Saturday, July 27, 2013

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

Commented by nizamhm1944:

http://tinyurl.com/olmoo3z

Lankamuslim.org
One World One Ummah

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

பள்ளிவாசலாக அக்கட்டடம் இருந்திராவிடில் அதனை மூடும் உத்தரவு, . பொறுப்பும், அதிகாரமுமுள்ள மாகாண அமைச்சர் ஒருவரால் வழங்கப் படுவானேன்! 

பதிவுகள் இல்லாமல் இருந்தால்கூட, வேறு ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் கூட அது ஒரு பள்ளிவாசலாகப் பாவிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு எவரும் வரமுடியாது. நிலத்துக்கடியில் தோண்டிக் கண்ட சில இடிபாடுகள்கூட அங்கு ஒரு வணக்க ஸ்தலம் இருந்தது என நிரூபிக்கப்பட்டு புனித பூமிகளாக மாறும் நிலையில் 21 வருடம் தொழுவதற்காகப் பாவிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை இல்லாத ஒன்றாக கருத்துக் கூற முடியாது. 

இந்த நாட்டில் பிறப்புப் பதிவில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை இந்நாட்டின் பிரஜைகள் இல்லை எனக் கூறுவோமா அன்றேல் அவர்களைப் பதிவை மேற்கொள்ளுமாறு வசதிகள் செய்து கொடுத்து உற்சாகப்படுத்துவோமா. பதிவுகள் என்பது சில தேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்படட்வை மட்டுமே. 

2500 ஆண்டுகளு்க்கு முன்னர் ஆலயங்கள் எந்தப் பதிவைக் கொண்டிருந்தன. அவைகளை நாம் 2500 வருடப் பாரம்பரியம் கொண்டவைகளாக வரலாற்றுப் பெருமை கொண்டவைகளாக ஏற்கவில்லையா. 

No comments: