Wednesday, October 23, 2013

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது

Commented by nizamhm1944 on :   http://tinyurl.com/qazgtu3

Lankamuslim.org

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது


முஸ்லிம்களுக்கு எதிரா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மதவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதை முதலில் செய்வதுவதுதான், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்  என்ற நல்லெண்ணம் கொண்டோரின் முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். 

அதன் பின்னரே அடுத்த கட்டமாக ஏன் இவ்வாறான அராஜகங்கள் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிந்து, அப்படி பிரச்சினைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். 

அதைவிடுத்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாகி சட்டத்தைத் தனது கையில் எடுத்து, யாப்பைக் காலால் மிதித்துக் காட்டுமிராண்டித் தனமாக அடுத்வர் மீது தாக்குதலை நடத்துவதும், அதையே நியாயப்படுத்துவதாக, அப்படி நடப்பதற்குக் காரணங்கள் இருக்கும் அதனால்தான் இவ்வாறான மிலேச்சத்தனமான காரியங்கள் நடக்கின்றன, எல்லா நாடுகளிலும் இவ்வாறு நடக்கின்றன என்றெல்லாம் கூறி நியாயப்படுத்துவதும், சட்டமும் ஒழுங்கும் நிலவுவதாகக் கூறும் ஒரு நாட்டில் நடைபெறுவதா?  

பொறுப்புள்ள தலைவர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து இவ்வாறான ஊக்குவிக்கும் கருத்துக்கள் வெளிவராது ! இவை அழிவின் தொடக்கமாகவே மக்கள் கருதுகின்றனர்.

No comments: