Friday, April 19, 2013

இலங்கையில் ‘அல்-கைதா’ இருக்கிறது , இல்லை



Lankamuslim.org
One World One Ummah


இலங்கையில் ‘அல்-கைதா’ இருக்கிறது , இல்லை


ஒரு நாட்டினுள் சட்டபூர்வமாக அத்துமீறி நுழைய வேண்டுமாயின் அதற்கான ஒரு காரணத்தை அமெரிக்கா கூறுவது ஒன்றும் இன்று புதிதல்ல.  

ஈராக்கினுள் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாகக் குற்றஞ் சுமத்தி, அந்நாட் டினுள் புகுந்து, தனது அராஜகங்கள் அனைத்தையும் புரிந்து விட்டு, ஒன்றும் இல்லாத நிலையில் அந்நாடடின் தலைவர் மேல் புதிதாக ஒரு குற்றத்தைச் சுமத்தி அவரைக் ‌கைது செய்து, தனது கையாட்களை வைத்து அவருக்கு தூக்குத் தண்டனை விதித்துக் கொன்றது.

தாங்களே அமெரிக்க இரட்டைக் கோபுரத்தைக் Controlled Demolition முறையில் தகர்த்து, அக்கணமே அல்கைதாதான் அதனைச் செய்தது, அதன் தலைவர் பின்லாடன் ஆப்கனிஸ்தானில் இருப்பதாக்க கூறி அந்நாட்டில் அத்துமீறி நுழைந்து, அப்பாவி மக்களைக் கொன்று குவித்து, அவர்களது வளத்தைக் கொள்ளையடித்து, இறுதியில் பாகிஸ்தானில் அவரைப் பிடித்ததாகக் கதை யளந்து, கொன்று கடலில் போட்டுவிட்டதாக தன் புளுகு மூட்டையை அவிழ்த்து உலகை நம்புங்கள் எனக் கூறுகிறது.

இப்படி ஒவ்வொரு நாடாகத் தனது எண்ணெய் பசியைப் போக்கிக் கொள்ள இரையாக்கிவிட்டு, தற்போது இந்நாட்டுக் கெதிராக மனிஉரிமை மீறல் என்ற சாக்கில் தனது காலைப் பதிப்பதை நோக்காகச் செயல்பட்டுக்கொண்டி ருக்கின்றது. அண்மையில் மின்சாரம் சம்பந்தமாக தலையிட்டு தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்த காரணங்கள் தேடியது. 

அதே வேளை தற்போது இலங்கையில் அல்கைதா என ஒரு புதிய குண்ட‌ையும் போட்டு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது ஆக்கிரப்பை நடத்துவதற்குத் தயாராகிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.   அரசு அப்படி ஒரு இயக்கம் இங்கிருப்பதாகத் தெரியவில்லை என்றதும், தனது எண்ணம்  நிறைவேறா நிலையில், உதவு தொகையில் இருபது வீதத்தைக் குறைத்தது.

ஏற்கனவே பயங்கரவாதத்துக்கு எதிராக உதவுவதாக திருகோணமலையில் தனது காலைப் பதித்துள்ளது. அதற்கு முன்னோடியாக இஸ்ரேலை இங்கு வைத்துள்ளது.  

No comments: