Thursday, December 26, 2013

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/opew579

Lankamuslim.org

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது. குற்றச் செயல்கள்நடைபெறும் பாங்கையும், அதன் எதிர் விளைவுகளையும், உண்மையாக ஆழ்நது சிந்தித்துப் பார்க்கின், எல்லாம் திட்மிட்டமிட்டவாறே நடைபெற்று வருவதும், அதற்காக, நமது கைவிரல்களே, நமது கண்களைக் குத்திக் குருடாக்கப்படுவதிலும் இருந்து தெரியவரும். ( நமது கைவிரல்கள் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளே)

இங்கு குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டியவர்கள், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை காணப்படும் போது, அனைவரும் தமது நிலையை அஞ்சி வாளாவிருக்கின்றனர். வழமையாக நடப்பதால் குற்றச் செயல்கள் பற்றி யாரும் பெரிதக அலட்டிக் கொள்வதில்லை என்பதைவிடப் பெரிய காரணம். மேற்கண்ட பயமே!

குற்றவாளிகள் இனங்காணப்பட்டமையே அந்தப் பயத்தை உருவாக்கி அனைவரையும் மௌனிகளாக்கி விட்டுள்ளது எ்னபதும் இந்நிலை, புலிகள் யுகத்திற்கு நாடு மீண்டுள்ளதை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதையும் கட்டியங் கூறுகின்றது.

கருததுக் கணிப்பொன்றில், இந்நாடு ஊழல் கூடிய நாடு என்ற வரிசையில் மிகத்துரித நடைபோடுவது, அனைத்தையும் எடைபோடப் போதுமானது.

இந்நாட்டின் யாப்பின் சில ஷரத்துக்கள் பொல்லாதவர்களின் கைகளினால் சொல்லாக் காசாக்கப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றது.

No comments: