Monday, March 4, 2013

நாட்டின் உத்தியோகபூர்வமற்ற போலிஸ் நாமே !

nizamhm1944 commented on Lankamuslim.org
ஒரு நாட்டின் சடடத்தை மதித்துப் பேணிப் பாதுகாப்பது ஒவ்வொரு பொறுப்புள்ள பிரஜையினதும் தலையாய கடமை.
அதற்காக நாம் உத்தியோகபூர்வமற்ற பொலிஸ் எனக் கூறிக் கொள்ளவோ, பொலிஸார் சட்டபூர்வமாகச் செய்வதை, தாம் தான்தோன்றித்தனமாகச் செய்ய முற்படுவதோ, நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் சீர்குலைத்துவிடும்.
பொலிஸாருக்குக்கூட ஒரு பிரஜையைக் கைது செய்ய, விசாரணை நடத்த சில விதிமுறைகள் உண்டு. போலிஸாரின் வேலையைச் செய்ய முற்படுவது ஏதோ ஒன்றின் வேலையை இன்னொன்று செய்ய முற்பட்ட கதையாகிவிடும்.
ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து ஆளைக் கடிப்பது என இந்த அத்துமீறலைத்தான் கூறுவர். இறுதியாக அரசின் அதிகாரத்தைத் தமது கைகளில் எடுப்பது மடடுமல்ல, தாம் தான் உதியோகபூர்வமற்ற பொலிஸ எனக் கூறுவதன் மூலம், புலிகள் எதனைச் செய்தார்களோ? இப்போதும் செய்து கொண்டிருக்கின்றார்களோ அதனையே செய்ய முயல்வதாகவே முடியும்.
இந்நிநலை ஒரு நாட்டின் சீரான ஆட்சிக்குக் குந்தகம் விளைவிப்பதே என்பதால் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

No comments: