Tuesday, July 16, 2013

அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/pql8mhp

Lankamuslim.org
One World One Ummah

அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி


புலியிடம் அகப்பட்ட புள்ளி மான் குட்டிகூட தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள மிக் உக்கிரமமாகப் போராடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதும், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதை ஒக்கும். 

இவ்வாறுதான் சாதுவான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட போது தமது எதிர்ப்புகளை கண்டனங்களாகவும், அறிக்கைகளாகவும், அஹிம்ஸை வழியில் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, நாடு 30 வருட அகோர யுத்தத்தை முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்பதை ஆட்சியாளர் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிடில் நாடு இந்த இருண்ட யுகத்துக்கு திரும்புவதை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும். 

அமைதி வழியில் அனைவருடனும் புரிந்துணர்வுடனும், நாட்டுப் பற்றோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதி விரும்பும் குற்றமற்ற முஸ்லிம்களை வாழவிடுங்கள் என்று வேண்டுகின்றோம். இயல்பு வாழ்வை பாதிக்கும் அநாவசியத் தடைகள்,  குறுக்கீடுகள் விலக்கப்படாவிட்டால்,  உடைக்கப்படுவது என்பது இயல்பு. அதன் ஆரம்ப கட்டமாகவே மேற்கண்ட அறை கூவலை பார்க்கலாம். 

No comments: