Monday, November 11, 2013

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்: பிரபா கணேசன்

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/mc26z53

Lankamuslim.org
One World One Ummah

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்:   பிரபா கணேசன்


கோயில் ஒன்று உடைக்கப்படாமல்  இருப்பதற்கு, அன்றி வேறோரிடம்  பெறுவதற்கு அப்பகுதி தேரரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற தர்க்கம் புதுமையாக இருக்கின்றது. ஆனால் நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலவவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தேரரிடம் போய் சமரசமாக பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம் என நினைத்தது, ஓர் நல்லெண்ணமாக இருக்கலாம். ஆனால், அதுவே ஒரு பிழையான, மனித சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்பதை மறந்தமை ஏனோ!

பிழையான வழிகாட்டல்களே ஆட்சியாளரினால் கூட ஏற்படுததப்படுகின்றது. இதற்கு முன்னர், முஸ்லிம்களின் பள்ளி உடைப்புகளின் போதும், ஹலால் சான்றிதழ் விவகாரத்தின் போதும் அரசால், அன்றி நீதித் துறையினரால் தீர்த்து வைக்கபட வேண்டிய விடயம் புத்த தேரர்களிடம் உத்தரவு பெறுமளவிற்கு தடுமாற்றத்தையும், தடமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலை நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்வுக்கு சில தேரர்களின் ஆசி பெற வேண்டும் என்ற அபாக்ய, ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

தேரர்கள்தான் சிறுபான்மையினரின் இருப்பு, வணக்க வழிபாடுகள், வணக்க ஸ்தலம், உணவு பற்றி எல்லாம் முடிவு எடுப்பதாயின், இந்நாட்டிற்கு ஏன் ஜனாதிபதி,  பாராளுமன்றம், அமைச்சரவை, திணைக்களங்கள், பொலிஸார், நீதிமன்றங்கள், மேலாக யாப்பு போன்றவை ! 

No comments: