Saturday, July 13, 2013

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/ppdtye5

Lankamuslim.org
One World One Ummah

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு

றமழான் இப்தார் என்பது ஒரு களியாட்டமோ, விருந்துபசாரமோ, கூடிக் கலையும் சடங்கோ அல்ல.  இது ஒரு முஸ்லிமின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று, அதனை இறையச்சத்துடன் திறக்கும் நேரம். இது அந்நிய மதத்தவர்களுக்கானதோ, நோன்பு நோற்காத முஸ்லிம்களுக் கானதோ நிகழ்வல்ல. 

இன நல்லுறவைப்பேணுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களை வருடத்தின் 11 மாதங்களிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த புனித தருணத்தை இறையச்சத்துடன் போக்க வேண்டுமே தவிர அதனை கூடிக்குலவிடும் கூத்து மேடையாக்கிடக் கூடாது. 

ஏழை, எளியோரின் பசிப்பிணி அறிந்து, உலகில் எவரும் பசியுடன் வாழக்கூடாது என்ற இஸ்லாமிய அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்யும் மன நிலையை வளர்த்து அதனை வருட முழுதும் கடைப்பிடித்தல். அதைவிடுத்து, பசியே என்னவென்றறியாதோருக்கும். பசித்திருக்காதோருக் கும் பரிமாறுவதல்ல. 

மதக்கடமை மதக்கடமையாகவே அதன் புனிதத்துடன் பேண வேண்டும். அது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட முடியாது. அப்படிச் செய்வது இறை நோக்கத்துக்கே எதிரான செயற்பாடாகிவிடும். 

No comments: