Monday, May 20, 2013

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை: பொது பல சேனா



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இது பௌத்த நாடு; ஏற்காதோருக்கு இங்கு இடமில்லை:     பொது பல சேனா

இவ்வாறான படு முட்டாள்தனமான, கோளிமாளித்தனமான, ஆனால் பயங்கரமான, மக்கள் மத்தியில் விரோதத்தை, அமைதியின்மையை, சட்டத்தையும் ஒழுங்கையும் சந்திக்கு இழுப்பதை வளர்க்கும் அளவுக்குப் பகிரங்கமாகக் கட்டளையிடுவது போன்று கருத்து வெளியிடுவதற்கு இவர்களுக்கு உள்ள தகைமை என்ன ? இவ்வாறான அதிகாரம் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதா? அப்படிக் கொடுக்கப்பபட்டால் எப்போது? யாரால்? இலங்கையின் யாப்புக்கு உட்பட்டா? போன்ற மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கு பதிலிறுக்க வேண்டிய கடப்பாடு அரசுக்குரியது.

அல்லது இப்படிப் பேசுபவர்கள் மனோநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்குரிய இடத்துக்கும், அல்லது குழப்பத்தை ஏற்படுத்துவதும், யாப்புக்கு எதிராகப் பேசுவதற்குமாக இருந்தால் அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படல் இந்நாட்டின் நலன் கருதி செயற்படுத்தப்படலவசியம்.

இன்றேல், போகிற போக்கைப் பார்த்தால் ஆப்கானிஸ்தானுக்குள், ஈராக்கிற்குள் எப்படி அந்நியர் தலையீடு நடைபெற்று அழிவை உருவாக்கியதோ அப்படியான நிலை ஒன்றுக்கான அடித்தளமாகவே இது நடைபெறுகின்றது என மிக உறுதியாக நம்பலாம். அதாவது வெளியார் தலையீட்டுக்கு களம் அமைத்துக் கொடுக்கவே இவ்வாறான மலிவு வழிகளை பொ ப சே கைக்ககொள்கின்றது.

No comments: