Thursday, January 17, 2013

Short Message Service 


எஸ்.எம்.எஸ். (Short Message Service) எனப்படும்
குறுந்தகவல் சேவைக்கு 20 வயது நிறைவடைந்துள்ளது..
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதிதான் முதல்
எஸ்எம்எஸ் பிறந்தது.  இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர்
நீல் பாப்வொர்த் (22) என்பவர் தனது ஆர்பிடெல் 901
செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம்
மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.
ஆனால் வர்த்தக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம்
ஆண்டு ஸ்வீடனில் தொடங்கியது. அதன் பிறகு அதே
ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ்.
சேவை துவங்கியது.
தொடர்ந்து 1994ம் ஆண்டு எஸ்.எம்.எஸ். சேவையூடன்
கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம்
அறிமுகப்படுத்தியது.
தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 இலட்சத்திற்கும்
அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இன்டர்நெட்
வசதியூடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு
எஸ்.எம்.எஸ். அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.
பலர் பிளாக்பெர்ரி மெசஞ்சர்இ வாட்ஸ்ஆப் மற்றும் கூகுள்
டாக்கை பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர்.
ஆனால் கல்லூரி மாணவ-மாணவிகள் எஸ்.எம்.எஸ்.
சேவையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

From: Vaanavil

No comments: