Sunday, April 14, 2013

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இந்தக் கொடுமையைக் கேட்டீர்களா?


அறிவீனரைப் புறக்கணித்து விடுவீராக என்பது குர்ஆனிய அறிவுரை, அறவுரை. ஆனால் திட்மிட்டு ஒரு மதத்துக்கு எதிராக சட்டமியற்றி, சர்வாதிகாரமாக, அவர்களது புதிய மதத்தைப் பின்பற்றும்படி கேட்பது அநியாயம், மன்னிக்க முடியாத குற்றம். அவர்கள் வேண்டுமானால் ஒரு புதிய மதத்தையே உருவாக்கி காட்டுமிராண்டிகளாக வாழட்டும். ஆனால், தமது பலத்தால், தமது காட்டுமிராண்டிச் சட்டங்களை மக்களுக்கு்ப் புகுத்தக் கூடாது. அடுத்த மதச் சட்டங்களை நீக்கும்படி கூற முடியாது. 

ஐக்கிய நாடுகள் சபையில்
இருக்க வேண்டியது ஐக்கியமே!
இல்லாமல் அங்கு
இருப்பதும் ஐக்கியமே !

எப்போது மேற்கண்ட சபையில் ஐக்கியம் இல்லை என்பது நிரூபண மாகின்றதோ, அப்போதே அது தனது இயங்கும் தகுதியை இழந்துவிட்டது என்பதே உண்மை! அந்த வகையில் அச்சபை ஓர் சட்ட விரோதமாக நடத்தப்ப்ட்டுக் கொண்டிருக்கும் சபையே!

ஐக்கியம் இருந்திருந்தால், தமது சட்டங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டியதில்லை.  ஆனால் அங்கு ஒரு சட்டமும் வாக்களிப்பின்றி நடைபெறுகிறதா என்பது தெரியவில்லை. அதற்கான செயலாளர் நாயகம்கூட போட்டியின் அடிப்படையில் நடைபெறுவதே போதும் அது “ஐக்கியம்“ என்ற சொல்லைப் பாவிக்கத் தகுதியற்றது என்பது. அது ஏமாற்றிக் கொணடிருக்கும் குற்றமும் கூட. 

சில வேளை அவர்கள், தாம் தமது யாப்பின்படி நடந்து வருகின்றோம் எனக் கூறுவார்களாயின், அவர்கள் யாப்பியற்றலிலேயே பிழையை விட்டு,  பெயருக்கு மாறான யாப்பை உருவாக்கியுள்ளனர் என்பதே. உண்மை. ஆதலால், பிழையான ஒரு சட்ட விரோத சபை எடுக்கும் தீர்மானங்களை உலகம் பின்பற்ற வேணடும் எ்னபதல்ல. 

அவர்களது முட்டாள் தனத்தையும், அராஜகத்தையும், அத்துமீறலையும் வெளிப்படுத்துகிறது இச்சட்டவாக்கத்தில் உள்ள சில: 

 7. திருமணத்தைப் பொறுத்தவரை, பலதார மணம், ‘இத்தா’ மேற்கொள்ளல், ‘வலீ’யை ஏற்படுத்தல், ‘மஹ்ர்’ அளித்தல், ஆண் குடும்பத்தின் செலவுகளை ஏற்றல் ஆகிய நடைமுறைகளை அகற்ற வேண்டும்; ஒரு முஸ்லிம் பெண் முஸ்லிம் அல்லாத ஆணை மணமுடிக்க அனுமதிக்க வேண்டும்.

8. மணவிலக்கு (தலாக்) அளிக்கும் அதிகாரத்தைக் கணவனிடமிருந்து பறித்து, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும். ‘தலாக்’ ஆனபின் எல்லா சொத்து களையும் இருவரிடையே பங்கிட வேண்டும்.

மற்றைய சட்டங்களும், இயற்கையையும், இறைநியதியையும், மனித வாழ்வையும் சீரழிக்கும் சட்டங்களாக இருந்ததாலும்,   மேற்கண்ட இரு சட்டங் களும் ஒரு மதத்துக்கு எதிரான தன்மையைக் கொண்டுள்ளதுடன், தனது சர்வாதிகாரத் தன்மையை வெளிப்படுத்தி, குர்ஆனிய சட்டத்தை மாற்றும்படி கூறுகிறது.  இது அவர்களின் அயோக்கியத் தனத்தை வெளிப் படுத்துகிறது. 

ஆதலால், இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் உடனடியாக இந்த ஐக்கியமற்ற சபையைவிட்டு விலக வேண்டும். அதற்கு அளிக்கும் நிதியை உடனடியாக நிறுத்த வேண்டும். அவர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடணம் செய்ய வேண்டும். 

குறிப்பு: இதுவரை இஸ்லாமிய நாடுகளைக் குறிவைத்து, பொய்க் காரணங் களைக் கூறி, ஒவ்வொன்றாக அழித்து வெற்றி கண்ட மமதையில், தற்போது இஸ்லாத்தையே அளிக்கும் வகையில், குர்ஆனிய சட்டத்தையே மாற்ற வேண்டும் எனக் கேட்கின்றது. இது அதன் அழிவை பிரகடணப்படுததுகின்றது. அல்லாஹ்வை யாரும் இயலாமல் ஆக்க முடியாது. ஒரு சத்தமே ஐநா சபையையே இருந்த இடம் தெரியாது அழித்துவிடும். அதற்கு முன்னர் அவர்கள் உடனடியாக இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். அல்லாஹ்விடம் மன்னிப்பும் கோர வேண்டும்.

No comments: