Sunday, November 3, 2013

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/jvpjofv

Beru News

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

//  இலங்கையில் இம்மாநாடு நடைபெறுவதன் மூலம் தப்பான அபிப்பிராயங்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கையின் சரியான களநிலவரங்களை கண்டறியக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றியும் இலங்கை பற்றியும் தப்பிப்பிராயங்கொண்ட தலைவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்கான களமாகவும் இம்மாநாடு அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.//

இந்நாட்டைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருப்பதனை மாற்றும் கைங்கரியங்களை அரச செய்ய வேண்டும்.  அது அபிவிருத்திகள் மட்டுமல்ல. 

யுத்தம் முடிந்தது என்னவோ உண்மைதான்! அதனை யாரும் மறுப்பதற்கில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கறையும் இன்னும் தீர்ந்தபாடில்லை.  இந்நிலையில், அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவது இங்குள்ள பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்வதே! 

1990இல் புலிகளால் வடக்கிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்க்ள் நிலை தேய்முகத்திலேயே இருக்கின்றது!

ஆயுதப் போராட்டம் எதனால் தொடங்கியதோ, அந்தப் பிரச்சினை இன்னும் தீர்வைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, மேலும், இறுக்கமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது ! 

அபிவிருத்தி என்ற பெயரில் இனச்சுத்திகரிப்பு ஓர் புறம். புனித பிரதேசம் என்ற பெயரில் மாற்றுமத வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுகின்றது 

மேலும், தெற்கில் சிறுபான்மையினருக்கு தமது மதக் கடமைகளைச் செய்வதற்கும், பள்ளிவாசல், தேவாலயம், கோயில்களை வைத்திருப்பதற்குக் கூட இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

No comments: