Wednesday, May 29, 2013

பொதுபல சேனாவை வெளியில் போட்டது நீதிமன்றம்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பொதுபல சேனாவை வெளியில் போட்டது நீதிமன்றம்

அரசியல்வாதிகளும், நாட்டில் பொறுப்பான பதவிகளை வகிப்போரும் பொது நிறுவனங்களால், தனியாரால் அவர்களது நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்படும்போது, அங்கு கட்டடங்களை, காரியாலங்களை போன்றவற்றைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளாயின், அவ்வாறான கட்டங்களின் சட்டபூர்வ உரிமை போன்றவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பி்னனரே அவற்றில் கலந்து கொள்ள, அவற்றைத் திறந்து வைக்க வேண்டும் என்பதை இந்த செய்தி வலியுறுத்துகினறது.

சட்டத்துக்கு முரணானவைகளை குறுக்கு வழியில் தம்மகப்படுத்திக் கொள்ள சில புத்திசாலிகளான பித்தலாட்டக்காரர்கள் கையாளும் தந்திரங்களே இவை. இப்படியான பொறிக்குள் அரசியல்வாதிகள், பொறுப்புள்ள நிர்வாகிகள் அகப்படுவதோடு நின்று விடாது, அப்பாவி உரிமையாளர்களையும் பாதிப்புக்கு உள்ளாக்கி விடுகிறது. அநீதிகளுக்கு அங்கிகாரம் கிடைத்து விடுகின்றது. மேலும், இது மக்களை விரக்தியின் விளிம்பில் விட்டு, ஆட்சியாளரில் அவநம்பிக்கையை ஏற்படுததி விடுகிறது.


இவ்வாறான நிகழ்வுகள்தான் மதத்தைக் காப்பாற்றுகிறோம் என்ற தொனிப் பொருளில் நாட்டில் நடத்தப்படும் மதவிரோத நடவடிக்கைகள்.

No comments: