Wednesday, March 6, 2013

சட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்


சட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்

Commented by nizamhm1944 on Lankamuslim.org
வரவேற்கப்பட வேண்‌டிய விடயம்.
இந்த செய்தி, அந்த போலிஸ் அதிகாரிகள் மட்டும்தானா இந்நாட்டின் சட்டத்தை மீறியிருக்கின்றார்கள்? என்ற கேள்வியை தானாகவே எழுப்புகின்றது.
உண்மையில் பொலிஸார்தான் ஒரு நாட்டின் சட்டம், ஒழுங்கை காப்பதற்காக உரிமையளிக்கப்பட்டவர்கள். அவர்கள் தங்கள் கடமைகளை ஒரு இடைஞ்சலும், இடையூறும், இடையீடுமினறிச் செய்தால், நாடு சுபிட்சப் பாதையில், அமைதியாக, பயங்கள், சந்தேகங்கள் இன்றி வீறு நடை போடும்.
போலிஸாரும் தமக்களிக்கப்பட்ட கடமையினை நிறைவு செய்யும் வகையில் நடக்க வேண்டும், அரசியல் செய்வோரும் பிரஜைகளும், அவர்களைச் சதந்திரமாகச் செயலாற்றி, சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

No comments: