Saturday, August 3, 2013

மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!


Commented by nizamhm1944 on:. http://tinyurl.com/m9rkwus

http://berunews.wordpress.com/

மஹிந்தவின் இப்தாரில் சுவாரசிய சம்பவங்கள் – முஸ்லிம் அரசியல்வாதிகள் திரண்டுவந்து பங்கேற்பு!

பூசி மெழுகும் .. சி வேலையைத் தற்போது அரசியல்வாதிகளிடம் இருந்து ஜம்இய்யத்துல் உலமா கடன் வாங்கிக் கொண்டதா? அன்றி குத்தகைக்கு எடுத்துள்ளதா! 

மதஸ்தாபனங்களுக்கு ரூபா 25 தள்ளுபடியும், முதலாவது மரணச் செய்தியை அனுப்புவதும்தானா சகல மதங்களையும் சமமாகப் பேணுவது என்ற கோட்பாடு என ஜம்இய்யத்துல் உலமா கருதுகின்றது! 

இந்த ஜம்இய்யத்துல் உலமா எந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக் கின்றதோ! நாளுக்குநாள் இந்நாட்டில் அதிகரித்து வரும் இஸ்லாம் மதவிரோதப் போக்கு இந்த உல மா வுக்கு தெரியவில்லையா!  கண்களுக்கு திரையிடப்பட்டுள்ளதா? காதுகளுக்கு அடைப்பான் போடப்பட்டுள்ளதா? இதயத்துக்குப் பூட்டுப் போடப்பட்டுள்ளதா?  

இஸ்லாத்துக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள காடைத்தனங் களை இச்சந்தர்ப்பத்திலாவது எடுத்துக் கூறி தடுக்கும்படி கேட்டிருக்க லாமே! நக்குண்டார் நாவிழந்தார் என்ற நிலையா? 

அன்றி, இந்த நாட்டில் முஸ்லிம்கள்  பூரண சுதந்திரத்துடன் தமது மத அனுஷ்டானங்களையும், தொழிலையும் செய்து வளமாக, அச்சமின்றி வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்று உலமா கருகிறதா? உலகுக்குக் கூற முனைகிறதா? சுத்த முனாபிக்குத்தனம்.

No comments: