Thursday, February 7, 2013




 Lankamuslim.org

ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் . சிலரால் ‌nizamhm1944 வுக்கெதிராக எழுதப்பட்ட அவதூறுகளுக்குப் பதில் அளித்து அவரால் எழுதப்பட்ட கருத்துரை.


http://lankamuslim.org/2013/02/07/%E0%AE%B9%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/


நான் குர்ஆனின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழுங்குவது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறியிருப்பதையும், ஹலால்  முத்திரை பொறிப்பதால், எதிர்காலத்தில் ஹறாமை அறியாது, ஹலால் முத்திரை பார்த்து ஹறாத்தை உண்ணும் பயங்கரத்தையும் நிரூபித்ததையும், 1400 வருடங்களுக்கு மேலாக ஹறாமைத் தவிர்த்து உண்டமையால் பிரச்சினைகள் உருவாகவில்லை எனக் கூறியதையும், அல்லாஹ்வின் ஹறாத்தை விலக்கி வாழும் சுன்னாவே சிறந்தது என்பதையும், ஹலால் முத்திரையால் நாட்டில் குழப்பமும், முஸ்லிம்களுக்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்பன போன்று எழுதியிருந்த இன்னும் சிலதையும், எனக்கெதிராக கருத்துரை எழுதியோர் எவரும், தக்க பதிலை குர்ஆனின் அடிப்படையில் அளிப்பதை விடுத்து, சேறுபூச முயன்றமையில் இருந்து, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கும், ஹலால் முத்திரை பொறிப்பதற்கும் ஆதாரமான எதுவும் குர்ஆனில் இல்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

குர்ஆனிய உண்மைகளை மறைப்பது குற்றம், அதிலுள்ளவற்றை வெளிப்படுத்துவது இஸ்லாமியனின் கடமை என்ற அடிப்படையில் நான் எழுதியவை பற்றிய தீர்ப்பை வழங்கக் கூடியவன்,  யாவுமறிந்த, நுண்ணறிவாளனான அ்ல்லாஹ்வே.

நான் குர்ஆனுக்கு மாற்றமாக எழுதியிருந்தால், எ்னனை இவ்வுலகிலும், மறுவுலகிலும் தண்டிப்பானாக.  அல்லாவிடில் இதற்கு எதிராக எழுதியவர்களுக்கு நல்லறிவைக் கொடுப்பானாக. அவனது உம்மத்தை இந்த ஹலால் முத்திரையின்  பயங்கரத்திலும், பாதகத்திலும் இருந்து காப்பானாக!

உண்மையில், நான் அஇஜ உலமாவின் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு குர்ஆனிய ஆதாரமில்லை எனக் கூறியதை, குர்ஆனிய அடிப்டையில் மறுத்திருக்க வேண்டிய கடப்பாடு, அஇஜஉலமாவுக்கே உரியது.

அது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறிய பின்னரும், அவர்கள் வாளாவிருப்பதும், மௌனம் சாதிப்பதும் ஏன்?

அரசின் ஆதரவு உண்டு என்பதற்காக இஸ்லாத்துக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு ஆபத்தையும், பாவத்தையும் வருவிக்கும் செயற்பாட்டை தொடரலாமா?

No comments: