Saturday, December 28, 2013

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/n78e6k6

Tamil Circle

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

பாவம் தமிழக மக்கள், இலங்கைத் தமிழ் மக்களின் பெயரை வைத்தே பிழைப்பு நடத்தும் ஈனர்களை இனம் கண்டு கொள்ள முடியாது,அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்களே என நினைக்கும் போது, பாவம் என்பதைத் தவிர வேறு தெரியவில்லை.

அண்மையில் ஒரு கார்ட்டூன் பார்த்தேன். அதில் (தமிழ் நாட்டைக் குறிப்பதற்காக) தெற்கில் உள்ள தமிழர்கள பாதையில் மலம் கழிக்கிறார்கள் என்றும், முதலில் அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக் கொடுக்கும் வேலையைப் பார்க்கவும் என இலங்கை  ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் சிலர் அரசியல் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு  இலங்கைத் தமிழ் மக்கள் பற்றிப் பேசும் யோக்கியதையைக் கொடுத்தவர்கள் யார்!  இலங்கையில் கிழக்கு மாகாண மக்கள் அரசை ஆதரித்து,  ஆடசியை அரசிடம் கொடுத்துள்ளது.

இலங்கையின் வடக்கில் தமிழ் கூடடணி ஒன்று ஆட்சி பீடமேறியுள்ளது.  அதன் தலைமையை மிகச் சிறந்த, நேர்மையான, நீதித்துறை சார்ந்த ஒருவர் அலங்ரித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் அவ‌ரோ, அவர்  சார்ந்த கட்சியோ தமிழ் ஈழம் பற்றிப் பேசுவது கூட இல்லை. அது அவர்களது கொள்கையுமல்ல. அப்படி இருக்கும் நிலையில், சீ.....மான்கள்  போன்ற கழிவுகள் அழையா விருந்தாளிகளாக, அடுத்த நாட்டுக்குள் மூக்கை நுழைத்து, ஏன் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றன! இதனைத் தட்டிக் கேட்க வேண்டியது, தமிழக மக்களே! 

No comments: