Saturday, May 25, 2013

நாட்டில் மிருகங்களை கொல்வதை உடனடியாக தடை செய்யவும்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

நாட்டில் மிருகங்களை கொல்வதை                                                  உடனடியாக தடை செய்யவும்

மிருகங்களைக் கொல்வதைத் தடைசெய்துவிட்டு, மனிதரைக் கொலை செய்வதை சட்டமாக்கலாம்?  மிருக வதை வேண்டாம் என்பவர்கூட தன்னை வதை செய்பவராகவே இருப்பதன் மூலம் இதனை வெளிப்படுத்துகிறாரா? இதனை உலகில் எந்த மதம் போதிக்கின்றது. 

உணவுக்காக உயிருள்ள மிருகங்களைக் கொல்லக்கூடாது என்றால், உயிருள்ள தாவரங்களைக் கொல்லலாமா? ஒரு மிருகத்தைக் கொன்று ஆயிரம் பேருக்கு உணவளிக்கலாம். ஆனால் ஒருவருக்கு உணவளிக்க எத்தனை தாவரங்களைக் கொல்ல வேண்டியள்ளது!

உடனடியாக கடலில் மீன் பிடிப்பது தடை செய்யப்படல் வேண்டும். அதனோடு ஒடடிய அடடை, இறால், கணவாய், நண்டு போன்றவை கொல்லப்டக் கூடாது. அதனால் அவற்றையும் தடை செய்ய வேண்டும். 

நாட்டில் உள்ள மிருகங்கள், பறவைகள் கொல்லப்படக் கூடாது என்றால், அவற்றின் பால், முட்டை போன்றவைகளை என்ன செய்வது?   பால்மா உண்பதை நிறுத்த வேண்டும். ஏன் தாய்ப்பால் கொடுப்பதால் அதிலுள்ள இலட்சோப இலட்சம் உயிரணுக்கள் கொல்லப்படு வதைத் தடுக்க வேண்டும். 

இதன்படி மாட்டுப் பண்ணை, ஆட்டுப்பண்ணை, பன்றிப் பண்ணை, கோழிப் பண்ணை போன்ற அனைத்தும் மூடப்படல் வேண்டும். மரத்தை வெட்டிப் பால் எடுப்பது, தேயிலைக் கொழுந்து பறிப்பது, கொக்கோ பறிப்பது அனைத்தும் நிறுத்தப்படல் வேண்டும்.  

தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படல் வேண்டும. தோற் பொருட்கள் பாவனை முற்றாகத் தடைக்குள்ளாக்கப்படல் வேண்டும. எலும்பில் இருந்து பெறப்படும் அத்த‌னையும் தடைக்குள்ளாக்கப்படல் வேண்டும்.

நீரில் சுத்தகரிப்புக்கு உட்படுத்தாது, கிருமிகள்  கொல்லப்படாமல் அருந்த வேண்டும். நீரிலுள்ள கிருமிகள் கொல்லப்படுவதும் தடைக்குள்ளாக்கப்பட வேண்டும். பேன், நுளம்பு, மூட்டுப் பூச்சி, எலி, பாம்பு போன்ற இன்னோ ரன்னவை கொல்லப்படுதல் உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும். 

மிருகங்கள் ஒன்றை ஒன்ற பிடித்து சாப்பிடக் கூடாது எனச் சட்டமியற்றி, அதனை அமுல்படுத்தும் அமைச்சராக வீரவன்ச அவர்களையே நியமிக்க வேண்டும. 

மொத்தத்தில் மனிதர்கள் கொல்லப்பட்டு மிருகங்களும் பறவைகளும் மட்டுமே வாழ வேண்டும். 

No comments: