Thursday, March 28, 2013

இலங்கையை வேடுவர்களிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் இந்தியா செல்வோமா ?



Commented by nizamhm1944 on:

http://lankamuslim.org/2013/03/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92/#comment-8900

இலங்கையை வேடுவர்களிடம் ஒப்படைத்துவிட்டு 
எல்லோரும் இந்தியா செல்வோமா ?

இந்த நாட்‌டின் எந்த மக்களும் இங்கு கிள்ளுக்கீரைகள் அல்லர்,

ஒவ்வொருவரும் தறிகெட்டு, தான்தோன்றித்தனமாக அவர்களை விரட்டுவோம், இவர்களைத் துரத்துவோம் எனக் கூறுவதும், பணயக் கைதிகளை வைத்துப் பேரம் பேசுவது போன்று, இந்நாட்டை வளப்படுத்த தம் உதிரத்தை வார்த்த அந்த இந்திய வம்சாவழியினரைப் பகடைக்காய்களாகக் கருதிக் கதைப்பதும், மனித குலத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும் இழி செயலாகும் .

இவ்வாறு பேசுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவது தற்போது அரசுக்குள்ள தலையாய கடமைகளுள் ஒன்றாகும்.  அனைவருக்கும் பாதுகாப்புக் கொடுப்பதும், அவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படாது தவிர்ப்பதும் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசினதும், அதன் தலைவரதும் கடமையாகும்.

நடப்பவற்றைப் பார்த்தால் இந்நாட்டுக்கும், அதன் ஆட்சிக்கும் களங்கம் விளைவிக்கவும், இந்நாட்டுக்கு தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள அபகீர்த்திக்கு எண்ணெய் வார்க்கவும், சர்வதேச அரங்கில் தற்போதுள்ள கொஞ்ச, நஞ்ச ஆதரவையும் இல்லாமற் செய்யும் நோக்கிலும் தொடுக்கப்படும் அம்புகளாகவே காணப்படுகின்றன.

No comments: