Saturday, April 13, 2013

பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான கூட்டத்தில் அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது: காதர்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

பாகிஸ்தான் வெளிவிவகார செயலாளருடனான கூட்டத்தில் அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது: காதர்

கூட்டத்துக்கு அழைக்கப்படாமலே அவதூறு கற்பிக்க முனையும் நீங்கள், கூட்டததிற்குப் போயிருந்தால் என்னென் கற்பனைக் குதிரைகளை ஓடவிட்டு, எரிகிற வீட்டில் பொறுக்கியது இலாபம் என உங்கள் பதவியை உயர்த்திக் கொண்டிருப்பீர்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

 குற்றவாளிகளை இனம் காட்டுவதற்காக அல்லாஹ் எப்போதும் அவர்களிலே ஒரு தடயத்தை ஏற்படுத்தி விடுகிறான். அப்படியான தடயம்தான் தாங்கள், யாரையோ குற்றஞ்சாட்டப் போய் அந்த வலையிலே நீங்கள் சிக்கிக்கொண்டுள்ளது.

// இதற்கு நான் அழைக்கப்பட்டிருக்கவில்லை.//

பல காரணங்களால் ஒருவரைப் புறக்கணிப்பது மரபு.  அவற்றுள் முக்கியமான இரு வகைகளில், ஒன்று, அநியாயக்காரர்களால் நடத்தப்படும் நிகழ்வில், நியாயமாகச்செயல்படும் ஒருவரது எதிர்ப்புக்களைத் தவிர்ப்பதற்காக அவரைக் கூப்பிடாமல் விடுவது,

இரண்டாவது, நியாயவாதிகளின் சபையில அல்லது  நல்லதை, உண்மையைப்  பேச வேண்டிய சபையில், சுயநலத்துக்காக உண்மைக்கு மாறானவைகளைப் பேசிக் காரியத்தைக் கெடுப்பவர்களை தவிர்ப்பதற்காக விடடுவிடுவது.

இதில், எந்த வகைத்துள் தாங்கள் அடங்குவீர்கள் எனபதை உங்கள் மனசாட்சி சொல்லும். இதற்கு முன்னர் தாங்கள் இம்மாதிரியான விடயங்களில் வெளியிட்ட கருத்துக்கள் விளங்க வைக்கும்

// அங்கு அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது //   தாங்கள் இப்படிப் பேசியதன் மூலம், உங்களை அறியாமலேயே அரசைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றியுள்ளீர்கள். உங்கள் கூற்றான “அரசுக்கு விரோதமாகப் பேசப்பட்டுள்ளது” எ்னற வசனம் அரசு குற்றம் செய்துள்ளதாக மறைமுகமாகக் கூறுகிறதா? முஸ்லிம்களுக் கெதிராக இந்நாட்டில் முன்னெடுக்கபட்ட நிகழ்வுகள் பகிரங்கமாக மேளதாளத்துடன் அரங்கேற்றப்பட்டவை என்பதால், குற்றம் செய்தோர் யார் என்பதை அரசு தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை உங்கள் கருத்து வெளிப்படுத்துகின்றதா?

மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், அரசுக்கு எதிராகப் பேசுவதற்கு என்ன இருக்கிறது? என உங்‌களைக் கேட்கத் தவறிவிட்டாதாகவே நான் கருதுகிறேன். அப்படிக் கேட்டிருந்தால் உங்கள் வேஷம் களைந்திருக்குமா?

// ஆளும் கட்சியில் 16 பேர் இருக்க ஒரு சிலரை அழைப்பதேன் //  இந்தக் கேள்வி கேட்கப்பட வேண்டியவர்கள், அழைப்பாளர், அல்லது அமைப்பாளர், ஒழுங்குபடுத்தியவர்கள். அதைவிடுத்து, உங்கள் கேள்வியை பாராளுமன்றில், அதுவும் ஜனாதிபதியிடம் கேட்டதிலிருந்து நீங்கள் யாரென்று வெளிப்படுத்தி விட்டீர்கள்.  நீங்கள் கஃபத்துல்லாவில் கூட உங்கள் வேட்கையை தீர்த்துக் கொள்பவராயிற்றே என்பதை ஏற்கனவே நீங்களே வெளிப்படுத்திய செய்திகளும் உண்டே!

No comments: