Wednesday, May 29, 2013

ஒரு போதும் சிலை வைக்கப்பட மாட்டாது என்னை நம்புங்கள்: பிரிகேடியர்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

ஒரு போதும் சிலை வைக்கப்பட மாட்டாது என்னை நம்புங்கள்: பிரிகேடியர்


ஆன்ம முன்னேற்றததை அடிநாதமாகக் கொண்டு, தனது இராச வாழ்வையே துறந்து, புத்த்த தர்மத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் மகான் புத்த பெருமான். அவரது சிலையை இன்று மக்களின் மத்தியில் குழப்பததை உருவாக்குவதற்காக, தமது  குறுகிய நோக்கங்களை நிறைவு செய்வதறகாகப் பாவிக்கப்படுதல் தவிர்க்கப்டல் வேண்டும்.

இவ்வாறான நிகழ்வுகள் அவருக்கும் அவரது தர்ம சிந்தனைக்கும் ஏற்படுத்தப்படும் களங்கமும், அவமானமுமாகும். புத்தர் மேல் மதிப்பு வைத்திருக்கும் எவரும் இவ்வாறானதொரு நிலையை விரும்ப மாட்டார்கள்.

மேலும், ஒரு இராணுவ அதிகாரி வாக்குக் கொடுப்பதும்,  அதனை ஏற்று மக்கள் பிரதிநிதிகளின் தலமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் கைவிடப்படுவதும், ஆட்சியாளரின் நிலையைக் கேள்விக்கிடமாக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் நினைப்பதில் குற்றமில்லை. 

No comments: