Wednesday, October 23, 2013

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/m2j9ta9

Lankamuslim.org

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS


// அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது. //

இந்த தேரர் ஒரு ”ஞான சூன்யம்” . தனக்குத் தெரியாத விடயங்களை, பிழையாக விளங்கி வைத்திருப்பவற்றை, தனது காவியுடைக்குள் இருந்து மக்கள்மயப்படுத்துகின்றார்.  அதனால், அப்பாவிச் சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, நாட்டின் அமைதியை, சமாதானத்தை அழிக்கும் வேலைகளைச்  செய்கிறார்.

பொய் சொல்லக் கூடாது என்ற பௌத் தர்மக் கோட்பர்டை மீறுகிறார். முன்னொரு போது, முஸ்லிம் கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்களு்க்கு விற்கப்படும் உணவுப் பண்டங்களில், மூன்று முறை எசசிலைத் துப்பிவிட்டுக் கொடுக்க  வேண்டும் என்று புனித குர்ஆனில் கூறியிருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிக்குமாறு விடுக்கப்பட்ட சவாலை அவரால் நிறைவேற்ற முடியாத பொய்யனாக ஆகிவிட்டார். இவரை இன்னும் மக்கள் பொறுமையாக அங்கீகரிப்பது பௌத்த தர்மத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பது போன்று, ஒவ்வொரு மதமாக தாக்கிவிட்டு, தற்போது அவர் தாம் பின்பற்றும் புத்த தர்மத்தையே தாக்க முனைந்து விட்டார். 

No comments: