Tuesday, November 19, 2013

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

Commented by nizamhm1944 on:  BERU NEWS -   http://tinyurl.com/m3td86j

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //

மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் ‌கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனித  உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

//  அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //

தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது.  அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,

அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!

அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.  

No comments: