Tuesday, July 16, 2013

தேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/q3ss9yh

Lankamuslim.org
One World One Ummah

தேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்!


அல்லாஹ் மனிதனுக்கு முகத்தை வெவ்வேறு அமைப்பில் தந்துள்ளமைக்கான முக்கிய காரணம், அவர்கள் அறியப்படுவதற்கு நெருக்கமாகும் என அல்லாஹ்வே பெண்களின் ஆடை பற்றிக் கூறிய, 33:59 ' நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். ...' என்ற அதே ஆயத்திலேயே கூறியிருப்பது, ஆளடையாளத்துக்கு முகத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும், 24:31 இல், 'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளவேண்டும். ......' எனவும்,

7:26 இல், 'ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும், திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறை அச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவும் கூறியிருப்பவை, முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் மிகத் தெளிவாக அல்லாஹ் காட்டிய வழி. இவ்வழியைப் பின்பற்றினால், தேர்தல், அடுத்தவர் முன்னிலையில் திறந்து காட்டும் அவலம் ஏற்படாது அல்லவா!

No comments: