Saturday, August 10, 2013

Great Pass for Terrorize the Grandpass Masjid

Great Pass for Terrorize the
Grandpass Masjid
நம்பகத் தன்மைகள் அனைத்தும்
சம்பவங்களாகிப் போனதனால்
தம்ம பதம் பேசும் சிலர்
வம்பர்களாகி எம்பள்ளிகளை
தம்பட்டம் அடிதது தகர்க்கின்றனர்!
அம்பட்ட கத்தி முகச்சவரம்செய்துவிடும்
தம்பட்டம் பேசுவோர் கத்தி
நம்தலையை அறுத்திடவா?
மிருக வதை கூடாதாம்
மிருகங்களாகி மனிதவதை செய்யலாமா!
தம்மபதம் போதிப்போர்
தம்மிஷ்டம் போல் நாடழித்தால்
உம்மிஷ்டம் எனவிடுத்து
நம்மை அழிக்க உதவலாமா?
சாமிகளும் ஆமிகளும் சண்டாளராகிவிட
ஊமையாகிப் பார்த்திருக்கவா அரசு!
முஸ்லிம் பள்ளிகளைச் சுற்றி
முஸ்தீபுச் செய்யும் மஞ்சலுடை நஞ்சினரை
பஞ்சசீலம்பேசி பாதகம் செய்து
மிஞ்சவிட்டுப் பார்த்திருந்து
அஞ்சேல் எனும் அரசு
வஞ்சனையாய் முஸ்லிம்களை
கொஞ்சமும் மனிதாபமின்றி
நஞ்சராகமாறி வெஞ்சினத்தைக் காட்டி
வஞ்சிக்கும் நிலை ஏனோ
நெஞ்சத்தை இழந்தோரே!
காலிகளுடன் கைகோர்த்து
போலிகளும் நாசஞ் செய்தால்
வேலிகளாய் போலீஸிருந்து
காலிகளைக் காப்பதேனோ!
காலக்கெடு கொடுதது தண்ணீரைக் கேட்டோரை
காலாட்படை கொண்டு செந்நீரைச் சிந்தவைத்து
கோலோச்சி கொடுமையாய் கொன்று குவிப்போரை
தாலாட்டுப் பாடி தடவிக் கொடுப்பதேனோ!
காலக்கெடு வைத்து கோலெடுத்து வாளெடுத்து
காவாலிகள் சகிதம் காவியுடைக் காடையர்கள்
பள்ளியை உடைத்து பாதகங்கள் பல செய்து
கொல்லவும் முற்படடு கள்ளமிலா முஸ்லிம்கள்மேல்
எல்லையில்லா துயர் விளைக்க
கோலோச்சும் காதகரைவிட்டுக் காவுகொள்வதேனோ!
காலர்களே காவலர்களே கூறுங்கள்.
கலாசார அமைச்சின் கட்டளையைமதியாது
காலால் மிதித்து மஸ்ஜிதை உடைக்கும்வரை
காவலும் காத்து காடைத்தனம் செய்யவிடும்
கலாசாரம் காக்கும் போலிப்படை எதற்கு!
உடைக்கும் வரை ஒத்தாசையா
படைக்குக் கிடைத்த பரிபாஷை
நடக்கும்வரை மடக்கி ஊரவரை
கிடக்கும்படி செய்ய கூறியவர் யாரோ?

No comments: