Thursday, February 28, 2013

‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்



Commented by mizamhm1944 on:
Lankamuslim.org

One World One Ummah

‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்


இந்நாடு பல்லின மக்கள் வாழும் நாடு.  இங்கு பல்வேறு மதங்களும், கலாசாரங்களும், மொழிகளும் பின்பற்றப்படுகின்றன.  இந்நாட்டின் அரசியல் யாப்பு அவரவர் மதத்தை, கலாசாரத்தை, மொழியை பின்பற்றுவதற்கு அனுமதியளிக்கின்றது.

ஹிஜாப், அபாயா இஸ்லாமிய பெண்களுக்கு, குர்ஆன் பரிந்துரைத்துள்ள ஆடை முறையைத் தழுவியது. அதனை அணிவதற்கு இடையூறு விளை விப்போர், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்கின்றனர் என்பதோடு, இந்த நாட்டின் யாப்பைத் துச்சமென மதித்து, மிதித்து இன்புறுகின்றார்கள் என்பதை அரசு கவனத்திற்“ கொள்ள வேண்டும்.

சட்டத்துக்கு முன்னர் யாவரும் சமன், முஸ்லிம்களும் இந்நாட்டுப் பிரஜைகள், மற்றைய இனங்களுக்கு உரிய அத்தனை உரிமைகளும், அவர்களுக்கும் உண்டு. ஆதலால், முஸ்லிம்கள் தமது மார்க்கத்தை, கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பார்ப்பது அரசின் கடமை. இதனை அரசு செய்யும் என அமைதி விரும்பும் அனைத்து மக்களும் எதிர்பார்க்கின்றார்கள்

No comments: