Thursday, March 28, 2013

இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்


Commented by nizamhm1944  on:

இலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள தமிழகத்தவர்களை விரட்டியடிப்போம்

http://lankamuslim.org/2013/03/28/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95/#comment-8896


// தமிழ் நாட்டு   அரசியல்வாதிகள் மேலும்  மேலும் இலங்கை மக்களுக்கு இடையூறு விளைவித்தால் இலங்கையில் உள்ள தமிழ் நாட்டு மக்களை நாட்டிலிருந்து விரட்டி விடுவோம். //

இக்கூற்று, கொல்லாமையை வலியுறுத்தும், பஞ்ச சீலத்தைத் தம் கொள்கையாகக் கொண்ட ஒரு மதகுருவின் வாயிலிருந்து வருகின்றது என்பதைக் கவலைக்குரிய விடயமாகவே அனைவரும் கருதுவர்.

தேரர் அவர்கள் தமது மதத்துக்கு இழுக்கைத் தேடும் வார்த்தைப் பிரயோகங்களைத் தவிர்ப்பது அவர் சார்ந்த சமூகத்துக்கும், அவரது மதத்திற்கும் அவர் செய்யும் மிகப் பெரிய நன்மை பயக்கும்.

புத்த தர்மத்தைப் பேணுவதற்கும் பரப்புவதற்கும் அவருக்கு இந்நாட்டில் குறுக்கே நிற்கும், மனித குல அழிப்புகளான,  பாதைக்குப் பாதை காளான்களாக முளைத்துள்ள றேஸ் கிளப்புகள்,  மக்கள் வாழும் பகுதிகளில் கூட முளைத் திருக்கும் மதுச்சாலைகள்,  பாலர்கள் என்ற பெயரில் பாவையர் விலை போகுமிடங்கள், பாடசாலைகளைக் கூட குறிவைத்துள்ளதாக கூறப்படும் குடு,  பெண்ணினங்கள் விலை போகும் இணையங்கள்  போன்ற பல விடயங்கள் உண்டு.

அவற்றை ஒழிப்பதற்கு அவர் தம்மை அர்ப்பணித்துக் கொள்வாராயின் இவரை இந்நூற்றாண்டின் மக்கள் சேவைக்கு தன்னை அர்ப்பணித்த உயர்ந்த மனிதராக வரலாறு வகைப்படுத்தும்.  இவ்விடயத்தில் நாமும் அவருடன் கை கோர்ப்போம்.

No comments: