Wednesday, June 12, 2013

மிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

மிருகவதையை தடுக்க கோரி பாதையாத்திரை


கோழி, வாத்துக்கள், மற்றும் பறவைகள் உயிரினங்கள் இல்லையா? கடலில் வாழும் மீன், கனவா, இறால், நண்டு போன்றவை சுருக்கமாகக் கூறின், மீன்பிடித் தொழில் முற்றாகக் கைவிடப்படுமா? அலங்கார மீன் பிடித்தல்தடை செய்யப்படுமா?

பசுப்பால் தொடர்பான தொழில், இறப்பர் தொழில்,  தோல் பதனிடும் தொழில், பாதணித் தொழில், கருவாட்டுத் தொழில், அரிசி  ஆலைகள், சீனி ஆலைகள்,  அதனோடு ஒட்டிய தொழில்,தேயிலைத் தொழில்,கோப்பித் தொழில், இறப்பர் சம்பந்தமான தொழில், தேங்காய் தொடர்பான தொழில், பனந்தொழில், தும்புத் தொழில், கடதாசி ஆலைகள், சாக்லெட் தொழில்,  இன்னும் பல்வேறு தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுமா? அவற்றில் வேலை செய்வோர் தெருவில் விடப்படுவரா?

மேலும், மிருக வதை என்ற பெயரில் மாடு, ஆடு, பன்றி, கோழி. வாத்து வளர்ப்பு முற்றாகக் கைவிடப்படுமா? அம்மாடுகள் அனைத்தும் கட்டாக்காலிகளாக விடப்படுமா? அவைகளும் தற்போது தெருநாய்கள் போல் திரியுமா?

பெரஹரவில் பயன்படுத்தப்படும் யானைகள் மீண்டும் காட்டுக்குள் விடப்படுமா? தோலினால், இறப்பரினால் செய்யப்படும் இசைக்கருவிகளின் பாவனை நிறுத்தப்படுமா? மிருகக் காட்சிச் சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து மிருகங்களும் பறவைகளும் கூட திற்நது விடப்படுமா?

தண்ணீரில் காணப்படும் கிருமிகள் கொல்லப்படாமல் அப்படியே குடிக்கும்படி ஆர்ப்பாட்டம் தொடருமா? தொற்று வியாதிகளைத் தோற்றுவிக்கும் உயிரினங்களை அழிக்கும் அ னைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்படுமா? சமைக்கும் வேலை முற்றாக நிறுத்தப்படுமா? ‌ஹோட்டல்கள் மூடப்படுமா? மனிதன் தண்ணீரை மட்டும் அதுவும் சுத்தம் செய்யாது குடிக்க வேண்டுமா? நோய் வந்தால் அவை கிருமிகளால் ஏற்படுவதாயின் அவற்றைக் கொன்று சுகப்படுத்தலாமா? வைத்தியசாலைகள் மூடப்படுமா?

மரங்களை வெட்டி இறப்பர் பால் பெறுதல், தளபாடங்கள் செய்தல், தேயிலைக்காக கொழுந்து பறித்தல், நெல் மற்றும் தாவரங்களின் உண்ணுதல் கைவிடப்படுமா, பழம் பறித்து செய்யப்படும் வதை நிறுத்தப்படுமா, பூக்களைக் கொய்தல், தென்னை, பனை, கித்துல் முதலியவற்றைச் சீவி கள் எடுத்தல், மதுபானம் தயாரித்தல் கைவிடப்படுமர்? கொக்கோச் செய்கையின் நிலை என்ன? பட்டுத் தொழில், பருத்தித் தொழில் கைவிடப்படுமா? புகையிலைச் செய்கை நிறுத்தப்டுமா?, மொத்தத்தில் மனிதன் ஆடையின்றி திரிந்த நிலைதானா? அன்று அவர்களாவது எதையும் உண்பதற்கு தடை இருக்க வில்லை.

மாடு, ஆடு மட்டும்ல்ல உயிரினங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன, மரங்களும் கூட உயிரினங்களே! இதனை உணர வேண்டும் மிருக வதை பற்றிப் பேசுவோர். ஒரு மாட்டை, ஆட்டை உணவுக்காகக் கொல்வதை  மிருக வதைஎன்றால், தாவரங்கள், பால், தயிர், பறவைகள், முட்டை கள், கடலுணவுகள் போன்றவைகளில் உள்ள உயிரினங்கள்,  ஒருவரின் உணவுக்காக எத்தனை கொல்லப்படுகின்றன!

http://lankamuslim.org/2013/06/12/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA/#comment-9696

No comments: