Saturday, June 15, 2013

குர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்!

குர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்!

25:44 - ”அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீரா? அவர்கள் கால்நடையைப் போன்றவர்களேயன்றி வேறில்லைஅன்றியும், அவர்கள் பாதையால் மிக வழிகெட்டவர்கள்.”

மேற்கண்ட வசனம் குர்ஆன் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதன் அத்தி யாவசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மனிதன் என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள குர்ஆனை அறிந்திருக்க வேண்டியுள்ளது. மனிதனை மந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் குர்ஆனிய அறிவே! விளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறியிருப்பது, நமக்கு தரப்பட்ட ஆறாவதறிவை, நுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே!.  இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? உய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமா? போன்ற கேள்விகள் அல்லாஹ்வால், நாம் குர்ஆனில் உள்ளவற்றை சிந்திக்க வேண்டும், உய்த்துணர வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கும் வினாக்களாக வெளிப்பட்டுள்ளன

புனித பைபிளில் கூட இததனையொத்த வசனம் காணப்படுகின்றது. இது வேதம் அறியப்படாத நிலையை வெளிப்படுத்துவது.

எதில் உங்களுக்கு தீர்க்கமான ஞானம் இல்லையோ அதனைப் பின்பற்றா தீர் என்ற குர்ஆனிய வசனம் கூட, குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. குருட்டு நம்பிக்கை பற்றியும் குர்ஆன் இழித்துரைக்கின்றது. முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவல் எதனை நமக்கு உணர்த்துகின்றது? குர்ஆன் அறியப்பட வேண்டியது என்பதை இல்லையா?   தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்தே கொடுக்கப் பட வேண்டும் என்ற கட்டளையை நிறைவு செய்ய எதனைப் பார்வையிட வேண்டியுள்ளது?

இதிலுள்ள மிகச் சிறந்ததைத் தேடுங்கள் என்பதுவும், அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழி யைத் தேடிக் கொள்ளுங்கள் போன்ற வசனங்கள் குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்த வில்லையாஇப்படிக் கூறிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு அல்லாஹ்குர்ஆனை மனிதர் அறிதல் பற்றிப் பேசியுள்ளான்நமது வாழ்க்கையைச் சீராக நடத்திச் செல்வதற்கும் இந்த குர்ஆனே  தேவைப்படுகின்றது. குர்ஆனை ஓதுவத னால் இதயங்கள் அமைதி அடைகின்றன எனக் கூறப்பட்டுள்ளதாலும் குர்ஆனை ஓத வேண்டிய தேவையே உள்ளது. இது ஓர் நோய் நிவாரணி என்பதாலும் அதனை அனுபவிக்க குர்ஆனையே அறிய வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது, ஈமானைப் பலப்படுத்திக் கொள்ள, வேதங்களை அறிய வேண்டிய கடமையை நிறைவு செய்வதுடன்,  அல்லாஹ்வை, அவனது வானவர்களைதூதுவர்களை, மறுமையை, கலா, கத்ர் முதலியவற்றையும் அறிய குர்ஆனையே புரட்ட வேண்டி யுள்ளதுகுர்ஆனிலேயே மூழ்க வேண்டியுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தைகளே மேலேறிச் செல்கின்றன என்பதால், அவற்றை அறிந்து கொள்ள குர்ஆனைத் தவிர வேறு எதனில் அதனைக் கண்டு கொள்வது?

இதற்கும் மேலாக, குர்ஆனே நமது இம்மை வாழ்வுக்கும், மறுமை வாழ்வுக்கும் வழிகாட்டியாகவிருப்பதால் அதனையே அறிய வேண்டி யுள்ளதுநாயகத் திருமேனி அவர்களின் வாழ்கை பற்றிக் கருத்துக் கூறிய அவர்களது அருமை மனைவி ஆயிஷா நாயகியவர்கள், ரசூலே கரீம் அவர்களுடைய வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது எனக் கூறி இருந்ததும்குர்ஆனை அறிவதன் இன்றியமையாமையை” நமக்கு உணர்த்துகின்றது

சுருக்கிக் கொள்வதற்காக, எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்றைக் கூறி, குர்ஆனை அறிவதன் முக்கியத்துவத்தை  வெளிப்படுத்துகிறேன்அதாவது, நபிகளார் தாமாக எதையும் செய்வதில்லை, அவருக்கு அறிவிக் கப்படும் வஹீயில் கூறப்பட்டதைத் தவிர என அல்லாஹ் சான்று பகர்ந் திருப்பதில் இருந்தும், நான் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டதைத் தவிர எதனையும் செய்வதில்லை என நாயகம் ஸல் அவர்களே கூறிய திலிருந்தும், குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவர் மீதும் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது வாழ்க்கையை குர்ஆனிய கட்டளைக்கமைய அமைத் துக் கொள்வதற்கும் அதன் அறிவே தேவைப்படுகின்றது.

குர்ஆனை எல்லோரும் அறிய முடியாதா?

இந்தக் கேள்விக்கான விடையாக நம் கண்முன் நிற்பவர், நமது கண் மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே. ஆம் அவர்கள் எழுத, வாசிக்கத்த தெரியாத, எழுத்தறிவே என்னவென் றறியாத “உம்மி என அக்காலத்தில் அழைக்கப்பட்டவர் அல்லாஹ் வாலும் உம்மி என வர்ணிக்கப்பட்டவர்  என்பதே! 

87:6 - நாம் ஓதிக் ‌காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர். எனக் கூறுவதில் இருந்து, அல்லாஹ் அவருக்கு ஓதிக்காட்டி, அவரது மனத்தில் அவற்றை நிலைக்கச் செய்து விட்டமை புரிகிறது.  75:18 - ஆகவே, நாம் ஓதினால், பின்னர் அதனை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக!  75:19 - பின்னர் அதனை விளக்கி வைப்பது நிச்சயமாக நம்மீதே பொறுப்பாகும்.  இந்த வசனங்கள் போதும் மேற்கண்ட கேள்வி அவசியமற்றது என்பதை விளங்க. மொத்தத்தில் ஓத வைப்பதும், மனத்தில் இருத்துவதும், விளக்கி வைப்பதும் கூட அல்லாஹ்வின் கடமையாகவுள்ளது என்பது ஒன்றே இக்கேள்வியை இல்லாமலாக்குவது. விடையாக அமைவது.

மேலும். குர்ஆனை அறிய எழுத்தறிவு  கூட அவசியமில்லை. யாரோ ஒருவர் கூறக் கேட்பதன் மூலம் அவற்றை மனத்திலிருத்திக் கொள்ள லாம் என்பது புரிகிறது. எழுத்தறிவில்லை என்பதற்காக இஸ்லாத்தை, குர்ஆனை அறியமுடியாதென்ற நிலையை அல்லாஹ் இல்லா தொழித்து விட்டான். அப்படித்தான் அன்றைய சஹாபாக்கள் அனைவரும் குர்ஆனை மனனம் செய்திருந்தனர். குர்ஆனும் மனப்பாடம் செய்யக்கூடிய சாரியை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இற்றை வரை முஸ்லிம்களில் அநேகர் சில அத்தியாயங்களையாவது அறிந்து, பாடமாக்கி வைத்திருப்பதும் அல்லாஹ்வின் கட்டளையை நிறை வேற்றியதையும், அவன் மனத்தில் இருத்துபவன் என்பதையும் வெளிப் படுத்துவன. இவர்களில் சிலர் எழுத்தறிவற்றவர்கள் என்பதும் குறித்து உணரத் தக்கது. இந்நிலைகூட அல்லாஹ்வின் கருணையின்பாற் பட்டதே! இஸ்லாத்தை அறிந்து ஏற்க உள்ளம் விரிவடைய வேண்டும்

குர்ஆனை அறிவதில் முக்கியம் வேண்டப்படுவது, அதனை ஏற்பதேஎப்போது நம்மிடம் ஏற்கும் மனப்பான்மை வந்து விடுகின்றதோ அப்போது அல்லாஹ் அதனை ஏற்பதற்காக நம் நெஞ்சங்களை விரிவாக்கி விடுகின் றான்  அப்படியானவர் தமது ரப்பின் பிரகாசத்தின் மீது இருக்கின்றார். அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கம் அடைந்து விட்டவர்களுக்கு கேடுதான்அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர் என அல்லாஹ்வே கூறுகிறான். மேலும், 6:125இல்  அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான். .....

சில உலமாக்கள் தமது பிரசங்கங்களின் போது, சாதாரண மக்களுக்கு குர்ஆன் பற்றிக கதைக்க தகுதியில்லாதது போன்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், ‘இவர்கள் யார் குர்ஆன் பற்றிக் கதைக்க’ என்கின்றனர்அந்த கர்வமான, அடிப்படையற்ற, மார்க்கத்துக்கு முரணான, ஆணவம் நிறைந்த கேள்விக்கு விடையாகவே அமைவதாக உள்ளது, மேற்கண்ட அல்லாஹ் வின் வசனம்28:56 இல் மிகத் தெளிவாக இது பற்றிக் கூறுகின்றான்நீர் விரும்பியவரை நிச்சயமாக நீர் நேர்வழியில் செலுத்திவிட முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான்நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிகஅறிந்தவன். இது போல் இன்னுமுள.

மேற்கண்ட சிந்தனை, முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் தம்மால் அறிந்து கொள்ள முடியாதது என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்துவதனால், அவர்கள் குர்ஆனை ஆரய்ந்து பார்க்க வேண்டாமா என்ற இறையாணையை அறியாமல்,நடைமுறைப்படுத்தாமல் போவதுடன்,குர்ஆனைப் புறந் தள்ளிய வர்களாகவும், யாரோ கூறுவதை மட்டும் கேட்டு அதுதான் இஸ்லாம் என்ற மாயையில் வாழும் நிலையிலும் உள்ளார்கள்இதனாலேயே அல்லாஹ் சுபுஹான ஹுவதஆலா தன் அருள்மறையின் 25:30 வசனத்தில்,  ”எனது ரப்பே! நிச்சயமாக என்னுடைய சமூகத்தினர், இந்த குர்ஆனை புறக்கணித்து விட்டனர்என்று தூதர் கூறுவார் எனக் கூறியுள்ளான்

இவ்வசாதாரண, அபாக்யநிலை மார்க்க அறிஞர்களாலேயே மக்கள் மனத்தில் ஊட்டப்பட்டுள்ளது என்பதை அறியும் போது, குர்ஆனின் கீழ்கண்ட அல்லாஹ்வின் கண்டனம் நமது கண் முன் நிற்கின்றது6:119 - ....நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோஇச்சை யின் காரணத்தாலும் திட்டமாக வழி கெடுக்கின்றனர். நிச்சயமாக உம்மு டைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன். மேலும், இத்தகையோர் தாமும் அறியாது பிறரையும் வழிகெடுக்கின்றனர். அவர்கள் தாம் வழிகெடுத்தவர்களின் சுமையையும் சுமப்பர் என எச்சரிக்கை விடுத்துள் ளதும் நோக்கற்பாலதுதலைவர்களின் பேச்சைக் கேட்டு வழிதவறி விட்டோம் எனக் கைசேதப்படுவார்கள் என்ற குர் ஆனின் கூற்றை நிரூபிக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.

மேலும், குர்ஆனின் 2:269இல்”அவன் தான் நாடியவருக்கு ஞானத்தை வழங்குகின்றான்.மேலும் எவர் ஞானம் வழங்கப்படுகிறாரோ அப்பொழுது அவர் அதிகமான நன்மைகளை நிச்சயமாக வழங்கப்பட்டு விடுகிறார். தவிர, புத்திசாலிகள் அல்லாது உணர்ந்து கொள்ள  மாட்டார்கள்.”  மேற்கண்டவை இறைவன் யாருக்கும் தன் ஞானத்தைக் கொடுத்து விடலாம் என்பதையும்அப்படிக் கொடுக்கப்பட்டவர்களை,புத்திசாலிகள், உணர்பவர்கள்  எனக் கூறி, அப்படி அறியாதவர்கள் யார் என்பதை மறுதலையாகக் குறிப்பிட் டுள்ளான்

இவையனைத்தும் குர்ஆன் எவரதும் ஏக போக உரிமையல்ல, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், சிறுவர், முதியோர் போன்ற தகைமை களைக் கொண்டு குர்ஆனை அறியும் பண்பை, தகுதியை அறிவிப்பன வல்ல, மாறாக எவர் அதனை ஏற்று முயற்சியில் ஈடுபடுகிறாரோ, அவரது முயற்சி கணக்கெடுக்கப்பட்டு, அவரை அறிந்த அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்து விடுவதை வெளிப்படுத்துவது.

இவற்றுக்கும் அப்பால் அல்லாஹ் குர்ஆன் பற்றிக் கூறியுள்ள பல வசனங்கள், இந்த குர்ஆன் அறிவதற்கும், ஏற்று நடப்பதற்கும் ஏற்ற விதமாக, மிகவும் தெளிவாக, உதாரணங்களுடன், விரிவாக, சந்தேகம் இல்லாதவாறு, விளக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. குர்ஆனை ஒருவர் ஏற்பதற்கு அல்லாஹ்வின் நாட்டம் வேண்டுவதுடன்அறிவுடையவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது.  ‘தான் நாடியவருக்கே வழிகாட்டுகிறான், ‘உபதேசம் அறிவாளிகளுக்கு மட்டுமே என்ற அல்லாஹ்வின் கூற்றுகள் இதனை உறுதிப்படுத்தும். நல்ல விடயங்களை ஏற்பவர் எப்போதும் அறிவுடையவராகவே இருப்பர்

இன்னொரு முக்கியமான விடயம் குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும், அவர்கள் அறிவதற்காக அருளப்பட்டது என்பதை இடித்துரைக் கொண் டிருக்கின்றது குர்ஆன் ஓர் “நினைவு கூரல்” என்ற சொல்தனியொருவர் நினைவுகூர வேண்டியிருப்பதை தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கின்றதுஆம் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக அவ்வப்போது தனது நபிமார்கள், ரசூல்மார்கள் மூலம் கூறப்பட்டவை அனைத்தையும் மெய்ப்படுத்தும் நோக்கில், அவற்றின் சேகரமாக, அருட்கொடையாக அருளப்பட்டுள்ளதுஆக மறுமை வாழ்வை நிரந்தரமானது எனக் கூறும் குர்ஆன், அவ்வாழ்வில் அவனது நெருக்கத்தைப் பெற, அவனது திருப்தியை, சுவன பாக்கியத்தை யடைய, அவனை நினைவு கூரும்படி கூறுவதற்கவே இறக்கி அருளப் பட்டுள்ளது என்பதை, தனது 7:172 இல் மிகத் தெளிவாகக் குறிப்பிட் டுள்ளான்.

இது ஒன்றே அனைத்துக்கும் மேலாக, அல்லாஹ் நமக்கு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதன் நோக்கத்தையும், அனைவரும் ஏற்றத்தாழ்வு எதுவுமின்றி அதனை அறிய வேண்டியதன் அவசியத்தையும் விளங்கிக் கொள்ளப் போதுமானது. 7:172-இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, “நான் உங்கள் ரப்பு அல்லவா?“ (என்று கேட்டான்) “ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்என்று அவர்கள் கூறியதை, நினைவூட்டும். ஏனென்றால், ”நிச்சயமாக, நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. என்று மிகத்தெளிவாகக் கூறி யுள்ளமை, அவன் நமது புகல்கள் மறுமையில் ஏற்கப்படமாட்டாது என்பதனை  நியாயப்படுத்தி நிற்கின்றது. இப்போது,யார் இவர்கள் இக் குர்ஆனைப் பற்றிப்பேச? என்பதற்கான விடையை மேலதிகமாக குர்ஆனே தந்துள்ளது. மேற்கண்ட குர்ஆன் வசனத்தை அறிவதற்கு எவருடைய உதவியும் தேவையா? இதில் என்ன விளக்கம் குறைவாக உள்ளது? அல்லாஹ் தனது கருத்தை மக்களை அடையச் செய்ய முடியாதவனாகி வேறு யாரும் விளக்கம் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தனது அடியார்களைத் திரிசங்கு நிலையில் விட்டிருக்கிறானா போன்ற கேள்விகளுக்குப் பதிலாக அமையும்!

குர்ஆனை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரு நிலை முன்னர் இருந்தது என்பதை மறுக்க முடியாது. காரணம் அக்காலத்தில் புனித குர்ஆன் அரபு மொழியில் மட்டும் காணப்பட்டதும், அரபியரல்லாதோர் அம்மொழியில் போதிய அறிவு, தேர்ச்சி  பெற்றிராமல் இருந்ததும் காரண மாகும்அத்தோடு மக்கள் மனத்தில், அப்போதைய அறிஞர்களாகக் கருதப் பட்டவர்களால் இந்த குர்ஆனின் ஓர்  (ஹர்பு ) எழுத்துக்குக் கூட கருத்தை அறிந்து கொள்ள முடியாது என்ற அறியாமை ஊட்டப்பட்டிருந் தமையே!. உண்மையில் அவர்கள் கூறியதில் சில உண்மைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்று குர்ஆன் ஓரிரு எழுத்துக்களைக்கூட வசனமாக வெளிப்படுத்தியுள்ளது. அதற்கான கருத்தை சாதாரண நிலையில் உள்ளோர் கண்டு கொள்வதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டும். அல்லாஹ் நாடினால் அந்த அறிவை அவன் நமக்குப் புகட்டுவான். இது அவனது வாக்குறுதியே. அதற்காக, குர்ஆனை யாரும் விளங்கிக் கொள்ள முடியாது என்று எழுந்தமானமாகக் கூறுவோமாயின் அது அல்லாஹ்வின் கூற்றையே மறுதலிப்பதாகும். காரணம் அந்த அளவுக்கு விளக்கமாக உள்ளதாக அல்லாஹ்வே கூறியுள்ளான். பல பொருள்களைக் கொண்ட சில வசனங்களும் உள்ளனஅவற்றின் கருத்தை அல்லாஹ்வே அன்றி அறிவதில்லை. அதனைப் பார்ப்போம்.

3:7 -அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் தெளிவான வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படை யாகும். இன்னும் பல பொருள்களைக் கொண்ட வேறு இருக்கின்றன. எனவே எவர்களின் இதயங்களில் சருகுதல் இருக்கின்றதோ,  அவர்கள் குழப்பத்தைத் தேடியும் அதிலிருந்து பல பொருள்கள் உடையதையே பின்தொடர்கின் றனர். ஆனால், அதனுடைய விளக்கத்தை அல்லாஹ்வையன்றி அறிய மாட்டார்கள். ஆனால், கல்வியறிவில் உறுதியுடையவர்கள்நாங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்தே வந்துள்ளனஎனக் கூறுவார்கள். மேலும், அறிவாளர்கள் அன்றி நல்லுப தேசம் பெறமாட்டார்கள்.

இறுதி வசனத்தைப் பாருங்கள். “நாங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்தே  வந்துள்ளன”  என்பர் எனக் கூறுவது, அது இறை வசனம்தான், ஆனால் அது எமக்குப் புரியாதுள்ளது, ஆயினும் நாம் ஏற்றுள்ளோம். அவன் விரும்பியவர்களுக்கு அந்த ஞானவாசலைத் திறந்துவிடுவான் என அவர்கள் அறிந்திருப்பதனால், அவர்கள் பொறுமை யாக இருந்து அவனை நினைவு கூர்ந்து அவனிடம் உதவி தேடிப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும்  உணர்ந்திருப்பதால் அவற்றின் மறைவை அவன் மூலம் அறிந்து கொள்வர். ‘யார் இவர்கள் குர்ஆன் பற்றிக் கதைக்க? என்ற கூற்று இவ்வாறான தன்மைகளை எல்லாம் இல்லாதொழிப்பதே!

விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையை ஏற்படுத்தி விடுகிறான் என்ற திருவசனம் கூட விளங்கிக் கொள்ள வேண்டியதன் முக்கியத்து வத்தையும் அதனை விளங்காவிடில் வரக்கூடிய வேதனையையும் கூறு வதன் மூலம் குர்ஆன் விளங்கப்படுவது மக்களது கடமையாக்கப் பட்டுள்ளதுஆக, குர்ஆனை விளங்குவது கடமையாக்கப்பட்டுள்ள ஒரு விடயம் என்ற பதிலே, ‘இவர்கள் யார் குர்ஆனைப் பற்றிப் பேச’ என்ற வினாவுக்கு விடை பகர்வதுடன், அவ்வினா இறைமறுப்பாகவும், வழி கேடாகவும் உள்ளதாகக் காட்டி நிற்கின்றது.

மொத்தத்தில், குர்ஆனை விளங்கிக் கொள்ள மனிதனாக இருப்பதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுமே முக்கியமானதாகும். மேலும், விளக்கங்கள் போதாதென நினைப்போர் அல்லாஹ்வின் ஆணையான, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், வேதம் கொடுக்கப்பட்ட வர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் ஞானமுள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்பதையும் பின்பற்றும் நடைமுறையையும் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தித் தந்துள் ளான்  அறிஞர்கள் பொறுமை காப்பதும், அறியாதவர்கள் அறிந்தவர் களிடம் கேட்டுத் தெரிவதும் வெவ்வேறு இரு நிலைகளானாலும். மனித தரத்துக்கேற்றபடியான வழிமுறையே!, அல்லாஹ்வைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் அறிந்து கொள்ளுங்கள் போன்ற அவன் வசனங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அறிந்து, அல்லாஹ் நாடினால் வெற்றியடைய லாம். அல்ஹம்துலில்லாஹ்.

73:19 - நிச்சயமாக இது (திக்ர்) நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்பு கிறாரோ அவர் தனது ரப்பின்பால் செல்லக்கூடிய வழியை எடுத்துக் கொள்வார்.

76:3 - நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியை விளக்கினோம்ஆகவே, நன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம். நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம். மேற்கண்ட வசனங்கள், ஒருமையில் தனி நபரை முன்வைத்துப் பேசுவதும் அறிதற்குரியதே!

39:41 - நிச்சயமாக, மனிதர்களுக்காக உண்மையைக் கொண்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கினோம். ஆகவே, எவர் நேர்வழி பெறுகிறாரோ, அது அவருக்கேயாகும். எவர் வழி தவறுகிறாரோ, அவர் வழி தவறுவதெல்லாம் அவரின் மீதே ஆகும்அவர்களுக்கு நீர் பொறுப்பேற்றுக் கொள்பவரும் அல்லர்இவ்வசனம்,ஒருவர் அறிவதற்கோ அறியாமல் விடுவதற்கோ நபிகளார் பொறுப்பாளர் அல்லர் என்பதும், அது தனிநபர் பிரச்சினை என்பதும்அதன் மூலம் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவரவர் கடமையேமாறாக இவர்கள் யார் குர்ஆன் பற்றி்ப் பேச என்பதை மறுப்பது மாகும்.

45:20 - இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதிகொள் கின்ற கூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

38:29 - பாக்கியமிக்க வேதமாகும்இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப் பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும், இதை உம்பால் நாம் இறக்கி வைத்தோம்.

7:171 - .... நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடித்துக் கொள் ளுங்கள். நீங்கள் பயபக்தியாளர்களாகிவிடலாம்.

45:18 - பி்ன்னர் நாம் உம்மை காரியத்தில் ஒரு வழியின் மீது ஆக்கி வைத்தோம். அதனையே நீர் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் மனோ இச்சைகளை நீர் பின்பற்றாதீர்!

48:20 - இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதிகொள் கின்ற கூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.

4:26  - அல்லாஹ் உங்களுக்கு தெளிவாக்கவதற்கும், உங்களுக்கு முன்னிருந்தவர்களின் நேரான வழிகளில் உங்களை வழி நடத்து வதற்கும், உங்களுக்குப் பாவமீட்சி அளித்திடவுமே விரும்புகின்றான். அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுள்ளவனுமாயிருக்கிறான்.

இவையனைத்தும் குர்ஆனை ஒவ்வொருவரும் அறிந்து, விளங்கி, அதன்படி நடப்பதன் அத்தியாவசியத்தை உணர்த்துவன. இதில் மாறு பாடான கருத்துக்கு இடமில்லை. ‘யார் இவர்கள் குர்ஆனைப் பற்றிக் கதைக்க?என்பதற்கு, இது மனிதர்களுக்கும், ஜின்களுக்குமாகவே இறக்கி அருளப்பட்டது என்ற அல்லாஹ்வின் திருவசனம் முழுமையான பதிலாக அமையும். அல்ஹம்துலில்லாஹ்!

- நிஹா -



No comments: