Thursday, April 18, 2013

இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு. அதன் பூர்வீக சமயம் இந்து சமயம்: யோகேஸ்வரன்


Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah  

இலங்கை நாடு பூர்வீக இந்து நாடு.                                                     அதன் பூர்வீக சமயம்  இந்து சமயம்: யோகேஸ்வரன்




முதல் மனிதனான ஆதம் அவர்களில் இருந்தே ஏகதெய்வக் கொள்கை தோன்றியுள்ளது. அவர் செய்த சிறு பிழை, இறை சந்திதானத்திலிருந்து அவரையும் மனைவியையும் அப்புறப்படுத்தியுள்ளது.. அப்படி இறக்கப்படட இடம் ஆதம் மலை என அழைக்கப்படுகிறது.

பின்னர், நோவா என்றழைக்கப்படும் நூஹ் நபி, மோஸே என்ற மூஸா நபி, ஏபிரஹாம் என்றழைக்கப்படும் இபுறாஹீம் நபி, ‌தாவீது என்ற தாவூது, லூர்து என்ற லூத் நபி, ஏபிரஹாம் அவர்களின் பிள்ளைகளான இஸ்மயேல் என்ற இஸ்மாயில் நபி, ஐசேக் என்ற இஸ்ஹாக் நபி, ஜேக்கப் என்ற யஹ்கூப் நபி, கன்னி மேரியின் புதல்வரான யேசு நாதர் என்ற ஈஸா நபி, இறுதியாக முஹம்மது நபி என பட்டியல் வளர்ந்து வந்திருக்கின்றன.

மேற்கண்டவர்கள் அனைவரும் ஏக தெய்வக் கொள்கையைப் போதித்தவர்களே.  மதங்கள் என்ற பெயரில் எடுத்துக் கொண்டால், பிரதான மதங்களான தாவீது அவர்களின் ஸபூர் என்ற வேதமும், மோஸே அவர்களின் டோரா என்ற தௌறாத் என்ற வேதமும், யேசு அவர்களின் கிறிஸ்தவம் என அழைக்கப்படும் இஞ்சீல் வேதங்களுமாகும்.  முன்னையது தனக்குப் பின்னர் வரவுள்ள வேதத்தையும், அதனைக் கொணர்பவரையும், அப்படிப் பிந்தி வந்த வேதம் தனக்கு முன்னர் வந்த வேததத்தை மெய்ப்படுத்துவது என்ற அடிப்படையில் இவைகள் ஒரு சங்கிலி தொடராக வந்துள்ளமை தெரிகின்றது.

இடையில் இந்தியாவில் பரம்பொருள் பற்றிப் பேசும் யசூர், றிக், அதர்வன, சாம போன்ற வேதங்களும் வந்தே இருக்கின்றன. ஏபிரஹாமின்  சந்ததிகளில் இருந்து பிரஹ்மணியம் தோன்றியதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இங்கேயே சித்தார்த்தரின் புத்த தர்மமும் தோன்றி இருக்கின்றது. அங்கிருந்து இலங்கைக்கும் வந்துள்ளது.

ஆதம் மலையில் காணப்படும் மனிதனுடைய பெரிய காலடிச்சுவடு, இலங்கையில் மனித வாழ்வு தொடங்கியதை வெளிப்படுத்துகின்றது.  அந்தப் பெருமை இந்த நாட்டுக்கு உரியது.

ஆதி மனிதர்கள்,  நம்மைப் போன்றில்லாமல் இராட்சஷ உருவங்களாகவே இருந்துள்ளனர் என்பதை,  அம்மலையில் காணப்படும் இராட்சஷ காலடிகள் உணர்த்துகின்றன. இவரின் பரம்பரை இந்நாட்டில் தொடர்ந்துள்ளதை, இந்நாட்டின் சில இடங்களில் காணப்படும் நாற்பது முழ நீளமான - 60அடி- மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.  இவை மன்னார், தலைமன்னார், கீரி, திருகோணமலை, சிலாபம், குதிரை மலை போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன.

இவர்கள் அனைவரும் குர்ஆன் கூறும் “அவ்லியா“  க்கள் என்ற “இறைநேசர்“ களாகவே காணப்படுகின்றனர். இவர்களது பெயர்கள் அதிகமாக காரணப் பெயர்களாகவே காணப்படுகின்றன.  இதிலிருந்து உணரப்படுவது, இவர்கள் ஏகதெய்வ கொள்கையைப் பின்பற்றியவர்கள் என்பது.  இன்றேல், “அவ்லியா“க்கள் என்ற “இறைநேசர் “என்ற பட்டம் அவர்களுக் குக் கிடைத்திருக்க நியாயமில்லை. இப்பட்டம், இறைவனால் பதவி உயர்த்தப்பட்ட மனிதப் புனிதர்களுக்கு,  இறைவனாலேயே கொடுக்கப்படுவது. அல்லாஹ் பதவிகளை உயர்த்துபவன் எனத் தன்னைக் கூறுகிறான்.

இந்த நாற்பது முழ மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் இதுகால வரை  முஸ்லிம்களாலேயே அவ்லியாக்கள் எனக் கொண்டாடப்படுகின்றன. இவர்களின் அடக்க ஸ்தலங்களை வேறு மதத்தவர்கள் உரிமை கோரவும் இல்லை.  இஸ்லாம் அறிமுகமாக முன்பு இறைவனால் இறக்கி அருளப்பட்ட வேறு மதங்களைப் பின்பற்றியவர்களின் சமாதிகளாகவே இவை இருக்க வேண்டும்.

ஆயினும், இவர்கள் சார்ந்த மற்றைய மதங்கள் மனித கையாடலுக்கு உட்பட்டமையால் இவர்களை உரிமை கொண்டாட முடியாமற் போயிருக்கலாம். அந்த வகையில் முன்னை மதங்களைக் கொண்ட, அவற்றை மெய்ப்படுதத வந்த இறுதி மதமான இஸ்லாத்தை ஏற்ற,  இங்கு வாழ்ந்தவர்கள், அவர்களை அவ்லியாக்கள் என்று கொண்டாடி வருவதிலிருந்து அப்பெரியார்களின் பரம்பரையினராகவே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.

கலாநிதி சு.வித்தியானந்தன், “இஸ்லாமிய தமிழ் இலக்கியக் கட்டுரைக் கோவை” யில்  தனது ”இஸ்லாமிய கலையும் பண்பும்” என்ற கட்டுரையில், ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், கடற்கரைப் பட்டினமாகிய கன்ரன் வரை இஸ்லாமியரின் கப்பல்கள் சென்றன.  ஈழத்துத் துறைமுகங்களுக்கும், மேற்கு இந்தியத் துறைமுகங்களுக்கும் இஸ்லாமிய கப்பல்கள் அடிக்கடி வந்து கொண்டிருந்தன“ எனக் கூறியுள்ளார். மேலும், கிபி 673இல் முஸ்லிம்களால்
minaret என அரபு மொழியில் அழைக்கப்படும், மினாரா என்ற நெடிய அழகிய மாட ஸ்தூபிகள் அமைக்கப்பட்டன எனவும்
கூறியுள்ளார். அவைகளில் ஒன்று  இன்றும் மன்னாரில் வடகடல் கரையில் காணப்படுகின்றது.

இதன்படி இஸ்லாம் தோன்றிப் பூரணமாகிய கிபி 634  காலத்திலிருந்து நாற்பது வருடங்களுக்கு உள்ளேயே அராபிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வருகை தந்து இங்குள்ள பெண்களை மணந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலோர் தமிழ் மொழி பேசுவோராகவே இருந்திருக்க வேண்டும். அதனாலேயே அவர்களின் தொடர்பாடலுக்கு ஒரு புதிய மொழியின் தேவையை உணர்ந்து, “அரபுத் தமிழ்“ என்ற ‌புதிய மொழியை Transliteration என்ற அடிப்படை யில் அமைத்துள்ளனர்.

அரபு மொழியினாலான குர்ஆன் என்ற வேத நூல் மூலம் அரபைத் தெரிந்திருந்த இங்கு வாழ்ந்து இஸ்லாத்தை ஏற்ற புதிய முஸ்லிம்களுக்கு இது இலகுவாக இருந்துள்ளது. அத்தோடு அரபியர்களும் தமது தமிழ் பேசும் மனைவியர் மூலம் தெரிந்து வைத்திருந்த பேச்சுத் தமிழை அரபிய லிபியில் எழுதியிருக்கின்றனர். தெற்கிற்குச் சென்ற சிலர் சிங்களம் பேசும் பெண்களை மணந்திருப்பர்.

இஸ்லாம் இறுதி மார்க்கமாக, இதற்கு முன்னர் இறைவனால் இறக்கி அருளப்பட்ட அனைத்து மதங்களையும் மெய்ப் படுத்துவதற்காக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டது என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொள்வோர், இதில் உள்ள உண்மைத் தன்மையை இலகுவாக அறிந்து கொள்ள முடியும். இப்படி உணர்ந்து, ஏற்றுக் கொண்டதன் காரணமாகவே அந்த அறுபதி அடி நீள மனிதர்களின் வணக்க ஸ்தலங்களை, முஸ்லிம்கள் இறைநேசர்கள் எனக் கொண்டாடி வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் இந்த அறுபது அடி நீள மனிதரின் வழித் தோன்றல்களே! அந்த வகையில் அவர்களது வரலாறு ஆதி மனிதனில் இருந்து தொடர்கின்றது. அதற்குக் காரணமாயமைந்ததும், உரிமையைக் கொடுத்ததும் ஏகதெய்வ வணக்க வழிபாடே!

அதர்வன வேதம்,  முகம்மது நபியவர்களின் வ‌ரவை முன்னறிவிப்புச் செய்ததில் இருந்து அதுவும் இறைவனால் இறக்கியருளப்பட்டதாகவே தெரிகின்றது.

வியாசரின் பவிஷ்ய புராணம் கூட  முகம்மது நபியவர்களின் வரவை முன்னறிவிப்புச் செய்ததி்ல  இருந்து அவரும் ஏக தெய்வ கொள்கையைப் பினபற்றியமை புரிகிறது. இன்னும் இந்துக்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் பத்தாவதும் இறுதி அவதாரமுமாகிய ” கல்கி “,  இஸ்லாத்தை உலகுக்கு அறிமுகப்படுத்திய பாலைவனவாசியான முகம்மது தான் என்பதை, பகவத் கீதையில் காணப்படும் குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டு இந்து சமய ஆய்வாளர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதிலிருந்து விளங்குவது, மனிதர்களின் புரிதலில் ஏற்பட்ட குழப்பமும், ஏற்றுக்கொள்ள விருப்பமில்லா மனநிலையும், அகம்பாவமும், மனோஇச்சையும்,  இனறு மனிதர்களை வெவ்வேறாகப் பிரிந்து தத்தமது மார்க்கம் பற்றிய் புகழைப் பாடி வேற்றுமையை வளர்க்க வைத்துள்ளது.

வேற்றுமையை வளர்ப்பதை தமது சீவனோபாயத்துக்கான இலகு மார்ரக்கமாகச் சிலர் பயன்படுத்தி வருகின்றனர்.  இறைவன் பற்றிய  உண்மைகளை  அகஸ்தியர், சிவவாக்கியார், திருமூலர், ஔவையார் உட்பட பலர் பேசிச் சென்றுள்ளனர்.

திருநாவுக்கரசர் கூட இறைவனைப் பற்றி மிகத் தெளிவாக, ”அவனருளே கண்ணாகக் காணினல்லால், இப்படியான, இந்நிறத்தான், இவவ்ண்ணததான், இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொனாதே!  இதுவே அனைத்து மதங்களினதும்
கோட்பாடுமாகும்.

பார்வைகள் தன்னை வந்தடைவதில்லை, எல்லோருடைய பார்வைகளையும் தான் அடைகின்றேன் என அல்லாஹ் தன் அருள்மறை குர்ஆனில் கூறியிருப்பதும் இதுவே! உய்த்துணர்வோர் அறிந்து கொள்வர்.

மேலும், ஏகதெய்வ வணக்க வழிபாட்டைக் கொண்டவர்களே இந்நாட்டின் ஆதிக்குடிகள் என்பதை நிரூபிப்பதாகவே நாற்பது முழ நீள மனிதர்களின் அடக்க ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

No comments: