அவர்கள் அறியப்படுவது, பிறரால் துன்புறுத்தப்பட மாட்டார்கள் எனக் கூறுகின்றது. அறியப்படுவது என்பதன் மூலம் முதற்கண் அவள் பெண், அப்பெண் யார்? அவளது பண்பு, அவள் பிழையற்ற தன்மை, பிறரைக் கவர முயற்சியாத குணம் போன்றவை வெளியாகின்றது. ஒரே பார்வையில் அவளை அறிந்து கொள்ள முடியும் என்பதால் அவள் சிரமத்துக்கு உள்ளாவதில்லை.  மேலும், வக்கிர மனம் கொண்டவர்களால் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கட்கு ஆளாவதையும் தடை செய்கிறது. எப்போது கவர்ச்சி வெளிப்பட வில்லையோ அப்போது பாலியல் தொல்லைகளும் மறைந்து விடுகின்றன. அதனாலேயே தொங்கவிடும் ஆடைகளைக் குர்ஆன் கடமையாக்கியுள்ளது.

ஆடை அணிய வேண்டும் என்பதைக் கட்டாய சட்டமாக்கியுள்ள ஓரே  சமயம் இஸ்லாம் மட்டுமே. மட்டுமல்ல எப்படி ஆடை அணிய வேண்டும் என்பதையும் கோடிட்டுக் காட்டியுள்ளது. எந்த நாடுகளும்கூட ஆடை அணிவதைக் கட்டாய சட்டமாக்கியுள்ளதாகத் தெரியவில்லை.  உலகில் ஏற்படும் அதிகமான சமூகப் பிரச்சினைகட்கு பெண்களின் ஆடைகளே காரணமாக அமைந்துள்ளன என்பது ஆதாரபூர்வமாக அறியப்பட்டுள்ளது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கின்றது குர்ஆன் கூறும் தொங்கவிடும் ஆடை முறை.

ஆக முகத்தை முகத்திரை கொண்டு மூடியிருந்தால் குர்ஆன் கூறியுள்ளவாறு அவர்கள் அறியப்படுவது எவ்வாறு? இதிலிருந்து முகத்திரை இஸ்லாம் கூறாத ஒன்று. குர்ஆன் கூறாத ஒன்றைப் பின்பற்றுவது இறை நிராகரிப்புக்கு வழிகோலுவதாகவே அமையும். தேவை கருதி சூழல் மாசடையும் சந்தர்ப்பங்களில் அனைவருமே மூக்கை மறைத்து அணியலாம். இஸ்லாத்தில் நிர்ப்பந்தமில்லை.  

‘அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும்’ என்பதில் அறியப்படுவது என்பதே மிகமுக்கியமாக இக்கால கட்டத்தில் அவசியமாக வேண்டப்படுவது. பாதையில் நடப்பதற்கு, வாகனத்தில் போவதற்கு, வெளிநாடு செல்வதற்கு, வங்கியில் பணம் பெறுவதற்கு, எந்தக் கட்டிடத் துக்குள்ளும் நுழைவதற்கு போன்ற இன்னோரன்ன அனைத்துக்கும் ஆளடையாளம் என்ற முகம் காட்டும் நிலை உள்ளது. ஏன் வீட்டில் தங்கி இருப்பதற்குக்கூட நம்மை அறியவைக்க வேண்டியுள்ளது. அதற்காக நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமது முகத்தை மறைக்காது வைத்திருத் தல் ஒன்றே. நாம் முகத்தை மறைத்துக் கொண்டு இருப்போமானால், நம்மை யாரும் அறிய முடியாது என்பது மட்டு மல்ல, நமது முகத்திரையை விலக்கிக் காட்டவேண்டிய பரிதாப நிலைக்கும் தள்ளப்படுவோம். இது மேடையில் ஆடையைக் களைவதை ஒத்ததே. அது அவமானத்தை ஏற்படுத்தி அவசியமற்ற அறிவுறுத்தல்கட்கும் அசௌகரியங் கட்கும் ஆளாகும் நிலை. ஆக அம்முகத்திரை துன்புறுத்தலையே மொத்தமாகக் கொள்முதல்  செய்கின்றது.

அல்லாஹ் கூறியவாறு ஆடை அணிந்தால் இந்த துன்புறுத்தலுக்கு ஆளாக வேண்டி வந்திராதே.  அல்லாஹ் எவ்வளவு தூரதிருஷ்டியுடன் நுணுக்க மாகச் சட்டங்களை யாத்து எமக்குப் பாதுகாப்பு அளித்துள்ளான் என்பதை நினைக்கும் போது நாம் இஸ்லாமியராகப் பிறப்பதற்கு உதவிய அக் கருணையாளனான அல்லாஹ்வுக்கு என்றும் நாம் நன்றி உடையவர் களாக,  அமைந்து நடப்பவர்களாக, உண்மை முஸ்லிம்களாக, பயபக்தி யாளராக இருக்க முயற்சிக்க வேண்டும். அதுவே நாம் அவனுக்குச் செய்யும் கைமாறு நன்றி. அதே சமயம் நமக்கே நன்மை பயப்பது. 5:48-“ மேலும், உமக்கு வந்துள்ள உண்மையை விட்டும் அவர்களுடைய மனோ இச்சைகளைப் பின்பற்றாதீர்.” அல்லாஹ் நம்மனைவரையும் வழி நடத்துவானாக.
                                                                                                          -   நிஹா -
                                                                                                         




 Lankamuslim.org

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் . சிலரால் ‌nizamhm1944 வுக்கெதிராக எழுதப்பட்ட அவதூறுகளுக்குப் பதில் அளித்து அவரால் எழுதப்பட்ட கருத்துரை.


http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/


நான் குர்ஆனின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழுங்குவது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறியிருப்பதையும், ஹலால்  முத்திரை பொறிப்பதால், எதிர்காலத்தில் ஹறாமை அறியாது, ஹலால் முத்திரை பார்த்து ஹறாத்தை உண்ணும் பயங்கரத்தையும் நிரூபித்ததையும், 1400 வருடங்களுக்கு மேலாக ஹறாமைத் தவிர்த்து உண்டமையால் பிரச்சினைகள் உருவாகவில்லை எனக் கூறியதையும், அல்லாஹ்வின் ஹறாத்தை விலக்கி வாழும் சுன்னாவே சிறந்தது என்பதையும், ஹலால் முத்திரையால் நாட்டில் குழப்பமும், முஸ்லிம்களுக்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்பன போன்று எழுதியிருந்த இன்னும் சிலதையும், எனக்கெதிராக கருத்துரை எழுதியோர் எவரும், தக்க பதிலை குர்ஆனின் அடிப்படையில் அளிப்பதை விடுத்து, சேறுபூச முயன்றமையில் இருந்து, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கும், ஹலால் முத்திரை பொறிப்பதற்கும் ஆதாரமான எதுவும் குர்ஆனில் இல்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

குர்ஆனிய உண்மைகளை மறைப்பது குற்றம், அதிலுள்ளவற்றை வெளிப்படுத்துவது இஸ்லாமியனின் கடமை என்ற அடிப்படையில் நான் எழுதியவை பற்றிய தீர்ப்பை வழங்கக் கூடியவன்,  யாவுமறிந்த, நுண்ணறிவாளனான அ்ல்லாஹ்வே.

நான் குர்ஆனுக்கு மாற்றமாக எழுதியிருந்தால், எ்னனை இவ்வுலகிலும், மறுவுலகிலும் தண்டிப்பானாக.  அல்லாவிடில் இதற்கு எதிராக எழுதியவர்களுக்கு நல்லறிவைக் கொடுப்பானாக. அவனது உம்மத்தை இந்த ஹலால் முத்திரையின்  பயங்கரத்திலும், பாதகத்திலும் இருந்து காப்பானாக!

உண்மையில், நான் அஇஜ உலமாவின் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு குர்ஆனிய ஆதாரமில்லை எனக் கூறியதை, குர்ஆனிய அடிப்டையில் மறுத்திருக்க வேண்டிய கடப்பாடு, அஇஜஉலமாவுக்கே உரியது.

அது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறிய பின்னரும், அவர்கள் வாளாவிருப்பதும், மௌனம் சாதிப்பதும் ஏன்?

அரசின் ஆதரவு உண்டு என்பதற்காக இஸ்லாத்துக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு ஆபத்தையும், பாவத்தையும் வருவிக்கும் செயற்பாட்டை தொடரலாமா?

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கட்டுரையில் nizamhm1944 என்பவரால் பதியப்பட்ட கருத்துரை




Lankamuslim.org  இல்

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்ற கட்டுரையில்  nizamhm1944 என்பவரால் பதியப்பட்ட கருத்துரை


http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/#comment-8019


எத்தனை நாடுகளில் தனியார் நிறுவனங்கள் ஹலால் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்பது, அகில இலங்கை ஜம்இய்யத்துல் ஹலால் உலமா சான்றிதழ் வழங்குவதற்கான தகுதியாகவோ அங்கீகாரமாகவோ ஆகிவிடாது.

எவ்வாளவு பணம் பெறுகிறோம், அனைத்தும் நிர்வாகச் செலவுகளுக்காகவே செலவிடப்படுகின்றது, பயங்கரவாத குழுக்களுக்கு இந்நிதி போகவில்லை, என்பது எதுவும், ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கான அதிகாரத்தைத் தந்து விடாது.

முதற்கண் குர்ஆனிய அங்கீகாரம் உண்டா?

இன்றேல், இந்நடவடிக்கை குர்ஆனுக்கு எதிரான பண்பைக் கொண்டிருக்கவில்லை என்கிறீர்களா?

இதனால் எதிர்காலத்தில், ஹலால் முத்திரையுடன் ஹறாம் உணவுகள் விற்பனைக்கு வந்து, அதனை அறியாத அப்பாவி முஸ்லிம்கள் ஹலால் என பன்றி இறைச்சியை வாங்கி உண்ணும் நிலை ஏற்படாதா? அந்நிலை தற்போதே ஏற்பட்டுள்ளதை மறுக்கிறீர்களா?

அண்மையில் பன்றி இறைச்சி ஹலால் முததிரையுடன் விற்பனையானதாக நீங்களே கூறியுள்ளீர்களே!

இவ்வருடம் ஹலால் சான்றிதழுடன், ஹலால் முத்திரை பொறிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட உணவுப் பண்டம், அடுத்த வருடம் ஹலால் சான்றிதழ் பெறப்படாமல் உண்ண முடியாது என்ற நிலையை அடையும் போது, அல்லாஹ் ஆகுமானது என்று கூறிய உணவுப் பண்டம், (சென்ற வருடம் உண்ண அனுமதிக்கப்பட்ட து ) இவ்வருடம் ஹறாமான நிலையை அடைகிறது.

அல்லாஹ்வின் கூற்றுப்படி, தான் ஆகுமானதாக்கியதை நீங்கள் ஆகாது எனக் கூற உங்களுக்கு வேறு தெய்வங்கள் இருந்து அனுமதி தந்தனவா? அன்றேல் தன்மீது கற்பனை செய்கிறீர்களா எனக் கேட்பது, ஷிர்க்கை வருவித்தல் என்பதை மறுக்கிறீர்களா?

சிங்கள மக்களும், பௌத்த பிக்குகளும் ஹலால் முத்திரைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதும், முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதற்கும், முஸ்லிம்களைத் தாக்குவதற்கும், முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்குமாறு கூறுவதற்கும் ஹலால் முத்திரை காரணமாகி, நாட்டில் குழப்பத்தை உண்டுபண்ணி முஸ்லிம்களின் இருப்புக்கும், பாதுகாப்புக்கும், தொழிலுக்கும் குந்தகம் விளைவித்துள்ளதற்கு யார் பொறுப்பாளர்?

நீங்கள் செய்யும் பிழைகள் முஸ்லிம்களுக்கு எதிராக மாறுவது நியாயமா? இதனை இஸ்லாம் அனுமதிக்கின்றதா?

இந்த எதிர்ப்பலைக்கு, நீங்கள், வேறு காரணங்கள் காட்டுவதும், அதற்கு மதவிரோத நடவடிக்கை என்ற முலாம் பூசுவதும், நாம் செய்யும் குற்றத்தை இன்னொருவர் மீது சுமத்துவது என்ற அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட குற்றச் செயல் இல்லையா?

முஸ்லிம்கள் ஹலால் உணவு உண்பதற்காக, அந்நிய மதத்தவர் ஏன் ஒரு சதமாயினும் அதிகமாகச் செலவு செய்ய வேண்டும்? என்ற சிங்களவரின் நியாயமான கேள்விக்கு உங்கள் பதில் என்ன? இது இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கை என்பதை மறுக்க முடியுமா? இதனால் பெறப்படும் பணம் ஹறாமான தேட்டமாகாதா?

மறைமுகமான நிர்ப்பந்தங்களை உருவாக்கி ஹலால் முத்திரை பெறும்படி தூண்டுவது, குர்ஆனுக்கு மாற்றமி்ல்லையா?

நீங்கள் ஏன் 1425 வருடத்துக்கும் அதிகமாக நடைமுறையில் இல்லாத ஒன்றை செய்ய வேண்டும் என்று ஏன் துடிக்கிறீர்கள்?

இத்தனை காலமும், ஹலால் முத்திரை பொறிக்காத நிலையில் முஸ்லிம்கள் ஹறாமான உணவையா சாப்பிட்டு வந்தனர்?

முஸ்லிம்களை பாதுகாப்பதாகக் கூறும் உங்களுக்கு, அல்லாஹ்வின் அனுமதி உள்ளதா? நமது நாயகம் ஸல் அவர்களுக்கே முஸ்லிம்களைப் பாதுகாக்கும் உரிமை வழங்கப்படவில்லையே? அவனைத் தவிர வேறு பாதுகாவலன் இல்லை என்பதற்கு எதிராக நீங்கள் இயங்குவது ஷிர்க் என்பதை அறியவில்லையா?

ஹலால் முத்திரையால் குழப்பம் உண்டாகி உள்ளது. குழப்பம் உண்டாக்குவது குர்ஆனிய அடிப்படையில் மரண தண்டனைக்கு உரிய குற்றம் என்பதை மறுப்பீர்களா?

தொண்டாக இதைச் செய்வதாகக் கூறும் நீங்கள் பணம் அறவிடுவது ஏன்?

அப்படித்தான் செய்ய வேண்டுமென்றால் கூட அதனை அரசே, தனது, சுகாதாரத் திணைக்களத்தின் மூலம் மிகச் சிறப்பாக, தகுதியான நிபுணர்களை நியமித்து, சிறந்த ஆய்வு கூடங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தலாமே!

தற்போது உணவுப் பொதிகளின் மேலுறைகளில், அதனுள் பாவிக்கப்பட்ட பொருட்களின் அட்டவணை காணப்படுவது போதாது என்றால் மேலதிகமாகத் தகவல்களைப் பிரசுரிக்குமாறு கேட்கலாமே!

எப்படி இருந்தாலும், ஹலால் முத்திரை பொறித்து உணவுப் பொருட்களை விற்பனைக்கு விடுவது ஆபத்தானது. ஹலால் முத்திரையுடன் ஹறாம் விற்பனையாகும். ஹலால் முத்திரை பார்த்து பொருட்களை வாங்கிப் பழக்கப்பட்ட மக்கள் இதனால் ஹறாமை தாங்கள் அறியாமலே உண்ணும் நிலை நிச்சயம் ஏற்படும். அதற்கு நீங்களும் அல்லாஹ்விடம் பொறுப்புக் கூறவேண்டும்.

Wednesday, February 6, 2013



Lankamuslim.org
ரணில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிறாரா ? என்ற கட்டுரைக்கு ‌nizamhm1944 எழுதிய கருத்துப்பதிவு.

http://lankamuslim.org/2013/02/06/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/#comment-8006



// ஹலால் சான்றிதழ் பெறுவதில் சிங்கள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனரா என அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கோரியுள்ளார். //

ஆர்ப்பாட்டங்களின் போது முன்வைக்கப்படும் முதன்மைக் குற்றம் ஹலால் சான்றிதழ் பற்றியது என்பதனால், பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெற, முஸ்லிம்களையும், முஸ்லிம் வியாபாரிகளையும் காப்பாற்ற, பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிய வேண்டியது கடமை என்பதால்,  ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு அதனைஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததில் என்ன தவறு இருக்கின்றது?

அது சரியென நான் எழுதிய கருத்துப் பதிவு நீக்கப்படக் காரணம் என்ன? அப்படியாயின் சிங்கள வர்த்தகர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஆசிரிய பீடம் ஏற்றுக் கொள்கின்றதா? இன்றேல் பயப்பட வேண்டும்? ஏன் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகக் கருத வேண்டும்?  எரியும் நெருப்பை அணைக்க முற்படும் செயலாக ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?

Paristamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் பயங்கரமானதாக இருக்குமென எச்சரிக்கை!

Paristamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் பயங்கரமானதாக இருக்குமென எச்சரிக்கை!

The majority of Sinhala mass have better thinking than this inferior motives.

Paristamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் பயங்கரமானதாக இருக்குமென எச்சரிக்கை!

Paristamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் பயங்கரமானதாக இருக்குமென எச்சரிக்கை!

Well said. It is the reality. I agree this. These type of arrogance cannot be reached the solution.It is an impossible task but create unwanted calamities among the citizens of this country.


Lankamuslim.org  இல்
“பௌத்த கடும்போக்காளர்களின் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள்“ என்ற கட்டுரையில் ‌nizamhm1944 ஆல் எழுதப்பட்ட கருத்துப் பதிவு.


http://lankamuslim.org/2013/02/03/%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/#comment-7992



// ஹலால் சான்றிதழை பெறுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வற்புறுத்தவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர் தெரிவித்தார்.உற்பத்தியாளர்களின் வேண்டுகோளின் காரணமாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையினால் தொண்டர் அடிப்படையிலே ஹலால் சான்றிதழ் வழங்கும் சேவை இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டார். //

உற்பத்தியாளர் வேண்டுகோளை நடைமுறைப் படுத்துவதற்காக ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதாகக் கூறும் கூற்றே, அது மார்க்க காரியம் அல்ல என்பதை வெளிப்படுத்துகின்றது. மார்க்க விடயங்களில் ஈடுபட வேண்டிய உலமா சபை யார் யாரையோ எல்லாம் திருப்திப்படுத்த முனைந்து, இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகளையும், குழப்பங்களையும், அமைதியின்மையையும் ஏற்படுத்துகின்றதா என்ற கேள்வி எழுகின்றது!

கூறுவதுபோல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஒரு தொண்டர் ஸ்தாபனம் போன்று இயங்கி சேவை செய்வதாக இருந்திருந்தால், அதன் நடவடிக்கையான ஹலால் சான்றிதழ் வழங்கும் முறை முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுத்திருக்கப்பட மாட்டாது. அது இலங்கை முஸ்லிம்களின் மதஅனுஷ்டான விடயங்களி்ல் முடிவெடுக்கும் அதியுயர் பீடமாகத் தன்னை வர்ணித்துக் கொண்டுள்ளது. அதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் கூறுகிறது. அதுவே முஸ்லி்களுக்கெதிரான பிரச்சினையாக ஹலால் சான்றிதழை உருவாக்கியுள்ளது.

ஆதலால், அதன் ஒவ்வாரு நடவடிக்கையும் குர்ஆனிய அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, தொண்டர் சேவையாக குர்ஆனுக்கு மாற்ற மான சேவைகளைச் செய்வதாக, அதன் மூலம் அது பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம்களின் மத அனுஷ்டானங்களுக்கும், வாழ்வியல் ஆதாரமான வியாபாரங்களுக்கும், அவர்களின் அமைதியான, பயமற்ற, மற்றவர்களின் சந்தேகமற்ற தன்மைக்கு எதிரான நிலையை ஏற்படுத்தக் கூடாது.

அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையே தற்போது அந்நிய மதத்தவரின் பாரிய எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது. அதுவே முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூல காரணியாக உள்ளது.

இத்தொழிலை அல்லது தொண்டர் சேவையைச் செய்வதற்கு எதிர்ப்பும், அதனால் எவ்வித வருமானமும் அற்ற நிலையில் ஏன் அதனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும்.

அவர்கள் சொல்வதுபோல் ஏற்றுமதியைக் கூட்டுவதும், உற்பத்திகளுக்கு சந்தையைப் பிடித்துக் கொடுப்பதும், அந்நியச் செலாவணியை இந்நாட்டுக்குப பெற்றுக் கொடுப்பதும் நல்ல விடயமானாலும், அது புத்த குருமார்களாலேயே ஏற்கப்படாது, எதிர்ப்பு காட்டப்படுமிடத்து, குழப்பங்கள் தோன்றுமிடத்து, முஸ்லிம்களுக்கு பாரிய பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, ஏன் பின்பற்றப்பட வேண்டும்?

பஸில் ராஜபக்ஷ் அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை மிகவும் வரவேற்றுள் ளார்கள் என்று அஇஜஉ கூறுவதாயின், அவரிடம் கூறி இப்பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்கலாமே! அல்லது அவரிடம் கூறி அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட் டுக்கு ஆதரவான அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே! அஇஜஉ வின் செயற்பாடுகள் யாரிடமோ அங்கீகாரம் பெறப்படுவதாகக் கூறப்படும் நிலையை நினைக்கும் போது…. நாம் எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் என நினைக்கத் தோன்றுகிறது.

அனைத்துக்கும் மேல், இஸ்லாம் தோன்றி 1430 ஆண்டுகள் ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறை எவராலும் மேற்கொள்ளப்படவில்லை. அக்காலங்களில் முஸ்லிம்கள் ஹறாமைத் தவிர்த்து நடக்கவில்லையா? கடந்த நான்கைந்து ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியால்தானா ஹலால் சான்றிதழ் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது?

ஆம் எனின், இஸ்லாம் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போன மார்க்கமா?” உலக அழிவு வரை செல்லுபடியாகக் கூடியது, தெளிவானது, அனைத்துக்கும் தீர்வைக் கொண்டது, சந்தேக மற்றது, முழுமையானது, பாதுகாக்கப்பட்டது என்பவை எல்லாம் வெறும் பிதற்றல்களா? அல்லாஹ் யாவுமறிந்தவன் என்பது பொய்யா? இப்படி யொரு நிலை வருமென்பதை அவன் உணர்ந்திருக்கவில்லையா? அல்லாஹ் மன்னிக்க வேண்டும்.

அஇஜஉ வின் ஹலால் சான்றிதழ் வழங்கும் பங்களிப்பின்றி, இஸ்லாம் முழுமை யடையாதா? நடைமுறைச் சாத்தியமற்ற மார்க்கமா இஸ்லாம்?

ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு ஆதாரமாக ஒரு குர்ஆன் வசனத்தையாவது கொண்டு வர முடியுமா?

ஹலால் சான்றிதழ் வழங்குவது இஸ்லாத்துக்கு மாறானது, ஷிர்க்கையும் வருவிப்பது என்பதை மறுக்க முடியுமா?

ஹலாலான உணவுகளை வகைப்படுத்த முனைவது, உலகை அளக்கத் துணிவதைவிட சிரமமானது, அது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதனால், மனிதர்களுக்கு சிரமத்தை விரும்பாத அல்லாஹ் ஹறாமான நான்கு உணவுகளை மிகத் தெளிவு படுத்தியுள்ளான். அந்த வழிமுறையே, இதுகால வரை சிறப்பாக, உலக அங்கீகாரத்துடன், இலகுவாக, எதிர்ப்புக்களின்றி அனைத்து முஸ்லிம்களாலும் செயற்படுத்த முடிந்துள்ளது.

ஹலால் முத்திரை, ஹறாமானதை ஹலாலால் என்ற அங்கீகாரத்தைக் கொடுத்து, அதனை முஸ்லிம்கள் உண்ணும் பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளதை மறுக்க முடியுமா? ஹலால் முத்திரை பொறிக்கும் முறையால் எதிர்காலத்தில், ஹறாமான பொருட்கள் ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் நிலை ஏற்படாதா? ஹலால் முத்திரையைப் பார்த்து பொருட்களை வாங்கி உண்ணும் நிலை ஏற்படாது என்பதை யாராவது உத்தரவாதம் தரமுடியுமா?

முடியாது என்பதை சில நாட்களுக்கு முன்னர் சுப்பர் மார்க்கட்டுக்களில் பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படுவதாக அஇஜஉ வே கூறியது நிரூபித்துள்ளது. அதனைத் தடுக்க அஇஜஉ வே பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி, முஸ்லிம்களை உஷார்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டதை மறுப்பீர்களா? இது போன்ற ஹறாமான பொருட்கள் இதன் பின்னர் ஹலால் முத்திரையுடன் விற்பனைக்கு வரும் போதெல்லாம் மக்களை உஷார் படுத்திக் கொண்டிருப்பது யார்? இதற்குப் பின்னராவது தமது இமாலயத் தவறையும், அல்லாஹ்வின் நுண்ணறிவையும் அறிந்து வியந்து நடைபெறும் தமது பிழையைத் திருத்த முயற்சிக்கலாமே!

இதன் பின்னராவது, அல்லாஹ்வின் சுன்னாவாகிய ஹறாம் பற்றிய அறிவே மக்களுக்கு வேண்டப்படுவது, ஹலால் முத்திரை பொறிக்கும் முறை அல்ல என்பதை அஇஜஉ ஏற்று நடக்குமா?

காலப் போக்கில் இஸ்லாமியர் வழிதவற வழி செய்யும் நோக்கில் யாரோ விஷமிகளால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஹலால முத்திரை பொறிக்கும் புதிய, ஆனால் பிழையான நடைமுறைக்கு அஇஜஉ வே பலியாகி உள்ளது என்பதை மறுக்க முடியுமா?

Saturday, February 2, 2013

Paristamil Tamil News - ஏழு காட்சிகளை நீக்க கமல் சம்மதம் - தடைகளை தாண்டி வெளிவரும் விஸ்வரூபம்

Paristamil Tamil News - ஏழு காட்சிகளை நீக்க கமல் சம்மதம் - தடைகளை தாண்டி வெளிவரும் விஸ்வரூபம்

Really appreciable conclusion which clear the doubts and allegations of the Muslims and restore peaceful moments.

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

உன் எழுத்துக்கள் உன் பிறப்பை வெகு துலாம்பரமாகக் காட்டுகிறது. உன் அளவூக்கு கீழ்த்தரமாக நான் எழுதத் தயாரில்லை.

Paristamil Tamil News - அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்?

Paristamil Tamil News - அதிரடி தாக்குதல்களுக்கான தயாரிப்புப் பணிகளில் மீண்டும் புலிகள்?

Very good imagination and best  joke of the year.

Paristamil Tamil News - சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்துக்கு தடை: ஜெயலலிதா

Paristamil Tamil News - சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே விஸ்வரூபம் படத்துக்கு தடை: ஜெயலலிதா

The Chief Minister of Tamil Naadu Miss. Jeyalalitha's statement on the ban of Viswarupam is excellent,very suitable and logically acceptable reasons. She didn't uttered a single word on the contents of the film, which is the controversy of the issue.