Tuesday, May 28, 2013

தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

தீக்குளித்த தேரர் தொடர்பில் வெளியாகும் புதிய தகவல்கள்

முற்காலத்தில் தமது தில்லுமுல்லுகளை மறைத்துக் கொள்ள, பாதுகாப்புப் பெற அரசியலையோ, அன்றி அரசியல்வாதிகளின் ஆதரவுகளையோ அன்றி பொலிஸாரின் அரவணைப்பையோ பெற்று வந்தனர். இவை சாதாரண மக்கள் செய்து வந்தவை.

தற்போதெல்லாம் மதத்தைப் பின்னணியாகக் கொண்டு சிலர் தமது வக்கிர நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதில் மதகுருக்களும் இணைந்து கொண்டதுதான் வருத்தந தரும் செய்தி.  மதகுருக்களும் மனிதர்தான், அவர்களும் தவறுகளை, பிழைகளைவிடக் கூடியவர்கள்தான் என்பது வேறு. தமது குற்றச் செயல்களை மறைக்க, மதத்தைப் பின்னணி யாக வைத்திருப்பதுகூட, குற்ற்ச் செயலாயினும் வேறே!

அவற்றைவிட மோசமான ஒரு செயல்தான் தமது குற்றச்செயல்களை மறைக்க, அதிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள, சட்டத்தின் பிடிக்குள் அகப்படாதிருக்க, அகப்படடாலும் மக்கள் குரலை தமக்காதரவாகப் பயன்படுத்த, அடுத்த மதத்தவர்களால் தமது மதத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற கருத்தை காரணமின்றி வெளிப்படுத்தி, அவர்களின் மதக் கிரியைகள், அவர்களது அடிப்படை மனித உரிமைகள், வணக்க தலங்கள், கலாசாரங்கள் போன்றவற்றை விமர்சித்து, தாக்கி, அவற்றையே தமது பாதுகாப்புக் கவசங்களாக்கிக் கொள்கின்றனர்.

இது முன்னைய அனைத்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரினதும் அயோக்கித்தனத்தை விட ஆபத்தானது. இதனைக் கையாள்வதில். ஊடகங்கள் உட்பட பொலிஸாருக்கும், அரசுக்கும் கூட பாரிய சவால்கள் உண்டு. மிக்க கவனமாகவே கையாள வேண்டி இருக்கும். இதனைத் தடை செய்வதுகூட எளிதானதல்ல என்பதோடு, மக்களுக்கு காரணகாரியங் களோடு விளக்கம் ஊட்டப்பட வேண்டியதும் கூட.

இருபக்கமும் கூருள்ள ஆயுதத்தைப் பாவிப்பது போன்றதே இவர்களைக் கையாள்வது! கையாள்தலில் ஏற்படும் சிறு தவறுகூட அரசியலாக்கப்பட்டு விடும. இக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் அனைத்துக்கும் சாதகமாக, கவசமாக அமைந்துள்ளவை இவைகளே! இதனைச் சரிவரத் தெரிந்து வைத்துக் கொண்டே பிரகிருதிகள் தமது கைங்கரியங்களை முன்னெடுக்கின்றனர் என்பதுவே யதார்த்தம். 

No comments: