Thursday, May 30, 2013

இலங்கையில் ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லை என்று குற்றச்சாட்டு

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இலங்கையில் ஒன்றுகூடல் சுதந்திரம் இல்லை                  என்று குற்றச்சாட்டு

இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் ஐ நா சபைக்கு போகுமளவுக்கு, காரியங்களை நடக்க விடுவது நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. 

பொலிஸார் தமது கடமைகளைச் செய்ய மறுக்கிறார்களா?  தமது அதிகார வரம்பை துஷ்பிரயோகம் செய்கிறார்களா? அன்றி அவர்கள் அவ்வாறு செய்யுமாறு தூண்டப்படுகின்றார்களா? என்பதைக் கண்டறிவதும், தடுத்து நிறுத்துவதும் அரசின் பாரிய கடமை. 

இது நாட்டின் இறைமைக்கும், நாட்டு மக்களின் அமைதி வாழ்வுக்கும் தீமை பயக்கக் கூடியதென்பதால், இது சம்பந்தமான உடனடி நடவடிக்கை இன்றியமையாததாகின்றது. 

சட்டத்தைக் காக்க வேண்டிய பொலிஸாரே, தூண்டுதலாலோ  அல்லாமலோ சட்டத்தை, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதும், அது தகுந்தவர்களால் தடுத்து நிறுத்தாமல் விடப்படுவதும், அவை சரியென்ற பிழையான கருதுகோளை உருவாக்கி, நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் குலைத்துவிடும். 

No comments: