Thursday, November 14, 2013

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள

Commented by nizamhm1944 : http://tinyurl.com/nb3fqz4

Lankamuslim.org

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள


நிம்மதியி்ல்லாத சூழலை, வேண்டுமாயின் முகங் கொடுக்கலாம்.  ஆனால், அரச உயர்மட்டங்களின் மறைமுக ஆதரவுகளுடன் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படும், மதவிரோதச் செயற்பாடுகளைத்தான் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

இது பயங்கரவாதத்தைத் தாண்‌டிய பாதக நிலை. இவ்வகை அச்சுறுத்தலுடன் வாழ்வதென்பதுவே முஸ்லிம்களைத் தமது இருப்பு சம்பந்தமாக மீளாய்வு செயதுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.

முஸ்லிம்கள்  பொறுமை காப்பது என்பதை அவர்களின் இயலாமையாக அரசு கருதுமானால், அது அரசு செய்யும் மிகப் பெரிய முடடாள்தனம் மட்டுமல்ல,  சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கும் நிலையை ஒத்ததாகிவிடும்.  அத்தோடு தேசிய நலனைப் புறந்தள்ளியதுமாகும்.

முஸ்லிம்களது பொறுமை, பெரும்பான்மை புத்த சிங்கள மக்கள் இவற்றுக்கு உடந்தையல்ல, அதனால் தமது எதிர்ப்புகள் எந்த வகையிலும் பௌத்த சிங்கள மக்களை மனம் வருந்தச் செய்திடக் கூடாது என்ற  காரணத்திற்காகவும், தேசிய நலனைக் கொண்டதுமான உயர்வான நோக்கத்தை அடியொற்றியதாகவும், தமது மார்க்க நெறிமுறைகளைத் தழுவியதாகவுமே இருக்கின்றது என்ற உண்மையை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.  

No comments: