Monday, May 6, 2013

முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

முஸ்லிம் சகோதரர்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டதை எவரும் நியாயப்படுத்த முடியாது


தமிழர் பிரதிநிதியாக அறிவுபூர்வமாக, நியாயபூர்வமாக, சகோதர வாஞ்சையுடன் கருத்து வெளியிட்ட சுமந்திரன் அவர்களைப் பாராட்டுகிறோம்.

உண்மையில் இது போன்ற சிந்தனைகளாவது, இனச் சுத்திகரிப்புகளுக்கு உள்ளாக்கப்பட்ட அந்த அபாக்யவான்களான அப்பாவி வடக்கு முஸ்லிம்களுக்கு, அவர்களது நாட்பட்ட, கால் நூற்றாண்டு ரணத்துக்கு உள்மருந்தாக இல்லாவிட்டாலும், ஒத்தடமாகவாவது அமையும்.

தங்களுக்கு நியாயம் வேண்டும் சந்தர்ப்பத்தில், அதனைப் பெறுவதற்கு தற்போது அன்றைய இனச்சுத்திகரிப்பு பிழையென ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லாது, தமிழர்களுக்குப்பிரச்சினை ஏற்படாதிருந்தாலும், அன்று நடந்தது புலிகளின் அராஜகமே என்பதை, அதைத் தடுத்து நிறுத்தாது, ஏன் என்று கேட்காது விட்டது தமிழர்களின் குற்றமே என்பதை ஏற்க வேண்டும்.

அவ்வினச் சுத்திகரிப்பைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து, முஸ்லிம்களின் சொத்து சுகங்களைக் கையாடியமை பிழையென்பதும் ஏற்கப்படல் வேண்டும். தற்போதும் அவர்களுக்கு எதிராகப் பேசி, தம்மை வளர்த்துக் கொள்ள, தம்மிருப்பை தக்க வைத்துக் கொள்ளத் துடிக்கும் அடிமட்ட அரசியல்வாதிகளுக்கு இதன் பின்னராவது கண்கள் திறக்கட்டும்.

No comments: