Friday, July 12, 2013

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்

இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள்> பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப் படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும்> நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும்> மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையானதாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர்> இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில்> அவர்களால் சனாதன தர்மத்துக் குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றதுஇந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றிய வையாக இருக்க வேண்டும். ஆயினும்> நிச்சயமாக> முக்கிய மூன்று வேதங்களான தோறா> கிறிஸ்தவம்> இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட் டாலும்> இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம்.

இந்து வேதங்கள் றிக்> சாம> யசூர்> அதர்வன என நான்காக அறியப்பட் டுள்ளன. இவை ஒன்றாயிருந்து நாலானவையா? அன்றேல் இயல்பாக நான்காகவே இருந்தவையா? என்பவையெல்லாம் சர்ச்சைக்கு உரிய னவே! இவற்றை ஆராய்ந்தவர்கள்>இவ்வேதங்கள் நோவா என்ற நூஹ் நபியவர்கள் மூலமாக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றார்கள். அதற்கு ஆதாரமாக> நூஹ் நபியின் பெயரை ஒத்த பெயர் பல இடங்களில் அவ்வேதங்களில் கையாளப்பட் டுள்ளதைக் கூறுகிறார்கள். நோவா கால ஜலப்பிரளயம் அந்த நிராகரிப் பாளர்களை அழித்ததுடன் அவ்வேதம் பற்றிய பதிவுகளையும் அழித் திருக்கலாம். அதன் பின்னரும் வேதங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது அழிந்த வேதங்களை பின்னர் வாழ்ந்தவர்கள் சிலர் தமது ஞாபகத்திலிருந்து பாதுகாத்து வந்திருக்கலாம். பின்னர் அவை எழுத் துக்கள் தோன்றியதன் பின்னர் நூல் வடிவை ஏற்றிருக்கலாம்.
எப்படியோ இந்து வேதங்கள் நான்கு. அவை றிக்> சாம> யசூர்> அதர்வன என்பதை யாரும் மறுக்கவில்லை. அவைகளையே நாமும் நமது கருத் துக்கு ஆதரவாக எடுத்துக் கொள்வோம். இவற்றிலுள்ள குறிப்பிடக் கூடியளவு வசனங்கள் குர்ஆனுடன் முரண்படாத தன்மையைக் கொண் டுள்ளமையும், அதன் போக்கும் குர்ஆனில் காணப்படும் போக்கை ஒத்ததாக இருப்பதும்> இவை இறைவனிடம் இருந்து வந்துள்ளவை தான் என்று நம்புவதற்கு நமக்கு இடம் தருகின்றன.

ஆதியான 'றிக்' வேதம்> 1028 பாடல்களையும். 10>000 உக்கும் அதிகமான செய்யுள்களையும் கொண்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்தபடியான 'யசூர்' வேதம்> யாகங்கள் முதலாம் வைதிகச் சடங்கு களைக் கொண்டுள்ளது

'சாம' எனப்படும் இசையை ஒட்டிய வேதம்> பண்களின் தொகுப்பாகவே காணப்படுகின்றது. இதில் 1500உக்கும் அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுகின்றன. ஆயினும் இவைகளில் பெருமளவு எண்ணிக்கையானவை 'றிக்' வேதத்திலுள்ள பாடல்களாகவே இருக் கின்றன.

அதர்வன வேதம் முழுமையாக துர்தேவதைகளை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட மந்திரங்களாகவே காணப்படுகின்றன. இதனை மந்திர வேதமெனவும் கூறுவர்.

ரிக் வேதம் 8:6:11 'தொன்மைக் காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கி இருக்கிறேன்.' இந்த வசனம்> ஒன்று, இவ்வேதம் ஆதியானது என்பதையும்> இரண்டு, மனித னால் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறி நிற்கின்றது.

நமது தலையங்கத்துக்கு வந்தால்>இவ்வேதங்கள் எதிலாவது ஓரிறைக் கொள்கை எடுத்தாளப்பட்டிருக்கின்றதா என்ற கேள்விக்கு 'ஆம்' என்ற பதிலை அவைகளே தந்து நிற்கின்றன. மாத்திரமல்ல பல தெய்வக் கொள்கையையும்> அவ்வாறான வணக்க வழிபாட்டையும் தடைசெய்தே இருக்கின்றன என்பதும் புலனாகும்.

ரிக் வேதம் 8:1:1 'புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே' இதே கருத்தை கொடுப்பதாகவே> குர்ஆனின் ஆரம்ப வசனமான 1:1> 'புகழ் அனைத்தும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக் கும் அல்லாஹ் ஒருவனுக்கே' என்கின்றது.  

ரிக் வேதம்  3:34:1 'அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்' என்கின்றது. இதே கருத்தில் அல்குர்ஆன் 1:2 'அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.' என்கின்றது.  

யசூர் 40:16 'எங்கள் நன்மைக்கான நேர்வழியைக் காட்டு' என்கின்றது. இதை மெய்ப்படுத்துவதாகவே அல்குர்ஆனின் 1:5> நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக' என்பது அமைகிறது.

ரிக் வேதம் 1:100:1 'பரந்த வானங்களின் மீதும்> புமியின் மீதும் ஆட்சி அதிகாரமும்> வல்லமையும் கொண்டவன் அவனே. அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.' நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? என்று 2:107 மூலம் உண்மைப்படுத்தி சாட்சியம் கூறுகின்றது .

ரிக் வேதம் 10:11:14 ' அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்'. ரிக் 10:36:4 கிழக்கிலும் மேற்கிலும்> மேலிலும் கீழிலும்> ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கின்றான்'. 10:81:3 'இறைவனின் பார்வை எல்லாப் பக்கங்களிலும் இருக்கிறது. இறைவ னின் முகம் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது'.  இம்மூன்று வசனங் களையும்> அல்குர்ஆன் 2:115 கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறதுநிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்> எல்லாம் அறிந்தவன்.' கூறி உண்மைப்படுத்துகின்றது

அதர்வன வேதம் 7:19:1 'பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரண கர்த்தராக இருக்கிறார்.' இதனை அல்குர்ஆன் 25:2 'அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்' என எடுத்தியம்புகின்றது.

ரிக் வேதம் 10:190:2 ' இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத் ததே'. அல்குர்ஆன் 25:62 அவன்தான் இரவையும் பகலையும் அடுத் தடுத்து வருமாறு ஆக்கினான்' என்ற வசனம் மெய்ப்படுத்துகின்றது.

ரிக் வேதம் 10:190:3 அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான். அல் குர்ஆன் 6:96 அமைதிபெற அவனே இரவையும்> காலக் கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் அதனை வெளிப்படுத்துகின்றது.

ரிக்வேதம் 1:32:2 பரமேஸ்வரா! நீ அந்தரங்கமானவனும்> முந்தியவனும்> நன்கறிந்தவனுமாவாய். அல்குர்ஆன் 57:3முந்தியவனும் அவனே> பிந்தியவனும் அவனே> பகிரங்கமானவனும் அவனே> அந்தரங் கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்' மூலம் மேற்கண்ட அதே அறிவிப்பை செய்கிறது.

அதர்வன வேதம் 18:1:5 'அவன் நடைமுறைகளில் ஒன்று கூட மாற்றத்துக்கு உரியது அல்ல' என்ற இந்த வசனத்தை நிரூபிப்பதாகவே அல்குர்ஆன் 48:23 அல்லாஹ்வுடைய சுன்னத்தில் (வழியில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்' வசனம் .அமைகின்றது. அத்தோடு அது இற்றைவரை உண்மையாகவும் இருக்கின்றது.

ரிக்வேதம்  1:24:10 - இறைவனின் புனித வாக்கியங்களில் மாற்றங்களே இல்லை. அல்குர்ஆனும் தனது 10:64 இல் அல்லாஹ்வுடைய வாக்கு களில் எவ்வித மாற்றமும் இல்லை என அப்படியே கூறுகின்றது

அதர்வன வேதம் 20:58:3  இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்.’ அதனை மெய்ப்படுத்துவதாகவே அல் குர்ஆன் 13:9 அவன் மிகவும் பெரியவன்> மிகவும் உயர்ந்தவன்’ என்ற வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவைகளை நான் ஒப்பீடாகக் கூறியுள்ளமை> இந்து வேத வசனங்கள் மனிதரால் சிலவேளை தொகுக்கப்பட்டதாக இருப்பினும்> அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கொள்கைகள் அனைத்தும் குர்ஆனின் ஏகத்துவத்தையே பிரதிபலிப்பனவாகக் காணப்படுவதைக் காட்டுவதற்காகவே

அத்தோடு> அல்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துவ தற்கும்> சாட்சி பகர்வதற்காகவுமே இறக்கி அருளப்பட்டது என்பதுடன்> முஹம்மது நபி அவர்களுக்குப் புதிதாக எதனையும் கொடுத்துவிடவு மில்லை என்பதையும்> அனைத்தும் முன்னைய நபிமார்கள் மூலம் பல்வேறு காலங்களில்> பல்வேறு இடங்களில்> பல்வேறு பாஷைகளில் வேதங்களாகவும் வேதக் கட்டளைகளாகவும் இறக்கி அருளப்பட்டதே என்பதைக் குறிப்பாகக் காட்டுவதற்காகவே!

அல் குர்ஆன் 41:43 உமக்கு முன் தூதர்கட்குத் திட்டமாகக் கூறப் பட்டதைத் தவிர உமக்குக் கூறப்படவில்லை. இன்னும்> 2:97>135>136> 3:95> 4:125>163> 35:31> 42:13 போன்றவையும் மேற்கண்ட கருத்தில் அமைந்த வையே!

மேலும் ‌ஒத்தது போன்ற சில வசனங்களும்  இந்த> இந்து வேதங்களில் காணப்படுகின்றன. அவைகளைக் காண்போம்

உண்மையானவன் ஓருவன்தான். தெய்வீகத் தன்மை வாய்ந்த பண்பு களைக் கொண்டு அவனுக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. என ரிக் வேதத்தின் 1:16:46 கூறுகிறதுஇதையே அல்குர்ஆன் 17:110 - நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்ற ழைத்தாலும்> எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும்> அவனுக்குப்பல திருநாமங்கள் இக்கின்றன என்று நீர் கூறுவீராக! இது முழுமையாக ஓரே இறைவனைப் பற்றிக் கூறும் வசனமே என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்துக்களின் பிரம்ம சாஸ்திரம்> ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்> அதாவது இறைவன் ஒருவனே. வேறு எவரும் இல்லை> இல்லை> இல்லவே இல்லை. என்பதாகும்  இது இஸ்லாமிய தாரக மந்திரமான கலிமா எனப்படும் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு சொற்றொடரின் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்ற கருத்தின் மற்றொரு உருவமாகும்.

அதற்கு மேலும்> ரிக் வேதம் 6:45:16 மிகத் தெளிவாக> லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற பொருள்படும்” , யா இக் இத் முஸ்தி எனும் வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ> ஓரிறைக் கொள்கையை பிரகடணப்படுத்தி இருக்கிறது.

மேலும்> பகவத் கீதை 7:19 - அவன் மஹாத்மா! காணுதற்கரியவன் என்கின்றது. குர்ஆன்கூட> 7:143 இல்> என்னை ஒருபோதும் நீர் பார்க்க முடியாது’ என்றும்> 6:103இல்> பார்வைகள் அவனை அடைய முடியாது. .அவனோ எல்லாப் பார்வைகளையும் அடைகிறான். மேலும்> அவன் நுட்பமானவன்> நன்கறிபவன்.  என்றும் கூறுகின்றது.

மேற்கண்டவை போன்று இந்து வேதங்களில் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தி நிற்கும் இன்னும் பல வசனங்கள் உண்டுஉண்மைகளை அறிய விரும்புவோருக்கு இவைகளே போதும். ஏற்காதவர்களுக்கு எவ்வளவு எழுதினும் பயன்தரப் போவதில்லை என்பதுவே வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம்.


2013.06.24                                          - நிஹா

இணைப்புபேரின்ப மணிமாலை> சிவன்> பிரம்மா> திருமால் பற்றிக் கூறுதைப் பாருங்கள்

மூவரையும் சனியன்தான் பிடித்ததாலே
முதலொருவன் வலையிழந்தான் முக்கண்ணுன்ளோன்
சாவுவருமென முனிவன் தனக்குமஞ்சித்
தானொளித்தான் ஐவேலி தன்னிலேதான்
பாவியென்ற திருமாலோர் பெண்ணினாலே
பதியிழந்து பாரியுடன் வனத்திற்சென்றான்
தேவனென்றே இவர்கள் தம்மை வணங்கினாரித்

திறமையுள்ள கதியருளும் தேவனாமோ!

No comments: