Wednesday, February 6, 2013



Lankamuslim.org
ரணில் எரியும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுகிறாரா ? என்ற கட்டுரைக்கு ‌nizamhm1944 எழுதிய கருத்துப்பதிவு.

http://lankamuslim.org/2013/02/06/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/#comment-8006



// ஹலால் சான்றிதழ் பெறுவதில் சிங்கள வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனரா என அரசாங்கம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் கோரியுள்ளார். //

ஆர்ப்பாட்டங்களின் போது முன்வைக்கப்படும் முதன்மைக் குற்றம் ஹலால் சான்றிதழ் பற்றியது என்பதனால், பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெற, முஸ்லிம்களையும், முஸ்லிம் வியாபாரிகளையும் காப்பாற்ற, பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிய வேண்டியது கடமை என்பதால்,  ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு அதனைஆய்வு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்ததில் என்ன தவறு இருக்கின்றது?

அது சரியென நான் எழுதிய கருத்துப் பதிவு நீக்கப்படக் காரணம் என்ன? அப்படியாயின் சிங்கள வர்த்தகர் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஆசிரிய பீடம் ஏற்றுக் கொள்கின்றதா? இன்றேல் பயப்பட வேண்டும்? ஏன் எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதாகக் கருத வேண்டும்?  எரியும் நெருப்பை அணைக்க முற்படும் செயலாக ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?

No comments: